search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி
    X

    இந்திய கடற்படை சார்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

    மீனவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

    • மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம், நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும்.
    • மீன் பிடிக்கும்போது கடல்பரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரியபடுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அண்ணப்பேட்டை - சிந்தாமணிகாட்டில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி இந்திய கடற்படை மற்றும் மீன் வளத்துறையினரால் நடத்தபட்டது பயிற்ச்சிக்கு இந்திய கடற்படை நாகை முகாம் அதிகாரி டெப்டினன்ட் கமாண்டர் கர்வேந்தர் சிங் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் கடற்படை வீரரர்கள் நவீன், ராஜேஷ், நந்தகுமார் மீன் வளத்துறை அதிகாரிகள் அருண், மற்றும் பிரியங்கா வாய்மேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தமிழரசன், கார்த்திகேயன் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனா.

    கூட்டத்தில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்றும் நமது எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டும் மேலும் மீன் பிடிக்கும்போது கடல்ப ரப்பில் அன்னியர்கள், அயல் நாட்டவர்கள் வந்தால் உடன் காவல்துறைக்கு தெரி யபடுத்த வேண்டும் கடத்தல் தொழில் செய்பவர்கள் இருந்தால் உடன் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் தற்போது அன்னிய நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது இதனால் அங்கிருந்து வெளியேறி தமிழகத்தில் இலங்கைநாட்டவர்கள் வர வாய்ப்பு உள்ளது அவ்வாறு யாரும் வந்தால் உடன் தெரிவிக்கவேண்டும் என மீனவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    Next Story
    ×