search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை அமைக்கும் பணிக்கு பூஜை
    X

    சாலை அமைக்கும் பணிக்கு பூஜை போடப்பட்டது.

    சாலை அமைக்கும் பணிக்கு பூஜை

    • பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்திருந்தனர்.
    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உடனடியாக மரைக்கான் சாவடி முதல் சியாத்தமங்கை வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அருகே சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது. நாகூரில் இருந்து பனங்குடி, மரைக்கான்சாவடி, திட்டச்சேரி, நடுக்கடை சியாத்தமங்கை திருமருகல் வழியாக சன்னாநல்லூர் வரை பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்க ங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்திருந்தனர்,இதை விசாரித்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உடனடியாக மரைக்கான் சாவடி முதல் சியாத்தமங்கை வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத் துறையின் உதவி இயக்குனர் அய்யாதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு இப்பணியை தொடங்கி வைத்தனர்.

    Next Story
    ×