என் மலர்tooltip icon

    மதுரை

    • தமிழர்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என பசும்பொன் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்ட வேண்டும் என்றார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கவர்னராக இருக்கும் ரவி தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். நேற்று சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் தமிழக அரசு கொடுத்த உரையை முறையாக வாசிக்காமல் சட்டமன்ற வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை கவர்னர் ஏற்படுத்தி இருக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    கவர்னரின் இந்த மக்கள் விரோத செயலை கருப்பு சட்டை வழியில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். அவருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டின் வரலாறை சரியாக புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழக அரசிற்கும் இடையூறுகளை ஏற்படுத்தி வரும் கவர்னர் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்ய விரும்பினால் அவர் பா.ஜ.க.வின் கமலாலயத்தில் இருந்து அரசியல் செய்யட்டும். ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தையும், அரசுக்கு எதிரான நடவ டிக்கைகளிலும் ஈடுபடுவதை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு எத்தனையோ சான்றோர்கள் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்.அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் வீரத்தையும் வரலாற்றையும் பாதுகாத்துள்ளார். இதுபோன்று எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தின் வரலாறுகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவமா னப்படுத்தும் வகையில் ஆளுநர் ரவி செயல்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கவர்னர் ரவி வாழ தகுதியற்றவராகி விட்டார். ஆளுநர் மாளி கையை உடனடியாக பூட்ட வேண்டும்.அவரை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுதான் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கமிட்டியினர் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
    • பிற சமுதாயத்தினருக்கு மரியாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு கமிட்டியினருக்கு இடையே பிரச்சினை உருவாகி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோர்ட்டு வரை சென்றுள்ளது.

    இந்த நிலையில் அவனி யாபுரம் அனைத்து சமு தாய கிராம கமிட்டி நிர்வாகிகள் மதுரை வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அன்புமணி ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையை ஆராய்ந்து பார்த்ததில் இங்கு 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றும், பின்னர் ஒரே ஜல்லிக்கட்டாக நடத்த அரசு உத்தரவிட்ட பின்னர் கோர்ட்டு வழிகாட்டு தலின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்றும் தெரியவந்தது.

    இந்த ஜல்லிக்கட்டில் தென்கால் விவசாய கிராம கமிட்டியினர் இருவர் பொருளாதாரம் ஈட்டும் நோக்கத்தில் ஈடுபட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினராக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் பிற சமுதாயத்தினருக்கு மரி யாதை தரவில்லை என்றும் தெரிகிறது.

    அவனியாபுரம் ஜல்லிக் கட்டு நடத்த தனி நபருக்கோ, தனி ஒரு அமைப்புக்கோ அனுமதி வழங்காமல் இந்த ஜல்லிக்கட்டை அவனியாபுரம் அனைத்து சமுதாயம் உள்ளடக்கிய பொதுமக்கள் கமிட்டியி னருக்கு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நாளை வழங்கப்படுகிறது
    • இந்த நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    மதுரை

    முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு வின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரையில் நாளை ஏழை எளியவருக்கு இலவச வேட்டி- சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    மதுரையின் முன்னாள் நகர் மன்ற தலைவராகவும் மதுரை பாராளுமன்ற உறுப்பினராக 2 முறை திறம்பட மக்கள் பணியாற்றியவர் ஏஜி.சுப்புராமன்.இவரது மகனும், மதுரை மாவட்ட காங்கிரசின் தன்னிகரில்லா தலைவராக விளங்கி மதுரை மக்களின் பேரன்பினால் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு.

    அவர் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதி இயற்கை எய்தினார். ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள மஹால் வடம்போக்கி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

    இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏ.ஜி.எஸ். ராம்பாபு மீது பற்று கொண்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள், இந்நாள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சவுராஷ்டிரா சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள், சமுதாய பெருமக்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துகிறார்கள். இதை தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக நலிவுற்ற, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி -சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த நினைவேந்த லுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    • மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

    மதுரை

    மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.

    மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), வனிதா (தலைமையிடம்), ஆறுமுகசாமி (போக்கு வரத்து) மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மதுரை மண்டல தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை நாடார் மகாஜன மேன்சன் மினி அரங்கத்தில் நடந்தது. மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    ஜெயக்குமார், பிரபாகரன், சுவீட்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மோட்டார் உதிரி பாக விற்பனையாளர் சங்கம் கண்ணழகன், மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி, சில்வர் சிவா, கரண்சிங், கார்த்தி, காந்தி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வணிக வரித்துறையி னரால் நடத்தப்படும் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற அடிப்படையில் கடைகளில் நடைபெறும் அத்துமீறலை ரத்து செய்யவேண்டும்.

    வாகன விதி மீறல் என்ற பெயரில் நடைபெறும் அதிரடி நடவடிக்கையை தடை செய்யவேண்டும்.

    மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்ற எரிபொருளின் விலை உயர்வால் ஏழை மக்களின் வாழ்வாதாரம், வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் தியாகத்தை போற்றும் வகையில் 100 அடி வெண்கல சிலை அமைத்து கப்பலில் நிற்பது போல் வடிவமைத்து சென்னை, தூத்துக்குடி, குமரி கடற்கரையில் நிறுவ தமிழக அரசை கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேற்கண்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கண்ணன், பழம், ரவிச்சந்திரன், முத்துராஜ், சுருளி, கோகுலம் கணேசன், பெருமாள், ஜெயராஜ், கணேசன், செந்தில்குமார், மகளிரணி விக்டோரியா, பாக்கியலட்சுமி, கோகிலா, சித்தலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் குட்டி என்ற அந்தோணி ராஜ் செய்திருந்தார்.

