என் மலர்tooltip icon

    மதுரை

    • அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
    • தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாம் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நானும் உங்களை போல் விவசாயி என்பதால் சோழவந்தான் விவசாய பகுதி மக்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இலவச மும்முனை மின்சாரம், வேளாண் பொருட்கள் உதவிகள் அதிமுக ஆட்சியில் வழங்கினோம்.

    ஏழைகளுக்கு கொடுக்கும் வேட்டி சேலையில் கூட திமுக அரசு ஊழல் செய்கிறது.

    அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மீண்டும் ஏழை மாணவர்களுக்கு உறுதியாக லேப்டாப் வழங்குவோம்.

    அதிமுக ஆட்சி வந்தவுடன் வீடில்லா விவசாய தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

    அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.

    திமுக ஆட்சியில் மூடப்பட்ட 2000 அம்மா கிளினிக்குகளுக்கு பதிலாக 4000 அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். ஏழை, எளிய மக்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும்.

    திமுக ஆட்சியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

    நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஐதராபாத் செல்லும்.

    மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * ஈரோடு ஜங்சனில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16845), வரும் 30-ந்தேதி வரையில் (9,16,23,30 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) திண்டுக்கல்-செங்கோட்டை இடையே பகுதி நேர ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16846), வரும் 30-ந்தேதி வரையில் இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) செங்கோட்டை-திண்டுக்கல் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு ஜங்சன் செல்லும்.

    * செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16848), வரும் 30-ந்தேதி வரையில் இன்று (புதன்கிழமை), 10, 17, 24 ஆகிய தேதிகளை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று வழித்தடம் வழியாக மயிலாடுதுறை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 7, 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16352), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரியில் இருந்து வரும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12666), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), வரும் 30-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர எஞ்சிய நாட்கள்) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * கன்னியாகுமரியில் இருந்து வரும் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07229), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஐதராபாத் செல்லும். கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது.
    • கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    'தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம்' சுற்றுப்பயணத்திற்காக மதுரை வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இன்று வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சங்கத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை-தூத்துக்குடி சாலை, விமான நிலைய விரிவாக்கம், தென் தமிழகத்தில் தொழிற் வளர்ச்சி, உலக முதலீட்டாளர் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், கப்பலூர் சுங்கசாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு அரசியில் கட்சியினரும் இங்கு வந்துள்ளீர்கள். தொழிலும், அரசியலும் அப்பாற்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 2015-ம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை தற்போது படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது. அதற்கு நிதி, நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முடிந்த பிறகு தான் தொழிற்சாலை வரும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.

    அதேபோல் கோவில் நகரமான இங்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அ.தி.மு.க. அரசு முழு நடவடிக்கை எடுக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தொழிலுக்கு குறிப்பாக நிலம் தேவை. தற்போது நிலத்தை கையகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் விவசாயிகள் முன் வந்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொழில்கள் பாதிக்கப்படும். எனவே வெளிமாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டல் தொழிலில் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். அம்மா ஆட்சியிலும், எனது ஆட்சியிலும் எனது தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொழிற்துறையினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்க சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறையினரின் பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும்.

    கோவில் நகரமான மதுரையை தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.1300 கோடியில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையில் 4 தடுப்பணைகள், ரூ.400 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள், பாதாள சாக்கடை வசதிகள், குடிமராமத்து பணிகள், பறக்கும் பாலம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி, வளர்ச்சி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இங்கு தொழிற்துறையினர் கொடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கவனமுடன் பரிசலீத்து நடவடடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.
    • ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி.

    'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' முதல் கட்ட எழுச்சிப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கினார்.

    இந்த எழுச்சிப்பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான இன்று திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார்.

    முதலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் உரைரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது, அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. அதிமுக அரசு வந்தவுடன் முழு விசாரணை நடத்தி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். 3 மாதத்துக்கு முன்பாக புதிய டிஜிபிக்கள் பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த பட்டியலில் இருந்து மூன்று பேரை பரிந்துரைப்பார்கள். அந்த மூவரில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்வுசெய்து டிஜிபியாக அறிவிக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்த பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் குறித்த காலத்தில் டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்துகொள்ளவில்லை. இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

    பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ஒரு டிஜிபி, தீயணைப்புத் துறைக்கு ஒரு டிஜிபி என 8 டிஜிபிக்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. அப்படி பொறுப்புமிக்க 8 டிஜிபிக்கள் விழாவில் பங்கேற்கவில்லை என்றால் இந்த அரசு எப்படி நடக்கும்? காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல்துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது. தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.

    ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி. அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, லட்சக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

    திமுக அரசும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது, அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை கொடுக்கவில்லை. தொழிற்துறை அமைச்சர் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்கிறார், பிறகு ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்கவில்லை..?

    எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாக நினைக்கிறார் என்று அமைச்சர் ராஜா பேசுகிறார். ஆம் நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாகத்தான் நினைக்கிறேன்.

    ஏனென்றால் நானெல்லாம் ஒரு விவசாயி. உங்கள் அப்பா மத்திய அமைச்சர் என்பதால் நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் தலைவரின் அப்பா முதல்வராக இருந்தவர். அதனால் நீங்கள் எல்லாம் தங்க ஸ்பூனிலும், வெள்ளித் தட்டிலும் சாப்பிடலாம். நான் மக்களோடு மக்களாக இருந்து வந்தவன், எனக்கு கையில் எடுத்து சாப்பிடத்தான் தெரியும்.

    எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாம் எல்லோரும் ஸ்பூனிலா சாப்பிடுகிறோம்? கையில் சாப்பிடுவதற்கே சாப்பாடு கிடைக்காமல் மக்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள், அதற்காகத்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மக்களுடைய பிரச்னை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.

    மக்கள் வேலைக்காக, உணவுக்காகப் ராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அம்மா உணவகத்தை கூட மூடப்பார்க்கிறார்கள். முழுமையாக பொருட்கள் கொடுப்பதில்லை, ஊழியர் எண்ணிக்கை குறைத்தனர். இவர்களா ஏழை மக்களைக் காப்பாற்றுவார்கள்?

    2011க்கு முன்பு திமுக ஆட்சியையும், 2011க்கு பின் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று போதை பொருள் விற்காத இடமே இல்லை. போதை பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது.

    மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின் இப்படி பேசுவதான் மூலம் என்ன பயன்? ஆனால், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    இப்போது எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக டாஸ்மாக் பணியாளரே சொல்கிறார், அந்த மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியே வசூலிக்கிறார்கள். அப்போதும் மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.

    விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.

    ஆனால், முதல்வருக்கு அவரது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தனை. அவர் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. 51 மாத காலத்தில் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா, புயல், வறட்சி ஆகியவற்றிலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டது அதிமுக அரசு. எம்ஜிஆர், அம்மா ஏழைகளை நேசித்தார்கள், எப்போதெல்லாம் துன்பம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து விடுபடும் அளவுக்கு ஆட்சி செய்தார்கள்.

    எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தினமும் கொலை நிலவரம்தான் செய்திகளில் வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா?

    நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?

    கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் அதிமுக ஆட்சியில்தான் நன்மைகள் கிடைக்கப்பெற்றது.

    ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில், 24 மணிநேரம் அரசு மருத்துவமனை, பள்ளிகள் தரம் உயர்த்துதல், முல்லைப் பெரியாறு திட்டம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, பொறியியல் கல்லூரி, மருத்துவ ஆராய்ச்சி நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என்று நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கிறோம்.

    திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப் கார் வசதி செய்வதாக திமுகவினர் சொன்னார்கள். அதை செய்யவில்லை, கிரிவலப்பாதை மேம்படுத்தப்படும் என்றார்கள், செய்யவில்லை. அவனியாபுரம் பைபாஸ் முதல் நெல்பேட்டை வரை உயர்மட்ட பைபாஸ் பாலம் கட்டப்படும் என்றார்கள், செய்யவில்லை. விரகனூர் ரவுண்டானா உயர்மட்ட பாலம் கட்டுவோம் என்று சொன்னார்கள், செய்யவில்லை. திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தி முடித்துக்கொடுக்கப்படும்.

    இந்த பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி அதிகம் நடக்கிறது. சில காலகட்டத்தில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த விலை வீழ்ச்சியை சரிக்கட்ட உங்கள் ஆதரவுடன் அடுத்தாண்டு அதிமுக அரசு அமைந்ததும், இப்பகுதியில் மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.

    இவ்வாறு கூறினார்.

    • பொன்னகரம் பீடரில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
    • ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை அரசடி துணை மின் நிலையம் பொன்னகரம் பீடரில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (2-ந் தேதி) நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏ.ஏ. மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் 2 முதல் 8 தெரு வரை,ஆர்.வி.நகர் 2,3-வது வரை, ஞான ஒளிவுபுரம், விசுவாச புரி 2 முதல் 5-வது தெரு வரை, ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்து உள்ளார்.

