search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும்  பணிகளை தடுத்து நிறுத்திய பெண்கள்
    X

    பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் பணிகளை தடுத்து நிறுத்திய பெண்கள்

    • பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
    • இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 200 வீடுகளில் விதிகளுக்கு புறம்பாக தரை மட்ட தொட்டியில் இணைப்பு கொடுத்து மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி வருவதாகவும், இதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் செல்ல வீட்டு இணைப்புகளை ஆய்வு செய்து வீட்டின் வெளியே குடிநீர் குழாய் பொருத்த வேண்டும் என செயல் அலுவலர் குகன் உத்தரவிட்டார். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியை தடுத்து நிறுத்தினர் இந்த நிலையில் தலைஞாயிறு மேலத்தெரு பகுதியில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த பேரூராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரத்துடன் சென்றனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து குடிநீர் இணைப்புகள் முறைப்படுத்தும் பணி போலீசார் பாதுகாப்புடன் நடக்கும் என்றும், இதை தடுப்பவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் செயல் அலுவலர் குகன் எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×