என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வடக்குபொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
    • பொதுமக்கள் தங்களது குறைகளை இலவச எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்

    பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வேளாங்கண்ணி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், காந்தி பூங்கா, கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெறுகிறது.
    • தூய்மை பணியாளர்கள் சென்று அந்த இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24 வார்டுகளிலும், தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், கடற்கரை பூங்கா, காந்தி பூங்கா கோவில் மற்றும் தோப்புத்துறை பள்ளிவாசல் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூய்மை பணி நடைபெறுகிறது.

    இதன்படி நீண்ட நாட்களாக மீன் விற்பனை நிலையத்தில் புல், மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் நகர மன்ற தலைவர் புகழேந்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    உடன் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், துணை தலைவர் மங்களநாயகி ,வார்டு உறுப்பினர் மயில்வாகனம்மற்றும் தூய்மை பணியாளர்கள் 30 பேருடன் நகரமன்ற தலைவர் புகழேந்தி நேரில் சென்று இடத்தை இரண்டு மணிநேரம் ஜே.சி.பி வைத்து தூய்மைபடுத்தி சுமார் ஒருடன் குப்பைகள் அகற்றபட்டது.பின்பு அப்பகுதிக்கு பிளிச்சிங் பவுடர் அடிக்கபட்டது.

    • ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார்.
    • சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட் மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வலிவலம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி கீழ கண்ணாப்பூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் கூடும் இடங்களில் சாராயம் விற்று வருகிறார்.

    இதுகுறித்து வலிவலம் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் அவரது மனைவியின் தாலி செயினை சாராய வியாபாரி முத்துகிருஷ்ணனிடம் அடகு வைத்து சாராயம் குடித்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தாலிச் செயினை கேட்டுச் சென்ற போது தாலி செயினை கொடுக்காமல் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்தும் வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கு எடுக்காத்தால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு முத்து கிருஷ்ணனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றனர்.அப்போது சாராய வியாபாரி தப்பித்து ஓடிய நிலையில் சாராயம் பதுக்கி வைத்திருந்த கூரை கொட்டகையை அடித்து நொறுக்கி சாராய பாக்கெட், மற்றும் கலவை போட வைத்திருந்த பாத்திரங்களை சாலையில் போட்டு உடைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.மேலும் கூரை கொட்டகையை வெட்டி சாய்த்தனர். சாராய கடையை அந்த பகுதி மாதர் சங்க பெண்கள் அடித்து நொறுக்கி சாராய மூட்டைகளை சாலையில் வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீதும் அதற்கு துணைபோகும் நபர் மீதும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுத்து சாராயம் இல்லாத நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்ட பேரிடர் பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார் . பெண்கள் மற்றும் பேரிடர் குழு உறுப்பினர்களுக்கும் கிராம மக்களுக்கும் நாகை மாவட்ட பேரிடர்பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்பு த்துறை நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன்மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுபயிற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில்ஊ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதி கள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.
    • வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமை தாங்கினார்.

    திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் சிந்து ஆகியோர் முன்னிலை வகித்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மான்யங்கள் பற்றி பேசினர்.இதில் 22 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மான்ய விலையில் காய்கறி விதைகள், உரங்கள் மற்றும் பிளாஸ்டிக் டிரம், டிரே வழங்கப்பட்டது.வேளாண்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு மான்ய விலையில் பாறை, மண் வெட்டி, தென்னங்கன்று உள்ளிட்ட வேளாண்மை உபகரணங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் நடராஜன், ஊராட்சி மன்றதுணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம், நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும்.
    • மீன் பிடிக்கும்போது கடல்பரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரியபடுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அண்ணப்பேட்டை - சிந்தாமணிகாட்டில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி இந்திய கடற்படை மற்றும் மீன் வளத்துறையினரால் நடத்தபட்டது பயிற்ச்சிக்கு இந்திய கடற்படை நாகை முகாம் அதிகாரி டெப்டினன்ட் கமாண்டர் கர்வேந்தர் சிங் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் கடற்படை வீரரர்கள் நவீன், ராஜேஷ், நந்தகுமார் மீன் வளத்துறை அதிகாரிகள் அருண், மற்றும் பிரியங்கா வாய்மேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தமிழரசன், கார்த்திகேயன் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனா.

    கூட்டத்தில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்றும் நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் மேலும் மீன் பிடிக்கும்போது கடல்ப ரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரி யபடுத்த வேண்டும் கடத்தல் தொழில் செய்பவர்கள் இருந்தால் உடன் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் தற்போது அன்னிய நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது இதனால் அங்கிருந்து வெளியேறி தமிழகத்தில் இலங்கைநாட்டவர்கள் வர வாய்ப்பு உள்ளது அவ்வாறு யாரும் வந்தால் உடன் தெரிவிக்கவேண்டும் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    • கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க நேற்று கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மாறுவேடத்தில் வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் சாகர்கவாச் எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை மற்றும் கடத்தலை தடுக்க நேற்று காலை கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இன்று இராண்டாவது நாளாக ரோந்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்பணியில் இன்று கடலோர காவல் படையினருக்கு சொந்தமான நிரிலும், நிலத்திலும், செல்ல கூடிய ரோவர் படகு கோடிக்கரைக்கு வந்து ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது மேலும் வேதாரண்யம் பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளும் தீவிர வாகன சோதனையும் நடைபெறுகிறது

    இராண்டாவது நாள் பயிற்சி ஒத்திகையில் வேதா ரண்யம் இன்னல்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி சுரேஷ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பன்னீர்செல்வம், ஆனந்த வடிவேலன் ஏட்டு சசிகுமார்மற்றும் போலீசார் ஆறுகாட்டுதுறை, கோடிக்கரை கடற்கரையில் புதிதாக யாரும் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? மீன்பிடி படகில் தீவிரவாதிகள் வரும் வாய்ப்புகள் உள்ளதா? மீனவர்களின் படகை பயன்படுத்தி கடத்தல் நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    பின்னர் படகுமூலம் கடலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்கள் நடைபெறும் .

    இந்த ஒத்திகை நிகழ்ச்சி யில் போலீசார் மாறுவேடத்தில் கடலில் இருந்து கரைக்கு வருவார்கள் அவர்களை அடையாளம் கண்டு மறுவேடத்தில்வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.

    இந்த சாகார் கவாச் ஒத்திகை நிகழ்வில் வேதாரண்யம் போலீசார், உளவு பிரிவு போலீசார், கியூ பிராஞ்ச் போலிசார் என 50 மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒரே நேரத்தில் இராண்டாவது நாளாக கடலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருவதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.
    • மாவட்ட அளவில் பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்து பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியினை வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். கூடுதல் தாசில்தார்கள் வேதையன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியினை வேதாரண்யம்கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் பார்வையிட்டார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், திருக்குவளையில் 9 பேருக்கும், கிவளுரில் 14 பேருக்கும், நாகையில் 26 பேருக்கும் என மொத்தம் 67 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில்பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
    • மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-

    புத்தக கண்காட்சி பன்முகத் தன்மையுடன் நடந்து வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    இதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டரின் சிறந்த முயற்சிக்கும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    • நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிறைவேற்றப்பட வேண்டியவைகளை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார்.
    • 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக முகமது ஷாநவாஸ் பொறுப்–பேற்றதில் இருந்து கடந்த மாதம் வரை ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில், மாவட்ட நிர்வாகம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மனுக்களை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார். அப்படி வழங்கப்பட்ட 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் தாசில்தார், தனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் அங்கு வரும் நோயாளிகளும், பணியாளர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
    • கட்டிடத்தை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் அங்கு வரும் நோயாளிகளும் அங்குள்ள பணியாளர்களும்மிகுந்த இன்னலுக்கு உள்ளா கின்ற னர்.எனவே பழுதடைந்த அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென ஷா நவாஸ் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் பேசியிருந்தார். இந்நிலை யில், அதை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார். புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகா ரிகளிடம் வலியுறுத்தினார்.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.
    • இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் விணாகிறது இதனை சரிசெய்ய பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பொதுமக்கள்கோரிக்கை. விடுத்துள்ளனர்

    வேதாரண்டம் அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு ,தகட்டூர் , மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.

    இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும்,தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×