    • போலீசார் விசாரணையின்போது காவலர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு.
    • லாக்அப் டெத் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    நகை திருட்டு போனதாக கூறப்பட்ட வழக்கில் மடப்புரம் அஜித்குமார் என்ற காவலியை போலீசார் விசாரித்தபோது, அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் பல குறைகள் இருப்பதாக மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. குறைகளை திருத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
    • கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்கிற பெண் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணமகன் வீட்டார் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து, கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு திருமணத்தின்போது மணமகன் வீட்டார் 300 சவரன் நகை கேட்டபோது பெண் வீட்டார் 150 சவரன் தந்ததாகவும், மீதியை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிதர்ஷினியின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    • மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
    • மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சந்திர கிரகணம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.

    எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (8-ந்தேதி) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
    • பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12.20 மணிக்கு துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.

    மதுரையில் இருந்து துபாய் செல்ல தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    130 பயணிகளுடன் ஓடுபாதைக்கு சென்றபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

    நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தமிழக முழுவதும் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
    • வாக்காள பெருமக்கள் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும்.

    மதுரை:

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதல் கட்ட பயணத்தை தொடங்கிய அவர் தற்போது வரை 3 கட்ட பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ள அவர் தனது 4-ம் கட்ட பயணத்தை வருகிற 1-ந்தேதி மதுரையில் தொடங்குகிறார்.

    மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம், பந்தல்குடி கண்மாய் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அவர் கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தமிழக முழுவதும் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில் இந்த பயணம் உள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரைக்கு, முருகப்பெருமான் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், கடைசி படை வீடான பழமுதிர்ச்சோலை, உலகப் பிரசித்தி பெற்ற சித்திரத் திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மக்களுக்கு வரமளிக்கும் உலகப்பிரசித்தி பெற்ற நம் மாமதுரைக்கு எடப்பாடியார் வருகை தருகிறார்.

    மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் தண்ணீரை நிரப்பி மக்களின் மனதை குளிர வைத்தும், வைகை நதியை பாதுகாத்தும், உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தனது பொற்கரங்களால் துவக்கி வைத்தும், மதுரை மக்களுக்கு திட்டங்களை வாரி வாரி வழங்கி அன்பும், உழைப்பும், கருணையின் அடையாளமாக திகழும் எடப்பாடியாரை மக்கள் வரவேற்க தயாராகி விட்டனர்.

    கொரோனா காலத்தில் ஆல் பாஸ் வழங்கிய ஆல் பாஸ் முதல்வர், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்க 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய சமூக நீதிக் காவலர் எடப்பாடியார் வருகின்ற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார்.

    குறிப்பாக வருகின்ற ஒன்றாம் தேதி திருமங்கலம் தொகுதியில் உள்ள அம்மா கோவிலில் எழுச்சி பயணத்தை மேற்கொள்ளும் போது அவரை வரவேற்க தங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எடப்பாடியாருக்கு முளைப்பாரி வைத்து தாய்மார்களும், விவசாய மக்களுக்கு திட்டங்களை வாரி வழங்கிய எடப்பாடியாருக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் கிராமிய, கலாச்சாரமிக்க எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்க விவசாய மக்களும், மாணவர்கள், இளைஞர்கள் என திரண்டு எடப்பாடியாரை வரவேற்க தயாராகி விட்டனர்.

    மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர அனைவரும் சூளுரை ஏற்க தயாராகி விட்டார்கள். ஆகவே திருமங்கலம் தொகுதி எழுச்சி பயணம் வரலாறு படைக்கப் போகிறது. வாக்காள பெருமக்கள் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
    • நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க மதுரை மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரையில் தி.மு.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் பணியா? என்று பொதுமக்களே கேவலமாக பேசுகிறார்கள். இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் சைலண்ட் ஆகிவிட்டார். அவர் வருகிற தேர்தலில் நிற்பாரா? நிற்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. உங்க பொங்க சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

    அரசு நிகழ்ச்சிகளில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்வதை கூட மக்கள் அசிங்கமாக பார்க்கிறார்கள். மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடுகள் நடந்துள்ளதை ஏன் அமைச்சர்கள் கண்காணிக்கவில்லை. மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்கள் இரண்டு பேரும் மாநகராட்சியை கண்காணித்து இருந்தால் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள சொத்துவரி முறைகேடுகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேருமே காரணம்.

