என் மலர்
கிருஷ்ணகிரி
- திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரகரை கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது35) விவசாயி. இருவடைய மகள் திவ்யாஸ்ரீ (10). இந்த சிறுமி தாவரகரை அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை திவ்யாஸ்ரீ கழிவறை அருகே சென்றுள்ளார். அப்போது கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்டுள்ளார். அப்போது திவ்யாஸ்ரீ உடலில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே இரவு நேரங்களில் யானை வராமல் இருக்க கிருஷ்ணன் மின் விளக்கு அமைத்து இருந்தார். அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது. அதை அறியாமல் திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த கிரி என்ற ஒற்றை காட்டு யானை விவசாயிகள் மற்றும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.
காது கேட்காத இந்த ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் விவசாயிகள் விரட்டினாலும் அது அசராமல் அப்படியே நிற்கும், இந்த காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இந்த கிரி ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியாக தற்போது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே வந்துள்ளது. அந்த பகுதியில் சாலையோரம் சுற்றித்திரிந்த இந்த காட்டு யானை குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காது கேட்காத இந்த கிரி ஒற்றை காட்டு யானையால் போடிச்சிப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, பென்னிகல் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.
- புயல் தாக்கத்தில் நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஒட்டியவாறு பழைய கோட்டை ஏரி அமைந்துள்ளது.
74 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரியில் 2 மதகுகள் உள்ள நிலையில் இந்த ஏரி கடந்த ஃபெஞ்சல் புயல் தாக்கத்திலே நிரம்பிய நிலையில் மதகுகள் திறக்க முயன்ற பொழுது மதகுகள் திறக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் நீர் சரியான முறையில் வெளியேறாமல் நீர் பிடிப்பு பகுதியாக உள்ள பகுதியை தாண்டி அருகில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வீடுகளில் நீர் சூழ்ந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியின் மதகு திறப்பதற்கான வழிவகைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்பள்ளி சாமல் பள்ளம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டு இருந்தது.
மல்லசந்திரத்தில் சேர்ந்த முருகன் மகன் சதீஷ் (வயது 25) என்பவர் கூலி வேலைக்காக சாமல் பள்ளத்தை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் பள்ளி பஸ் மல்லசந்திர பகுதிக்கு வந்தபோது திடீரென்று சதீஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த சதீஷின் தாய், தந்தை மற்றும் உறவினர் 100 மேற்பட்டவர்கள் பஸ்டிச முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
- கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ளது ஜாகீர் வெங்கடாபுரம். இதன் அருகில் உள்ள குல்நகர், அதியமான்நகர், பாஞ்சாலியூர், கொண்டே பள்ளி, பையனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன், வனவர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அதியமான் நகரில் உள்ள வெற்றிச்செல்வன் என்பவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று சுற்றி திரிவது பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் காலடி தடத்தை பதிவு கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறியதாவது:
கடந்த 9-ந் தேதி இரவு அதியமான் நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இரவு முழுவதும் பட்டாசுக்கள் வெடித்தும், சத்தம் எழுப்பியவாறு சிறுத்தை தேடும் பணி நடந்தது. காலையில் சிறுத்தையின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சிறுத்தை யாரும் கண்ணிலும் தென்படவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் பதிவாகவில்லை. பட்டாசு வெடித்தால், அங்கிருந்து இடம் பெயர்ந்து இருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். விழிப்புடன் இருந்து, சிறுத்தை நடமாட்டம் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்காக கிருஷ்ணகிரி முழுவதும் தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அப்பகுதியிலும், சமூக வலைதளத்திலும் வேகமாக பரவியது. மேலும், ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவிகள் பள்ளி நேரத்தில் வகுப்பறைவிட்டு வெளியே செல்வதற்கு ஆசிரியர்கள் தடை விதித்துள்ளனர். காலை, மாலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர ஏதுவாக உரிய நடவடிக்கைகளை பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்திட வேண்டும். மேலும் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன.
- 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன.
தளி:
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இவை பல குழுக்களாக பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூர் சானமாவு காட்டிற்கு 32 யானைகள் வந்தன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது யானைகள் 2 குழுக்களாக பிரிந்தன. 11 யானைகள் போடிச்சிப்பள்ளி வழியாக காடு உத்தனப்பள்ளி, ஒன்னு குறுக்கி, கோட்டட்டி வழியாக தேன்கனிக் கோட்டை அருகே உள்ள பேவநத்தம் காட்டிற்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்றன.
அதேபோல 21 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் வழியில் ஒன்னுகுறுக்கி அருகில் மலைப்பகுதி ஒன்றில் நின்றன. அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த யானைகளை ஏற்கனவே சென்றுள்ள 11 யானைகளுடன் சேர்த்து மொத்தம் உள்ள 32 யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது அந்த யானையை சின்னக்குத்தி வனப்பகுதிக்கு விரட்டி உள்ளனர். இதனால் சின்னக்குத்தி, பெரியகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி, உள்ளிட்ட பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது.
- மழை வெள்ளத்தால் சேதமான வாகனங்களை பார்வையிட்டு அதன் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 1-ந் தேதி இரவு இடைவிடாத 50 செ.மீ அளவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
மேலும், ஊத்தங்கரையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் பொருட்கள் சேதமானது. இதன் காரணமாக ஊத்தங்கரையில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக சசிகலா இன்று வருகை தந்தார்.
