என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் போது கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து வினாடிக்கு 1644 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
    • பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் துவாரகாபுரி கிராமத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிருபவர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், புயல் காரணமாக 3 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வேளாண் பயிர் நீரால் முழுங்கி நாசமாகி உள்ளது. வேளான் துறை அதிகாரிகள் பாதிப்பு குறித்து நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விலை நிலத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இழப்பீடு குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இழப்பீடு வழங்கப்படும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நீர்வழி ஆக்கிரமிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அண்ணாந்து பார்த்து துப்பிக்கொள்வது போலாகும். வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சாட்டினால் அந்த பாதிப்புக்கு முழு பொறுப்பு அவர்கள் தான். காரணம் 10 ஆண்டுகள் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

    பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது. அவர்கள் நேரடியாக பார்வையிட்ட பின் பாதிப்பு குறித்து கூறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது.
    • ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.

    ஓசூர்:

    கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பலமாகவும், பரவலாகவும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 600 கன அடிநீர் வந்தது. 600 கன அடி நீரும், ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, விநாடிக்கு 680 கன அடிநீர் வந்தது. அதே அளவு நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில், கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகள் மழை நீரில் கலந்து, தொடர்ச்சியாக கெலவரப்பள்ளி அணைக்கு வருவதால், அணை நீரில் நுரை பொங்கி குவியல், குவியலாக துர்நாற்றத்துடன் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறியவாறு உள்ளது. மேலும் இந்த ரசாயன நுரைகள் காற்றில் பறந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் விளைபயிர்கள் மீது படிந்து வருகின்றன.

    இதனால், விவசாயிகளும், கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

    • தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
    • பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் ஊத்தங்கரையில் ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பபட்டன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. ஆங்காங்கே மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது.

    தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.

    இந்த பாறை அடிவாரத்தில் உள்ள மேல்தெருவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாசலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பாறை வெங்கடாசலத்தின் வீட்டின் பின்புறமுள்ள சுற்றுசுவர் மீதும், அந்த சுவரின் அருகில் இருந்த மற்றொரு பாறைமீது மோதி தடுத்து நின்றதால், வீட்டில் வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.

    மேலும், அந்த மேல் தெருவில் 20-க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பாறை உருண்டு விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டதால் வெங்கடாசலம் குடும்பத்தினர், அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் வீட்டுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தாசில்தார் வளர்மதி, போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறையை பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள், மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலையில் இருந்து இந்த ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்த ராட்சத பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து அடிவார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பத்திரமாக மீட்பு பணிகளில் கிருஷ்ணகிரி போலீசார், தீயணைப்பு துறையினர், மாவட்ட பேரிடர் மீட்பு பணி குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், அடிவார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால், அவர்களது குடியிருப்புகளுக்கு இடையே விழுந்த ராட்சத பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த பாறை மேலும் உருண்டு விழுந்து சாலை வரை வந்திருந்தால் அடுத்தடுத்து உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் உடல் நசுங்கி பலியாகி இருப்பார்கள். அந்த பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • உதயநிதி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி வருகை, வெள்ள பாதிப்புகளால் ரத்ததானது.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (5-ந் தேதி) கிருஷ்ணகிரி அருகே நடக்கும், தி.மு.க.வினர் இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது. இதற்காக அவரை வரவேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வினர் பேனர்கள், கொடி கம்பங்களுடன், சுவர் விளம்பரங்களை எழுதினர்.

    உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தயார் செய்யும் பணியில், அரசு அலுவலர்களும் ஈடுபட்டு, அரசு சார்பில் முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து அறிக்கைகளும் கேட்கப்பட்டு இருந்தன.

    தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் 'ஃபெஞ்சல்' புயலால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த, 4 நாளாக மழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மீட்பு பணிகள், வெள்ள பாதிப்புகளை கணக்கிடும் பணி, நிவாரணம் குறித்து அறிக்கைகள் சமர்பிக்கும் பணிகளில், அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் (6-ந் தேதி) தருமபுரி மாவட்டத்திற்கும் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்க வாய்ப்பில்லை எனவும், பின்னர் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது.
    • சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி வழிந்ததால் சுமார் 22 கிராமங்கள் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து ஊத்தங்கரையில் 50 செ.மீ அளவு மழை பொழிந்தது.

    இதன் காரணமாக ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்தன. அதில் ஒரு ஏரியான பரசன ஏரி நிரம்பி அதன் உபரி நீர் ஊத்தங்கரை நகர பகுதி, பஸ் நிலையம், திருப்பத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

    வெள்ளம் நீர் ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பேரூராட்சி திருமண மண்டபம், தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் 2-வது நாளாக இன்றும் மழை அவ்வப்போது பெய்து வருவதால், பொதுமக்கள் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, நிவாரண உதவி பொருட்களை மாவட்ட நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினர் வழங்கி வருகின்றனர்.

    ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 111 ஏரிகள் நிரம்பி உபரிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அங்குள்ள தரைபாலங்கள் மூழ்கியது. இதனால் கீழ்குப்பம், காட்டேரி, அனுமன்தீர்த்தம், காரப்பட்டு, கல்லாவி, சாமல்பட்டி உள்ளிட்ட 22 கிராமங்கள் சாலையில் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டது.

    மேலும், அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.




    ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியது. மேலும், ஊத்தங்கரை பகுதியில் இன்றும் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட அண்ணா நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.

    ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோன்று போச்சம்பள்ளியில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறிதால், பஸ் நிலையம், போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் ஒரு இருசக்கர வாகனம், ஆடுகள், கோழிகள் அடித்து செல்லப்பட்டன.

    ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    தொடர் மழையால் தென்பெண்ணையாற்றில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பட்டு உள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி கரையோர வசிக்கும் பொதுமக்களையும் பேரிடர் மீட்பு பணி குழுவினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    அரூரில், திரு.வி.க. நகர் மேற்கு, தில்லை நகர், மேல்பாட்சாபேட்டை, அம்பேத்கர் நகர் புது காலனி, ஆத்தோர வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அவதியடைந்தனர்.

    அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த தொடர்மழையால், சங்கிலிவாடி ஏரி, கோணம்பட்டி ஏரி மற்றும் எல்லப்புடையாம்பட்டி, செல்லம்பட்டி, லிங்காபுரம், பெரமாண்டப்பட்டி, மாம்பட்டி, கணபதிப்பட்டி ஏரிகள் நிரம்பின. அரூரில் 90 சதவீதத்திற்கு மேலான ஏரிகள் நிரம்பின.

    அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

    தடுப்பணைகள், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் விளை நிலங்களில் புகுந்தும், தேங்கியும் உள்ளது. மேலும், சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் மற்றும் திருப்பாறை நீரில் மூழ்கியுள்ளது.

    இதேபோன்று அரூரை அடுத்த சித்தேரி மலைப்பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

    அப்போது, வாகனங்கள் ஏதும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சித்தேரி மலை கிராம பகுதி முழுவதும் செல்வதற்கு வழியில்லாமல் துண்டிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் உடனே அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சித்தேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருக்கம்பட்டி, கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் பீன்ஸ், மஞ்சள், நெல், கொள்ளு உள்ளிட்ட விவசாய பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்கு காத்திருந்த நேரத்தில், தொடர் மழை காரணமாக 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த எல்லா பயிர்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், விவசாய நிலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதேபோன்று வாச்சாத்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து நீர் வெளியேற வழியின்றி உபரிநீர் வெளியேறும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வார்சாத்தி, கூக்கடப்பட்டி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் நெல், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

    வத்தல் மலையில் பெய்த கனமழையால், நேற்று அதிகாலை முதல், காட்டாற்று வெள்ளம் உருவாகி, நீரோடைகள் வழியாக மலை அடிவாரத்திலுள்ள தடுப்பணைகளில் சீறி பாய்ந்தது. இதில், வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலை துண்டிப்பால், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    இதனால், வத்தல் மலையிலுள்ள, 10 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அங்கிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்பகுதியில், தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், லோகநாதன் ஆகியோர் தலைமையில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொண்டனர். இதனால் பாலம் அமைத்து போக்குவரத்து சீரானது.

    இதேபோன்று பொம்மிடி அருகே உள்ள பையர் நத்தம் ஊர் ஏரி கனமழை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு பையர் நத்தம் அம்பேத்கர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடையுடன் கலந்த மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதே போல பொம்மிடி அருகே உள்ள கோட்டை மேடு என்ற இடத்தில் வேப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மரம், செடி, கொடிகள் ஆங்காங்கே அடைப்பை ஏற்படுத்தி வயல்வெளிக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

    கோட்டைமேடு தரைப்பாலம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டு ஆற்று வெள்ளம் அடித்து செல்லப்பட்டதால், துண்டிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட எல்லையில் உள்ள கிராம மக்கள் போக்குவரத்து வழியில்லாமல் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் இந்த பகுதியில் உள்ள 8-க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகம் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த கனமழையால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி சேதமானது.

    • ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
    • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் 10 வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், ஊத்தங்கரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது.
    • சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும்.

    சிங்காரபேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் வெள்ளம் பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது. ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

    இதனால் சேதமடைந்த வாகனங்களை சரிசெய்ய அதிக செலவு ஆகும். அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

    • காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடின.
    • கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

    சிங்காரபேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 50 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதனால் ஊத்தங்கரை அருகே உள்ள பரசன் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஏரி உடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடின.

    இந்த ஏரியின் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரி, கார்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் ஏரியின் அருகில் உள்ள அண்ணாநகர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல வீடுகளில் வைத்திருந்த பொருட்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    இந்த வெள்ளம் பாதிப்பு குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஊத்தங்கரை பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் முகாமில் தங்க வைத்து இருந்தவர்களை ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

    அப்போது அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    ஃபெஞ்சல் புயலால் பெய்த அதி கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து சிறியது முதல் கனரக வாகனங்கள் வரை கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • கழுதை பாலை விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கழுதை நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.

    கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார்.

    இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது.

    உடனே அவர் கொட்டாகைக்கு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்தை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் தலையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆனந்த் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்கு வந்த மர்ம நபர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் பின்னர் கழுதையின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை எடுத்து சென்றுள்ளனர்.

    நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறை எச்சரிக்கை.
    • விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று நள்ளிரவு நாகமங்கலம் கிராமத்தை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தன.

    இந்த யானைக்கூட்டம், அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே, சானமாவு, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப் பள்ளி, கொம்மேப்பள்ளி, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்பவர்கள் என அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×