    மாநகராட்சியில் நிழல் மேயராக மேயரின் கணவர் இருந்தார். அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மேயர் இன்னும் பதவி விலகவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நேர்மையான விசாரணை நடக்கும். ஆனால் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தமில்லாத நபர்களை விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அழைக்கிறார்கள், இது ஏற்கத்தக்கது அல்ல. மதுரை மாநகராட்சி மேயர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பாகும். அடுத்து வரும் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் கலந்துகொண் டால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். மதுரை மேயர் பதவியில் நீடித்தால் தி.மு.க.வுக்கு தொடர்ந்து கெட்ட பெயர் மக்கள் மத்தியில் ஏற்படும்.

    அமைச்சர் மூர்த்தி இன்னும் 6 மாதத்திற்கு பிறகு எங்கு இருப்பார் என்று தெரியாது. அநேகமாக நார்வே, சுவீடன் போன்ற நாடுகளுக்கு அவர் சென்று விட வாய்ப்பு இருக்கும். மத்திய, மாநில நிதியை கொண்டு சாலைகள் போடுவது சாதனை இல்லை. நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.

    40 ஆண்டு காலமாக நிறையாத தெப்பக்குளத்தை வைகை தண்ணீர் மூலம் நிரப்பினோம். ஆனால் இப்போது அந்த தடுப்பணையில் உள்ள ஒரு செட்டர் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்துள்ளது, இதுவே ஒரு முறைகேடாகும். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை அவர்கள் சொல்ல முடியுமா?

    முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் பகுதியில் இந்த தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனை குடித்த பெண்கள் இளநீர் போல தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தண்ணீரை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. தாகம் தீர்த்த அவரை வரவேற்க மதுரை மக்களே தயாராக இருக்கிறார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார். திசை தெரியாத காட்டுக்குள் சென்று விட்டு வழி தெரியாமல் தவிப்பது போல தவித்து வருகிறார். வேறு எதுவும் அவரைப் பற்றி சொல்வதற்கு இல்லை. அ.தி.மு.க. எப்பொழுதும் தனது கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாது. அது திருமாவளவனுக்கும் தெரியும். கொள்கைகளை கடைபிடிப்பதில் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா?
    • நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான்.

    மதுரை:

    மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சியில் வருகிற பிப்ரவரி 7-ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஒரு கட்சியின் மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என வருகிற பிப்ரவரி 7-ந்தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள். அந்த மாநாட்டில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என பொறுத்திருந்து பாருங்கள்.

    ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜய்யின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்கள். அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்.

    த.வெ.க. மாநாட்டில் மரணம் என்பதை கட்சி மரணம் என்று பார்க்க முடியவில்லை. விஜய்யின் பவுன்சர்கள் அத்துமீறல் குறித்து ஓட்டு கேட்கும் போது நீங்கள் இவ்வாறு ஆக வர முடியாது அல்லவா? விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள். நான் வைத்திருப்பது விதை நெல். பதர் கிடையாது.

    விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல், சுனாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள், தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள்.

    புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும், பா.ஜ.க. விற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்கிறீர்களா? அமலாக்கத்துறை சோதனை செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோ பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி?

    பீகார் முதல்வர் சொல்வது குறித்து ஈரோட்டில் காசு கொடுக்கும்போது தடுக்காத தேர்தல் ஆணையம், கள்ள ஓட்டு போடும் போது தடுக்காத தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் எப்படி நேர்மையாக இருக்கும். மொத்தமாக தவறாக தான் இருக்கும். வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்த மெஷினை ஜப்பான் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. ஆனால் ஜப்பானில் எந்திர வாக்குப்பதிவா நடக்குது.

    பின்னர் எதற்கு 42 நாள் வாக்குப்பதிவு மெஷினை உள்ளே வைக்கிறீர்கள். போலீசே அதற்கு பாதுகாப்பு. உன்னிடம் சம்பளம் வாங்கக்கூடிய போலீஸ் தான் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். வாக்கு பெட்டியை மாற்றமாட்டார்களா?

    முதலீடு ஈர்க்க முதல்வர் வெளிநாடு செல்கிறார். முதலீடுகள் ஈர்க்க சென்றால் ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது எனக்கூறினாரா?. தேர்தலில் நான் தனியாகத்தான் நிற்பேன். கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள்.

    நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான். இதுபோல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும். கம்யூனிஸ்டு கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள். பா.ஜ.க. ஆபீசில் இஸ்லாமிய ஆணையும், இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும், தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடத்தி வைப்பார்களா?

    முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×