என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
    X

    துப்புரவு பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

    • துப்புரவு பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் சட்ட விழிப்பு ணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் மதுரை அய்டியாஸ் மையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதில் குறைந்த பட்ச ஊதியம், துப்புரவு தொழிலாளர் களுக்கான அரசாணைகளை நடை முறைப்படுத்துதல், அரசு அதிகாரிகள் பங்களிப்பு, துப்புரவு பணியாளர் உரிமைகளை காக்க போராட்டங்களும், அவற்றின் தாக்கங்களும், பணி பாதுகாப்பு சட்டங்கள் -சவால்கள், அன்றாடம் சந்திக்கும் உரிமை மீறல்கள் போன்ற தலைப்புகளில் முக்கிய பிரமுகர்கள் பேச உள்ளனர். இதில் வழக்கறி ஞர்கள், சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், மாண வர்கள் கலந்து கொள்கின் றனர்.

    மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×