உலகம் நன்மை பெற வேண்டி அரசமரம், வேப்பமரத்திற்கு திருமணம்

அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.சுண்டக்காப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலகம் நன்மை பெற வேண்டி அரசமரம், வேப்பமரத்திற்கு திருமணம்
Published on

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுட்டிக்காட்டி கிராமத்தின் நலம் வேண்டியும் உலகம் நலம் வேண்டியும் சிவசொருபமான அரசமரத்திற்கும், பார்வதி சொருபனமான வேப்பமரத்திற்கு திருக்கல்யாணம் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.

இதில் ஊர் பொது மக்கள் 200-க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டனர். பெண், மாப்பிள்ளை விட்டார்கள் சார்பில் மணமகன், மணமகளுக்கு தாம்பூல தட்டில் சீர்வரிசை, சீதனங்களை மங்கல இசை வாத்தியம் முழங்க முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

மணமகனாக அரசமரத்துக்கும் - மணமகளாக வேப்பமரத்திற்கும், புத்தாடை அணிவித்து ஜோடித்தனர். அரசமரம் மற்றும் வேப்பமரத்திற்கு முன்பு யாகசாலையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் கன்னிகாதானம் செய்த பின் மங்கள வாத்தியம் இசைக்க பூசாரி வேத மந்திரங்கள் முழங்க வேப்பமரத்துக்கு மாங்கல்யம் கட்டினார்.

பின்னர் திருமணத்துக்கு வந்தவர்கள், மொய் எழுதினர். இதில் சுண்டக்காப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com