என் மலர்tooltip icon

    மதுரை

    • அலங்காநல்லூரில் காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை பேரணி நடந்தது.
    • வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்பு ணர்வு பேரணி மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில் அலங்காநல்லூர் வட்டார தலைவர் சுப்பாராயலு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    வட்டாரத் தலைவர்கள் காந்தி, சண்முகசுந்தரம், பழனிவேல், குருநாதன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, திலகராஜ், முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்லப்பா சரவணன், சோனை முத்து, முத்து, நகர் தலைவர்கள் சசிகுமார், வைரமணி, முத்துப்பாண்டி, முருகானந்தம், உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர், கேட்டுக்கடை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் பஸ் நிலையம் வரை இந்த ஒற்றுமை பேரணி நடந்தது.

    • அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.2½ லட்சம் கல்வி உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
    • திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கண்டுகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி உள்ளது. இதில் கிராமத்தைச் சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற பகுதி என்பதால் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி பயில்வதற்காக பள்ளிக் குழந்தைகள் உட்காருவதற்காக மேஜை, நாற்காலிகள் இல்லாமல் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வந்துள்ளனர்.

    இது தொடர்பாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆர்.பி. உதயகுமார் நேரில் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மேலும் கிர்டிட் அக்ஸஸ் கிராமீன் லிமிடெட் சார்பில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான இருக்கைகள் மேஜைகள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை சட்டமன்ற ஆர்.பி. உதய குமார் பள்ளிக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய செய லாளர் அன்பழகன், டிரஸ்ட் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாச ஆஞ்சிநேய ரெட்டி பிரிவு மேலாளர் பாஸ்கரன், திட்டமிடல் கண்காணிப்பு குழு பிரசாந்த், ராம்குமார், பிரதீப், நிர்வாகத்துறை வேலு உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    • சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சாத்தான்குளம் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரகு கணேசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே 4 முறை அவரது ஜாமீன் மனுக்கள் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நேற்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்த ஜெயராஜின் மனைவி, செல்வராணி தரப்பில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்ககூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

    மேலும் சி.பி.ஐ தரப்பு மற்றும் ஸ்ரீதர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • துப்புரவு பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் சட்ட விழிப்பு ணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் மதுரை அய்டியாஸ் மையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதில் குறைந்த பட்ச ஊதியம், துப்புரவு தொழிலாளர் களுக்கான அரசாணைகளை நடை முறைப்படுத்துதல், அரசு அதிகாரிகள் பங்களிப்பு, துப்புரவு பணியாளர் உரிமைகளை காக்க போராட்டங்களும், அவற்றின் தாக்கங்களும், பணி பாதுகாப்பு சட்டங்கள் -சவால்கள், அன்றாடம் சந்திக்கும் உரிமை மீறல்கள் போன்ற தலைப்புகளில் முக்கிய பிரமுகர்கள் பேச உள்ளனர். இதில் வழக்கறி ஞர்கள், சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், மாண வர்கள் கலந்து கொள்கின் றனர்.

    மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், ஜே.சி.ஐ. மதுரை லயன்ஸ் இணைந்து ஒருநாள் ரத்ததான முகாமை இன்று நடத்தியது.

    கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வாழ்த்துரை வழங்கினார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். காசிநாததுரை வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் ராஜலிங்கம், காமராஜர் பல்கலைகழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா ளர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, பெரியகருப்பன், திருஞான சம்பந்தம், மற்றும் வெங்க டேஷ நரசிம்ம பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர்.
    • மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது.

    மதுரை

    மதுரையை தலைமையிட மாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரி வித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

    ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததனர்.

    அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி , கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொரு ளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப் பட்டு விலையுயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    நியோமேக்ஸ் நிறு வனத்தின் இயக்குனர்க ளான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து , சகாயராஜா பத்மநாபன், மலைச்சாமி ஆகிய 6 பேரையும் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள்

    புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவித்தி ருந்தனர். அதன்படி மதுரை, விருதுநகரில் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புகார் அளித்தனர். இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது. நியோமேக்சில் முதலீடு செய்து பணத்தை இழந்த மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் புகார் மனு அளிக்க குவிந்தனர்.

    • ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை நாள் கொண்டாடப்பட்டது.
    • விழா விற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் சங்கீதா வெங்க டேசன் செய்தி ருந்தார்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை நாள் கொண்டா டப்பட்டது. பள்ளியின் நிர்வாக அறங்காவலர் சாந்தாதேவி சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தாளாளர் மற்றும் முதல்வர் நல்லாசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இயற்கை வளம் காத்தல், மரம் வளர்ப்பு மற்றும் சுற்றுப்புற சூழல் தூய்மை ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    பசுமை நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பச்சை காய்கறிகளின் கண்காட்சி அணிவகுப்பு நடந்தது. விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் சங்கீதா வெங்க டேசன் செய்தி ருந்தார்.

