என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க நேற்று கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மாறுவேடத்தில் வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் சாகர்கவாச் எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை மற்றும் கடத்தலை தடுக்க நேற்று காலை கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இன்று இராண்டாவது நாளாக ரோந்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்பணியில் இன்று கடலோர காவல் படையினருக்கு சொந்தமான நிரிலும், நிலத்திலும், செல்ல கூடிய ரோவர் படகு கோடிக்கரைக்கு வந்து ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது மேலும் வேதாரண்யம் பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளும் தீவிர வாகன சோதனையும் நடைபெறுகிறது

    இராண்டாவது நாள் பயிற்சி ஒத்திகையில் வேதா ரண்யம் இன்னல்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி சுரேஷ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பன்னீர்செல்வம், ஆனந்த வடிவேலன் ஏட்டு சசிகுமார்மற்றும் போலீசார் ஆறுகாட்டுதுறை, கோடிக்கரை கடற்கரையில் புதிதாக யாரும் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? மீன்பிடி படகில் தீவிரவாதிகள் வரும் வாய்ப்புகள் உள்ளதா? மீனவர்களின் படகை பயன்படுத்தி கடத்தல் நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    பின்னர் படகுமூலம் கடலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்கள் நடைபெறும் .

    இந்த ஒத்திகை நிகழ்ச்சி யில் போலீசார் மாறுவேடத்தில் கடலில் இருந்து கரைக்கு வருவார்கள் அவர்களை அடையாளம் கண்டு மறுவேடத்தில்வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.

    இந்த சாகார் கவாச் ஒத்திகை நிகழ்வில் வேதாரண்யம் போலீசார், உளவு பிரிவு போலீசார், கியூ பிராஞ்ச் போலிசார் என 50 மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒரே நேரத்தில் இராண்டாவது நாளாக கடலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருவதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.
    • மாவட்ட அளவில் பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்து பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியினை வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். கூடுதல் தாசில்தார்கள் வேதையன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியினை வேதாரண்யம்கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் பார்வையிட்டார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தலைமை சர்வேயர் முருகானந்தம் நில அளவை குறித்து பயிற்சி அளித்தார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 18 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், திருக்குவளையில் 9 பேருக்கும், கிவளுரில் 14 பேருக்கும், நாகையில் 26 பேருக்கும் என மொத்தம் 67 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில்பட்டா மாற்றம் அதிக அளவில் தேக்கம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து பட்டா மாற்றம் விரைந்து நடைபெற இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
    • மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-

    புத்தக கண்காட்சி பன்முகத் தன்மையுடன் நடந்து வருவது பாராட்டுக்குரியது. பல்வேறு முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கிய வரலாற்று புகழ் மிகுந்த எழுத்தாளர்களின நூல்கள் காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகப்பட்டினத்தில் கண்காட்சி முதன் முறையாக நடத்தப்படுவது மக்கள் மத்தியில் ஒரு புதிய பார்வையையும் சிந்தனையையும் உருவாக்கி உள்ளது.

    இதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டரின் சிறந்த முயற்சிக்கும் விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    • நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிறைவேற்றப்பட வேண்டியவைகளை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார்.
    • 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை தொகுதி எம்.எல்.ஏ.வாக முகமது ஷாநவாஸ் பொறுப்–பேற்றதில் இருந்து கடந்த மாதம் வரை ஓராண்டில் தொகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில், மாவட்ட நிர்வாகம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய மனுக்களை உடனுக்குடன் தனியே பிரித்து கலெக்டரிடம் வழங்கியிருந்தார். அப்படி வழங்கப்பட்ட 1232 மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் தாசில்தார், தனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர், சுகாதாரத் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் அங்கு வரும் நோயாளிகளும், பணியாளர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
    • கட்டிடத்தை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால் அங்கு வரும் நோயாளிகளும் அங்குள்ள பணியாளர்களும்மிகுந்த இன்னலுக்கு உள்ளா கின்ற னர்.எனவே பழுதடைந்த அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென ஷா நவாஸ் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் பேசியிருந்தார். இந்நிலை யில், அதை புதுப்பித்து கட்டுவது தொடர்பாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார். புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகா ரிகளிடம் வலியுறுத்தினார்.

    • கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.
    • இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் குடிநீர் விணாகிறது இதனை சரிசெய்ய பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பொதுமக்கள்கோரிக்கை. விடுத்துள்ளனர்

    வேதாரண்டம் அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு ,தகட்டூர் , மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நூற்றுக்கணக்கான லிட்டர் ஆற்றில் வீணாக செல்கிறது.

    இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மூலமாகவும்,தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே உடனடியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • இருவரிடம் இருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜாங்கம் (வயது 56).இவர் தனது மனைவி சந்திரா, மகன் ரமேஷ், மருமகள் விஜயலட்சுமி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு கடந்த ஜூன் 7-ம் தேதி காரைக்கால் சென்றுள்ளனர். 8-ம் தேதி மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாங்கம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசில் புகார் ராஜாங்கம் அளித்தனர். இதன்பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மாவட்டம் மதகடி தாமஸ்பிள்ளை அறிவுதிடல் பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் ஐயப்பன் (வயது 36), பொறையார் அனந்தமங்கலம் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அருள்குமார் (21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் சேர்ந்து வீட்டில் கதவை உடைத்து 4 பவுன் நகை ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் கைது செய்து அவர்களிடமிருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைத்தனர்.

    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார்.

    திருமருகல் வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்து துறையில் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கிக் பேசினர்.

    இதில் 20 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளும், 15 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பாறை, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா எதிரே முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு ,நகர அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    • இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்னையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இனைந்து நடத்தும் புத்தக திருவிழாவை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீனவளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த புத்தக திருவிழா வானது அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. தினந்தோறும் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்சிகளும், தமிழ் அறிஞர்களின் கருத்தர ங்ககளும், சிந்தனையரங்கம் போன்ற நிகழ்சிகள் நடை பெற உள்ளன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்ட அலுவலர்கள் முருகேசன் (நாகை), ஜெயராஜ்பௌலின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், நாகை நகரமன்ற தலைவர் மாரிமுத்து, தென்இந்திய புத்தக விற்பனையாளர் சங்க தலைவர் வைரவன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
    • இப்பயிற்சியில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் வருவாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வேதாரண்யம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வேதாரண்யம் வட்டார வேளாண்மை அலுவலர் யோகேஷ், வேளாண்மை உதவி அலுவலர்கள் இந்திரா, தமிழன்பன், அனீஷ்தோட்டக்கலைத் துறை சார்பாக தோட்டக்கலை உதவி அலுவலர் நிறைமதி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி கலந்துகொணடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் .

    வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார். இப்பயிற்சியில் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
    • இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 200 வீடுகளில் விதிகளுக்கு புறம்பாக தரை மட்ட தொட்டியில் இணைப்பு கொடுத்து மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி வருவதாகவும், இதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் செல்ல வீட்டு இணைப்புகளை ஆய்வு செய்து வீட்டின் வெளியே குடிநீர் குழாய் பொருத்த வேண்டும் என செயல் அலுவலர் குகன் உத்தரவிட்டார். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியை தடுத்து நிறுத்தினர் இந்த நிலையில் தலைஞாயிறு மேலத்தெரு பகுதியில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த பேரூராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரத்துடன் சென்றனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து குடிநீர் இணைப்புகள் முறைப்படுத்தும் பணி போலீசார் பாதுகாப்புடன் நடக்கும் என்றும், இதை தடுப்பவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் செயல் அலுவலர் குகன் எச்சரிக்கை விடுத்தார்.

    ×