என் மலர்tooltip icon

    கரூர்

    • பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
    • அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது.

    திண்டுக்கல்:

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய ஜோதி மணி எம்.பி. அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்பாராதவிதமாக கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட வசை பாடாமல் இருப்பது நல்லது.

    தற்போதைய சூழலில் சமூக வலைதளம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனி ஊடகமாக செயல்பட்டு வருகிறது. எனவே அதனை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். நெருக்கடியான நேரத்தில் பணியாற்றியவர்கள் மீது அவதூறு பரப்ப பயன்படுத்த வேண்டாம்.

    நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவில் தனது தவறை உணர மறுத்துள்ளார். புதிய கட்சி என்பதால் அவர்களுக்கு ஒரு கூட்டத்தை நடத்த தெரியவில்லை. எனவே இக்கட்டான சூழ்நிலையில் தார்மீக பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு நான் இருப்பேன் என்று விஜய் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் இது அரசியல் களம் கிடையாது. மரணம் நிகழ்ந்துள்ள துயர வீடு. அந்த இடத்தில் நான் எதையுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அரசியல் செய்வது சரியானது அல்ல.

    கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அப்போது இதே அருணா ஜெகதீசன் தலைமையில்தான் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

    அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது. இதற்கு கரூர் மண்ணை பயன்படுத்த வேண்டாம். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. தமிழக அரசு நியமித்துள்ள ஆணையக்குழு சரியாக முடிவை அறிவிக்கும் அதன் பின்பு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே இந்த விஷயத்தில் சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக பற்றி எரிந்தது. அங்கு பிரதமர் செல்லவில்லை. அந்த மாநிலத்தின் முதல்வர் செல்லவில்லை. ஆனால் ராகுல்காந்தி சென்றார். நாங்கள் நினைத்திருந்தால் அங்கே ஒரு நபர் ஆணைய குழுவை அமைத்திருக்கலாம். எதிர்க்கட்சியாக இருந்தும் நாங்கள் அதனை விரும்பவில்லை. ராகுல் காந்தி அங்கு சென்றது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லத்தான்.

    விஜயுடன் ராகுல் காந்தி பேசியதை வைத்து அரசியல் முடிச்சு போட்டு பேசுகிறார்கள். ராகுல் காந்தி தென் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வந்த பிறகுதான் உண்மையிலேயே விஜயுடன் பேசினாரா? என்ற விபரம் வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. ஆட்சியிலும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    * ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதா?

    * 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கலாமா? என்று அவர் விமர்சனம் செய்தார்.

    • தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
    • விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * த.வெ.க. தலைவர் விஜயுடன் வந்தவர்களும் கூட்டத்திற்குள் வந்ததே நெரிசலுக்கு காரணம்.

    * சம்பவம் நடந்தபோது நான் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன்.

    * நடந்த துயரத்திற்கு பொறுப்பேற்காமல் அரசு மீது மடைமாற்றி விடுகின்றனர்.

    * தவறு நடந்தால் எந்த இயக்கமும் பொறுப்பேற்க வேண்டும்.

    * உண்மை கண்டறியும் குழு மணிப்பூர் சென்றிருந்தால் ஏற்புடையதாக இருக்கும்.

    * கட்சி அலுவலகத்தில் இருந்து அமராவதி மருத்துவமனை அருகில் தான் உள்ளது.

    * விஜய் நடத்திய எல்லா கூட்டங்களிலும் தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

    * விஜய் பேச ஆரம்பித்தன 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டுள்ளது.

    * கூட்டத்திற்கு 3 மணிக்கு அனுமதி பெற்று விட்டு 12 மணிக்கு உரையாற்றுவதாக அறிவித்தது ஏன்?

    * த.வெ.க. தலைவர் விஜய் கட்டுக்கடங்காத கூட்டத்திற்குள் பேருந்தில் சென்றது ஏன்?

    * கூட்டத்திற்கு வரும்போது திடீரென த.வெ.க. தலைவர் பேருந்துக்குள் சென்றது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
    • நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்ட நெரிசல் காரணமாக த.வெ.க. தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றனர்.

    * தொண்டர்கள் சென்ற காரணத்தால் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது.

    * ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.

    * கூட்டம் நடக்கும் 500மீ முன்னர் விஜய் பேருந்தின் உள்ளே சென்றது ஏன்?

    * விஜயின் கவனத்தை ஈர்க்க அந்த கட்சி தொண்டர்களே செருப்பை எறிந்திருக்கலாம்.

    * அரசியல் தலைவர்கள் முன்சீட்டில் அமர்ந்து கை காட்டுவது வழக்கம்.

    * விஜய் பிரசார பகுதிக்கு வந்ததும் வாகனத்தின் முன்பகுதி லைட் அணைக்கப்பட்டது.

    * எல்லா நாளும் வாகனம் ஓட்டும் எனக்கு இன்று மட்டும் விபத்து ஏன் ஏற்பட்டது என்பது போல் உள்ளது.

    * தண்ணீர் கேட்டபோது கடைகள் பூட்டியிருந்ததால் தி.மு.க.வினர் கைவசம் இருந்த பாட்டில்களை கொடுத்தோம்.

    * காவல்துறையினர் அறிவுரையை த.வெ.க.வினர் கேட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

    * நாமக்கல்லில் இருந்து விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.

    * த.வெ.க. கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த எந்த ஆம்புலன்ஸ்களும் செல்லவில்லை.

    * கூட்டநெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க.வினர் உதவ முன்வரவில்லை.

    * த.வெ.க. கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டமல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.
    • த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் என்பது கொடுமையானது.

    * யாராலும் எந்த சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாத துயர சம்பவம்.

    * தமிழ்நாட்டில் எங்கும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    * கரூர் துயர சம்பவத்தை அரசயலாக பார்க்காமல் மனித நேயத்துடன் அணுக வேண்டும்.

    * கரூரில் உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறேன்.

    * ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம்.

    * தற்போதைய நிலவரத்தில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    * அனைவருக்குமான பொது நபராக மக்களின் அன்பை பெற்றுள்ளேன்.

    * த.வெ.க. கேட்ட இடங்களில் அதிகம் பேர் நிற்க முடியும் இடம் வேலுசாமிபுரம்தான்.

    * எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்து இடத்தை தேர்வு செய்வது கட்சிகளின் பணி.

    * லைட் ஹவுஸ் கார்னரில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் தான் நிற்க முடியும்.

    * கூட்டத்திற்கு வருவபவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும்.

    * தொண்டர்களுக்கு தேவையான குடிநீரை அளிக்க வேண்டியது கட்சிகளின் பொறுப்பு.

    * த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா?

    * லைட் ஹவுஸ் கார்னரில் அனுமதி கொடுத்திருந்தால் மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

    * விஜய் பிரசாரம் 4 மணிக்கு நடந்திருந்தால் கூட இந்த பெருந்துயரம் நடந்திருக்காது. விஜய் குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.

    கரூர்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.க்கள் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.

    பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர். அப்போது கரூர் எம்.பி. ஜோதிமணி, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்நிலையில், கரூர் பயணம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் ஏற்பட்ட துயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் தனியாக இல்லை என்ற செய்தியை அனுப்பி உள்ளோம். உண்மையில் முழு தமிழகமும் இந்தியாவும் வேதனையில் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் முழு நாடும் உங்களுடன் உள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தமிழக மக்களுடன் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    • கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர்.
    • தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    கரூர்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்களான ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட குழுவினர் இன்று மக்களைச் சந்தித்தனர்.

    அப்போது பா.ஜ.க. குழுவினரிடம் பெண்மணி ஒருவர் கூறுகையில், எதிர்ப்பக்கம் யாரோ சிலர் கைகளில் கத்தியால் கிழித்தனர். நான் இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.

    எனக்குத் தெரிந்த 4 பேர் கைகளில் கிழிபட்டு படுகாயம் அடைந்து ஜி.எச்.சில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

    ஸ்கூல் பிள்ளைகளில் சிலருக்கு கை உடைந்துள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

    எதிர்ப்பக்கத்தில் தான் மரத்தில் ஏறி இருந்தனர். அதிலிருந்து சிலர் கீழே விழுந்தனர். இந்தப் பக்க மரத்திலும் ஏறி இருந்தனர்.

    விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சிலர் ஏறி இருந்தனர் என தெரிவித்தார்.

    • பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை.
    • இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.

    த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

    இந்த குழுவினர் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து பேசினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபர்களையும் சந்தித்து பேசி ஆறுதல் கூறினர்.

    இந்நிலையில், என்.டி.ஏ. குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது ஹேமமாலினி எம்.பி. கூறியதாவது:

    * பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை.

    * விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர்.

    * விஜய் பிரசாரத்திற்கு குறுகிய இடத்தை போலீசார் கொடுத்து இருக்கிறார்கள்.

    * பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது.

    * கூட்ட நெரிசல் சம்பவத்தில் சந்தேகம் உள்ளது.

    * இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது.

    * என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம் என்று கூறினார்.

    அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,

    * உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை.

    * ஆளும் கட்சியும், அரசும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும்.

    * த.வெ.க.வும் பதில் சொல்ல வேண்டும்.

