search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    300 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது
    X

    கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

    300 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது

    • மேலப்படாகை கடைவீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மேலப்படாகை கடைவீதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.

    இதில் சுமார் 300 கிலோ கஞ்சா பிடிப்பட்டது.

    இது தொடர்பாக 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கீழையூர் போலீசார் வீர முரசு, சசிக்குமார், சுதர்சன், விக்னேஷ், வைரகுமார், முருகானந்தம், ஹரிகிருஷ்ணன், கோபிநாதன் உள்பட 9 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×