என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த சிறப்பு முகாம்
    X

    போலகம் ஊராட்சியில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து கருத்தரங்கம்

    வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த சிறப்பு முகாம்

    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார்.

    திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்து துறையில் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கிக் பேசினர்.

    இதில் 20 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×