    • ரூ.9.30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.
    • அரிசி அட்டைதாரர்கள் 1,263 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

    மதுரை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை கலெக்டர் அனிஷ் சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள பாண்டியன் சூப்பர் மார்க்கெட் ரேஷன் கடையில் தொடங்கி வைத்தனர்.

    அப்போது அந்த ரேசன் கடையில் உள்ள அரிசி அட்டைதாரர்கள் 1,263 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அனிஷ்சேகர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் 4 நாட்களுக்கு வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 339 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

    இந்த பரிசு தொகுப்பில் உள்ள அனைத்து பொருட்களும் தரமான பொருட்களாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக மாடுபிடி வீரர்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • இந்தப் பயிற்சிகள் மூலம் அறிந்துகொள்ள முடிவதாகவும் மாடுபிடிவீரர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மதுரையை சுற்றிய பல பகுதிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மதுரை முடக்கத்தான் பகுதியிலும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். தாங்கள் வளர்த்து வரும் காளைகளை ஓடி வரச் செய்து அவற்றை வேகமாக தாவிப்பிடிப்பதற்காக பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    மேலும் சுற்று மாடுகள் போல் மாடுகளை சுற்றிவரச் செய்தும் பயிற்சி பெறுகின்றனர். இந்தப் பயிற்சிகள் தாங்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பதற்கான நம்பிக்கையை அளிப்பதாகவும், மேலும் மாடுகள் எப்படி ஓடிவரும், அவற்றை எப்படி தாவி பிடிப்பது என இந்தப் பயிற்சிகள் மூலம் அறிந்துகொள்ள முடிவதாகவும் மாடுபிடிவீரர்கள் தெரிவித்தனர். 

    • வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    • முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

    மதுரை

    மதுரை மேல வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 64). இவர் நேற்று மாலை வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அவரது மனைவி சமையல் அறையில் இருந்தார். அப்போது ஒரு மர்மநபர், அவருடைய வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடினார்.

    இதனைப்பார்த்த ஜெயபிரகாஷ், திருடன்... திருடன்... என்று கூச்ச லிட்டார். இதையடுத்து அந்த நபர் வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அவர் திடீர் நகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இன்ஸ்பெக்டர் லோகே சுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் வேல்முடிக்கரையை சேர்ந்த பார்த்திபன் (34) என்பது தெரிய வந்தது.

    அவரிடம் ஜெய பிரகாசின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பார்்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது அவர் மீது பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

    பார்த்திபன் முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.நேற்று மாலை மதுரை மேல வடம்போக்கி தெருவுக்கு சென்றுள்ளார்.

    அப்போது வீட்டில் முதியவர் ஜெயப்பிரகாஷ் டிவி பார்த்துக் கொண்டி ருந்ததை பார்த்த பார்த்திபன், நைசாக வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருமங்கலம் அருகே கோவிலில் நகை-பணம் திருடு போனது.
    • இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியில் பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலை பூசாரி வழக்கம்போல் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது கோவில் அலுவலக அறையும் திறந்து கிடந்தது.

    அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த அம்ம னுக்கு அணிவிக்கப்படும் 6கிராம் தங்கத்தாலி, 10 கிராம் வெள்ளி கண்மலர் ஆகியவை திருட்டு போயி ருந்தது. மேலும் கோவிலில் இருந்த சிறிய உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணமும் திருடப்பட்டிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
    • மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும்.

    மதுரை:

    சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை.

    முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐ.டி. எடுத்தால் என்ன ஆவது? இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்தார்.
    • தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    மதுரை

    அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச் செயலாளர் ராஜமருது, மதுரை கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் வீடுகள் முன்பு பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம்.

    தைமாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். அவனியாபுரத்தில் தை மாதம் முதல் நாள் (15-ந் தேதி) பொங்கல் அன்றும், 2-ம் நாள் (16-ந் தேதி) மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும், தை மாதம் 3-ந் தேதி அலங்கா நல்லூரிலும் ஜல்லிகட்டு நடத்தப்படுகிறது.

    பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்குவது, தமிழக மக்களின் கலாச்சாரம்- பண்பாடுகளை சீர்கு லைக்கும் செயல் ஆகும். அப்படி செய்வதால்தை மாதம் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடுகள், முறையாக நடத்தப்படுவதில்லை.

    ஐல்லிக்கட்டுக்கு முதல் நாளே அனைத்து கிராமங்களிலும் ஜல்லி கட்டு காளைகளின் உரிமையாளர்கள், உறவினர்கள், மாடுபிடி வீரர்கள் பொங்கல் நிகழ்ச்சிகளை அடியோடு புறக்கணித்து விடுகின்றனர். இதனால் புதிய கலாச்சார சீரழிவு உருவாக்கப்பட்டு வருகிறது.

    தமிழக மக்களின் இனம் மொழி கலாச்சாரம், பாராம் பரியம், பண்பாடுகளை பாதுகாக்கும் வகையில் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் தமிழகம் முழு வதும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் முழுவதும் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    சென்னையில் மதுரைக்கு 280 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர திருச்சிக்கு 135, திருப்பூ ருக்கு 80, கோவைக்கு 120, நெல்லைக்கு 35, நாகர்கோவி லுக்கு 35, திருச்செந்தூருக்கு 30, மற்றவை 175 உள்பட 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பொது உள்ளது.

    இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.

    பயணிகளுக்கு வழிகாட்ட வும், சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அலு வலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயண சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    ×