    • மதுரையில் நாளை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ தலைமையில் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கழக பொதுச் செயலாளரு, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற பாராளு மன்ற தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மகளிர் குழு, இளைஞர் குழு அமைத்தல், கட்சி வளர்ச்சி பணி, பேரறிஞர் அண்ணா வின் பிறந்தநாள் பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடை பெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கட்சி யின் வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி, மகளிர் குழு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.

    எனவே இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டு றவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.
    • மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கிறோம்.

    மதுரை

    மதுரையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடை களை மூடுவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் மது பான கூடங்களை மூடு வதற்கு அரசு முன்வர வில்லை. மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கி றோம்.

    இல்லையென்றால் மக்களின் ஆதரவுடன் பெரும் போராட்டம் வெடிக்கும். சில மாதங்க ளுக்கு முன்பு 200 கடை களை மூடிவிட்டு தற்போது எந்த வித முன்னறி விப்புமின்றி பல டாஸ்மாக் கடைகளை திறந்து வரு கின்றனர்.

    சனாதனம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு புரிதல் இல்லை. தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியை திசை திருப்பும் வகையில் சனாதனத்தை பற்றி பேசி வருகின்றனர். இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாழை யூர் குணா, மாவட்ட செய லாளர் சிறுதூர் பாலா, மாநகர் மாவட்ட செயலா ளர் தாமோதரன் உடனிருந்தனர்.

    • அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    மதுரை

    திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சட்டமன்ற எதிர் கட்சி துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப்பட்டு, நில எடுப்பு பணி தொடங்கப் பட்டது. தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடை பெற்று, டெண்டர் கோரப் பட்டது. தற்போது பழைய நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கூட, மத்திய அரசு சில டோல்கேட் அகற்றப்படும் அறிவித்தது. அதில் கப்பலூர் டோல்கேட்டையும் அகற்ற தமிழக அரசு வலியு றுத்த வேண்டும்.

    திருமங்கலம் தொகுதியில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பாராமுகம் தான் காட்டப் பட்டு வருகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் திருமங்கலம் தொகுதியின் அடிப்படை வசதி குறித்தும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரியும், ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தும் எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதிகளுக்கு செய்து கொடுத்தோம். தற்போது எந்த திட்டங்களும், நிதியும் வரவில்லை.

    திருமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் பணி, புதிய பஸ்நிலையம் திட்டம், அதேபோல் கப்பலூர் டோல்கேட் அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அனுமதியை பெற்று தி.மு.க. அரசை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தை நடத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    • சோதனையில் அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    மதுரை

    கஞ்சா, மது, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துக்களால் இளம் வயதினர் மிகவும் சீரழிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் போதை பழக்கத்தில் ஆளாகின்றனர்.

    இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்பத்தில் தகராறு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை நிகழ்கிறது. கஞ்சா கடத்தல் தடுப்பு சம்பந்தமாக மதுரை மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

    கஞ்சா கடத்தியவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்தும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தும் மாவட்டம் முழு வதும் அதிரடி நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று இருந்த 2 பேரை பிடித்து விசாரித்த னர். முன்னுக்கு பின் முர ணாக தகவல் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

    சோதனையில் அவர்க ளிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் கஞ்சா கடத்தியது மேக்கிழார் பட்டி சரவணன் (வயது 27), மேலபுதூர் சரவணன்(வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இறந்து 2 நாட்களாக வாலிபர் கிடந்தார்.
    • அலங்காநல்லூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூரை அடுத்த பூதகுடி ஊராட்சி, விஷ்வா நகர், 2-வது தெரு குடியிருப்பு பகுதியின் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையா ளம் தெரியாத வாலிபர் பிணம் ஒன்று கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உடனடி யாக அங்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இறந்து கிடந்த வரின் உடல் கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் கிடந்ததால் முகம், கை, கால்கள் வீங்கி அடையாளம் தெரியாத வகையில் காணப் பட்டது.

    ஆள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் யாரோ வாலி பர் ஒருவர் மதுபோதை மயக்கத்தில் கிடப்பதாக நினைத்து கண்டுகொள்ளா மல் சென்று விட்டனர். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் உடல் கிடந்ததால் ளிட்ட பல்வேறு கோணங்க ளில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ×