search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cultivation of Kuruvai"

    • விவசாயிகளுக்கு முழுவதும் மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ), ஒரு மூட்டை டி.ஏ.பி (50 கிலோ) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச நிலவரம்பு ஒரு ஏக்கர் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக குறுவை தொகுப்பு திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழுவதும் மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ), ஒரு மூட்டை டி ஏ.பி (50 கிலோ) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க ப்பட உள்ளது.

    இத்திட்ட த்தின்மூலம் ஒரு விவசா யிக்கு வழங்க ப்படும் அதிக ப்பட்ச நில வரம்பு ஒரு ஏக்கர் ஆகும்.இதில் சிறு குறு விவசா யிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார்எண், சிட்டா அட ங்கல் மற்றும் போ ட்டோ ஆகிய விவர ங்க ளுடன் அவ ரவர் கிரா மங்க ளுக்கான உதவி வேளா ண்மை அலுவ லரை அணுகி உர மானியத்தி ற்கான பரிந்து ரை விண்ணப்ப த்தினை பெற்று க்கொ ள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    ×