என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள திரவுபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்திருந்தனர்.
    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உடனடியாக மரைக்கான் சாவடி முதல் சியாத்தமங்கை வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அருகே சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது. நாகூரில் இருந்து பனங்குடி, மரைக்கான்சாவடி, திட்டச்சேரி, நடுக்கடை சியாத்தமங்கை திருமருகல் வழியாக சன்னாநல்லூர் வரை பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்க ங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்திருந்தனர்,இதை விசாரித்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உடனடியாக மரைக்கான் சாவடி முதல் சியாத்தமங்கை வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத் துறையின் உதவி இயக்குனர் அய்யாதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு இப்பணியை தொடங்கி வைத்தனர்.

    • செல்வகுமார் என்பவருக்கும் அவரது மனைவி சுமதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
    • மனவேதனையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லூலி திருவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவி சுமதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த செல்வகுமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு முழுவதும் மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ), ஒரு மூட்டை டி.ஏ.பி (50 கிலோ) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச நிலவரம்பு ஒரு ஏக்கர் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக குறுவை தொகுப்பு திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழுவதும் மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ), ஒரு மூட்டை டி ஏ.பி (50 கிலோ) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க ப்பட உள்ளது.

    இத்திட்ட த்தின்மூலம் ஒரு விவசா யிக்கு வழங்க ப்படும் அதிக ப்பட்ச நில வரம்பு ஒரு ஏக்கர் ஆகும்.இதில் சிறு குறு விவசா யிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார்எண், சிட்டா அட ங்கல் மற்றும் போ ட்டோ ஆகிய விவர ங்க ளுடன் அவ ரவர் கிரா மங்க ளுக்கான உதவி வேளா ண்மை அலுவ லரை அணுகி உர மானியத்தி ற்கான பரிந்து ரை விண்ணப்ப த்தினை பெற்று க்கொ ள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் நடந்த கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்தது.
    • இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் ராமசாமி, பாலகுரு, முத்துகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் வழங்கி தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார். இதில் ராமசாமி வயது மூப்பின் காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார்.

    மேலும் இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    • வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
    • ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பின்னையடி மாரியம்மன் கோவிலில் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியம் பூசாரிகள் பேரமைப்பு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றிய பொருளாளர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பூசாரிகள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

    ஒன்றிய துணைத்தலைவர் சிங்காரவேல், நகர தலைவர் ரத்தினம், நகரச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் செய்தி தொடர்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழிக்க பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.10,000 வழங்கிட வேண்டும். வருகிற 3-ம் தேதி வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நமது பகுதியில் இருந்து அதிக நபர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் ‌இயக்க வேண்டும்.
    • கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    நாகப்பட்டனம்:

    கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வணிக சங்கங்கள், சேவை சங்கங்கள், லயன்ஸ் கிளப், நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம், நாகை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம், நாகை இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம், மீனவ கிராம பஞ்சாயத்தாரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    உடனடியாக காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் ‌இயக்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கோஷங்கள் எழுப்பினர்.

    • தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி பிச்சயன் முன்னிலை வகித்தார். தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அனைவரையும் வரவேற்றார். இதில் தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் கதிரவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி, 3 லட்சம் பணம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20 ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (எ) வேல்ராஜ் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவருடைய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 39 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் விலை உயர்ந்த எல்.இ.டி டி.வி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இந்நிலையில் கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி, நாகை செக்கடி தெருவை சேர்ந்த கொறசேகர், நாகை சிவன் தெற்கு வீதியை சேர்ந்த தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்ட 4பேர் கொண்ட போலீசார் அதிரடியாக கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகப்பன்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கும் தலா 20ஆயிரம் அபராதம் மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் தொட ர்புடைய கொறசேகர் என்பவர் மீது அண்மை யில் குண்டாஸ் சட்டம் பாய்ந்திருப்பதும் குறிப்பி டத்தக்கது.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.
    • மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 7 முனை பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரச்சாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு துவங்கியது.

    மாவட்ட துணைத் தலைவர் கே.இராஜூ தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் வி.எஸ்.ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியதாக ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட நிர்வாகிகள் எம்.மேகநாதன், எஸ்.துர்க்காம்பிகா, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் வி.சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் து.இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் வேல் கண்ணன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி எம்.ஜி.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் ப.அருள்விழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார்.

    • நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சன்மார்க்கம். இவரின் மூத்த மகள் ஷகிலாவிற்கும், நாகை அடுத்துள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த குமார் -விஜயா இவர்களின் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஜூன் 17ம் தேதி திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரவணன் தொடர்ந்து அலட்சியமாக இருந்துள்ளார். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிச்சயதார்த்த விழா நடத்தி, அவசர தேவைக்காக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கிய பெண்ணின் குடும்பத்தாரை ஏமாற்றி வரும் சரவணன் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

    புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் பெண் சகிலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நிச்சயம் முடிந்து திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நிச்சயம் முடிந்த பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் தலைமறைவான நபரை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.
    • அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலக வளாகத்தில் 76 வகையான மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது

    விழாவில் கோட்டாட்சியர்பெளலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் வேதையன் வரவேற்றார்.விழாவில் அலுவலக வளாகத்தில் வல்லாரை, கருசலங்கண்ணி சித்தரத்தை, மலைவேம்பு, மின்னல் கீரை, நித்திய கல்யாணிமருதோன்றி உட்பட 76 வகையான மூலிகை செடிகளையும், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நட்டும், மூலிகைகளின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதிகாரிகள், பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகளையும் வழங்கினார்

    பின்பு 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற நகல், குடும்ப அட்டையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கமலா அன்பழகன், ஊராட்சி ஒன்றியஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரமன்றதலைவர் புகழேந்தி, மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார்மூ லிகை பண்ணையாளர் புஷ்பவனம்ஹரிகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.விழா முடிவில்துணை தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.

    வழக்கமாக தாசில்தார் அலுவலகங்களில் பெயரளவிற்கு புங்கை உள்பட ஒரு சில மரங்கள் நடப்படுவது வழக்கம் மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரும்போது சிறு செடிகளை நடுவார்கள் அதன் பிறகு அதையாரும் கண்டுகொள்ளமாட்டர்கள் மீண்டும் அதிகாரிகள் வரும்போது அதே இடத்தில் மீண்டும் மரம் நடும் விழா நடைபெறுவது அனைத்து அலுவலகத்திலும் நடைபெறுவது வழக்கம்

    ஆனால் அதற்கு நேர்மாறாக இவ் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர் வேதையன் தாசில்தார் அலுவலகம் முழுவதும் மூலிகை செடி நாட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார்

    இந்த மூலிகை தோட்டத்தை அலுவலகம் வரும் பொதுமக்கள் பார்த்து வியந்து பாராட்டி செல்கின்றனர் தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் முன்மாதிரியாக மூலிகை தோட்டம் அமைத்த துணை வட்டாட்சியர் வேதையனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டினார்.

    மேலும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் மூலிகை செடியின் பயன்பாட்டை அறிந்து அதனை தங்களின் வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு செயல்பட துணை வட்டாட்சியரின் செயலை ஒவ்வொரு அலுவலகத்தில் பின்பற்றினால் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சென்றால்நோயற்ற வாழ்வை நோக்கிச் .தமிழகம்செல்லும் என்பதில் ஆச்சரியமில்லை.

    ×