அவர் மழை வெள்ளத்தால் சேதமான வாகனங்களை பார்வையிட்டு அதன் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 900-க்கும் மேற்பட்ட ஏரிகள் கன மழை பெய்தும் நிரம்ப வில்லை.
நீர்வளத்துறை என தனியாக இலாக இருந்தும் மாவட்டத்தில் நீர் மேலாண்மையை தி.மு.க. தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. கார் பந்தயம் உள்ளிட்டவைக்கு செலவு செய்யும் தி.மு.க.அரசு மக்கள் திட்டங்களை செயல்படுத்த மறுக்கின்றது. புயுல் காரணமாக கனமழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை.
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை சீராகத் திறந்து விடாததே வெள்ளப்பெருக்கு காரணம். முன் அறிவிப்பின்றி பொது மக்கள் தூங்கி கொண்டிருக்கும்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணையாற்றில் அதிகளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொது மக்கள் பாதிப்படைத்து உள்ளனர்.
தி.மு.க. மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே, அடுத்த முறை அவர்கள் ஆட்சிக்கு வரபோவதில்லை. கண்டிப்பாக 2026-ம் ஆண்டு அம்மா ஆட்சிதான் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.
- பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் 148 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாலக்கோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.
50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 48.3 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 140 கன அடியாக உள்ளது.
அதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் 148 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் எந்த நேரத்திலும் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் ஆற்றோரும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
- அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- சுண்டக்காப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுட்டிக்காட்டி கிராமத்தின் நலம் வேண்டியும் உலகம் நலம் வேண்டியும் சிவசொருபமான அரசமரத்திற்கும், பார்வதி சொருபனமான வேப்பமரத்திற்கு திருக்கல்யாணம் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.
இதில் ஊர் பொது மக்கள் 200-க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டனர். பெண், மாப்பிள்ளை விட்டார்கள் சார்பில் மணமகன், மணமகளுக்கு தாம்பூல தட்டில் சீர்வரிசை, சீதனங்களை மங்கல இசை வாத்தியம் முழங்க முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
மணமகனாக அரசமரத்துக்கும் - மணமகளாக வேப்பமரத்திற்கும், புத்தாடை அணிவித்து ஜோடித்தனர். அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் கன்னிகாதானம் செய்த பின் மங்கள வாத்தியம் இசைக்க பூசாரி வேத மந்திரங்கள் முழங்க வேப்பமரத்துக்கு மாங்கல்யம் கட்டினார்.
பின்னர் திருமணத்துக்கு வந்தவர்கள், மொய் எழுதினர். இதில் சுண்டக்காப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஜவளகிரி காப்பு காட்டில் இருந்து நேற்று அதிகாலை 8 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி கங்கனப்பள்ளி, கும்ளாபுரம் கிராம வழியாக சுற்றித்திரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை கிராமப்பகுதிக்குள் புகுந்து விடாதவாறு கும்ளாபுரம் வழியாக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதிக்கு அருகே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள தைலதோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தற்பொழுது 8 காட்டு யானைகளும் தைலதோப்புக்குள் தஞ்சமடைந்துள்ளன.
வன காவலர்கள் மற்றும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவைகள் மீண்டும் வெளியேறாதவாறு அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டனர்.
கும்ளாபுரத்தில் இருந்து ஆனைக்கல் செல்லும் சாலையை கடந்த யானைகள் தேவரபெட்டா வனப்பகுதிக்கு சென்றன. இதற்கிடையே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் நேற்று, முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து தாவரக்கரை வனப்பகுதிக்கு சென்றன.
அங்கு 25 க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும் கிரி யானை உட்பட 3 யானைகள் மற்றொரு குழுவாகவும் முகாமிட்டுள்ளன.
தேன்கனிக்கோட்டை அருகே சாப்பரானப்பள்ளி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே நுழைந்த கிரி என்கிற ஒற்றை யானை அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைந்து ராகி, சோளம் தின்றும் மிதித்தும் நாசம் செய்தது.
விவசாயிகள் பட்டாசுகள் போட்டும், யானை நகராமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே நின்றன. பிறகு அங்கிருந்து சென்ற யானை தின்னூர், லக்கசந்திரம் வழியாக நொகனூர் வனப்பகுதி சென்றது.
- ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
- நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், ஏ.எம்.எஸ்., மில்க் புராடக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற முறையில், பால் உற்பத்தி பொருட்கள் மற்றும் நெய் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சுகாதாரமற்ற டிரம்களில், 125 கிலோ அளவில் பூஞ்சை பிடித்த நிலையில் வெண்ணை, பட்டர் கிரீம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை உடனடியாக அழித்தனர். மேலும் அங்கிருந்து, நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி, நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது.
- சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 செ.மீ. அளவில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஏரி நிரம்பி தண்ணீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர் கனமழை காரணமாக ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பின. மேலும், விவசாய நிலங்களில் உள்ள பயிர்களும் மூழ்கின.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் பெருமாள் கோவில் மலை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண் சரிவு அதிக மழை பெய்த காரணத்தினால் ஏற்பட்டதா? அல்லது மண்ணின் உறுதித் தன்மை குறைந்ததால் ஏற்பட்டதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






