search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் பிறந்தநாளில் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள்
    X



    காமராஜர் பிறந்தநாளில் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள்

    • காமராஜர் பிறந்தநாளில் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை மதுரை மேயர் இந்திராணி வழங்கினார்.
    • அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    மதுரை

    பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா, தெப்பக்குளம் காமராஜர் அறநிலையத்தில், நடந்தது.

    அறநிலையத்தின் தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் மற்றும் பொறுப்பு செயலாளர் பி.தர்மராஜ், துணைத்தலைவர் சி.பாஸ்கரன், துணைச்செயலாளர் பி.செந்தில்குமார் விடுதிக்குழு செயலாளர் பி.குமார் ஆகியோர் பேசினர்.

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் 1500 இலவ சேலைகளை ஏழை பெண்களுக்கு வழங்கினார். மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் எம்.முகேஷ் சர்மா, அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக் குழு தலைவர் மு.சிதம்பர பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×