    * கரூர் துயர சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு கரூர் வந்தடைந்துள்ளது.
    • நேரில் பார்த்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

    பாஜக தேசிய தலைவர் ஹெமா மாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் 8 போர் கொண்ட குழுவை அமைத்து, கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். கூட்டல் நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அதன்படி 8 பேர் கொண்ட குழு இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தது. கரூர் சென்ற அவர்கள் விபத்தை நேரில் பார்த்தவர்களிடம், கூட்ட நெரிசல் நடைபெற்றது குறித்து கேட்டறிந்தனர்.

    அப்போது ஒருவர் "ஆதர் அர்ஜுனா விஜயிடம் சென்று மக்கள் மயக்கம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார். அவர்கள் உடனடியாக தண்ணீர் பாட்டில்களை விசினர். உள்ளூர் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சாலையின் அகலம் 19 அடி. வாகனத்திற்கு 12 அடி தேவைப்பட்டது. அசாதாரண நிலை ஏற்பட்ட பிறகு, அவர் பேச்சை முடித்து விட்டு, கிளம்பி விட்டார். விஜய் 10 நிமிடங்கள் மட்டுமே அந்த இடத்தில் செலவிட்டார்" எனக் கூறினார்.

    சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் "விஜய் பேச தொடங்கிய பிறகு 3 முதல் 4 நிமிடத்திற்குள் மக்கள் மயக்கம் அடையத் தொடங்கினர். அசாதாரண நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வரத் தொடங்கியத. அதுவும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது.

    நாங்கள் எல்லோரும் ஓட ஆரம்பித்தோம். எல்லாவற்றையும் சரி செய்ய 1 மணி நேரம் ஆனது. எங்கள் பக்கத்தில் இருந்து செல்லாத பலர் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் கூட்டத்தினரை மறுபக்கம் தள்ளாமல் பளத்தில் தள்ளினர்?" என்று கூறினார்.

    • உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை.
    • ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது.

    கரூர்:

    கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி ராணி கண்ணீருடன் கூறியதாவது:-

    எங்கள் குடும்பம் முழுவதுமே விஜயின் தீவிர ரசிகர்கள். விஜய் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே எனது கணவர் அவரின் ரசிகராக இருந்து வருகிறார். கடந்த 27-ம் தேதி பிரசாரம் நடைபெறுவதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி சென்றவர்தான். இப்போது வரை அவர் வீடு திரும்பவில்லை. எங்கு இருக்கிறார்... எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.

    ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது. நானும் விஜயின் தீவிர ரசிகை. பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு நானும் எனது 2 மகன்களும் சென்றிருந்தோம். எனது பிள்ளைகளை மிகவும் பத்திரமான இடத்தில் அமர வைத்துவிட்டு என் தோழிகளுடன் நடனமாடி செல்பி எடுத்து உற்சாகமாகத்தான் இருந்தோம். அங்கு எல்லோருமே அப்டித்தான் இருந்தார்கள்.

    விஜய் பிரசார இடத்திற்கு வரும் வரை அங்கு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. அவர் பிரசார வாகனம் வந்து நின்று பேச ஆரம்பித்த பிறகுதான் சலசலப்பு ஆரம்பித்தது. செருப்பு வீச்சு நடந்த பிறகு ஒருத்தர் ஒருவரை தள்ளி விடுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தொடங்கியது.

    உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை. வேண்டும் என்றே ஒரு கும்பல் உள்ளே இறக்கிவிடப்பட்டு அடிதடி நடத்தியது போல்தான் இருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோரை கழுத்தில் மிதித்தும், சாக்கடை பள்ளத்தில் தள்ளியும், அவர்கள் மீது விழுந்து மிதித்தும்தான் கொன்றார்கள்.

    சம்பவ இடத்தில் இருந்து நான் பார்த்தேன் என்பதை விட எனக்கும் அப்படியான ஒரு அனுபவம்தான் கிடைத்தது. என்னையும் அருகில் இருந்த சாக்கடை பள்ளத்தில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மிகவும் சிரமப்பட்டுதான் தப்பித்து வந்தேன். நானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பினேன்.

    என் கணவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததே தவிர அது தொடர்பான வீடியோ எதுவும் வரவில்லை. பிரசாரம் முடிவதற்கு முன்பு வரை அவர் எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், இப்போது அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. என்னிடம் இதுவரை காவல்துறையும் எந்த தகவலும் சொல்லவில்லை.

    ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைக்கிறேன். எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்து இருக்கிறீர்கள்.. அவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லுங்கள். அவரை என் கண்ணில் காட்டுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் பிரசாரத்தின் போது காவல்துறை எச்சரித்தும் விதிகளை பின்பற்றவில்லை என த.வெ.க. நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று கைது செய்யப்பட்டார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    அதில், விஜய் பிரசாரத்தின் போது காவல்துறை எச்சரித்தும் விதிகளை பின்பற்றவில்லை என த.வெ.க. நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த நிலையில், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று கைதான நிலையில், மேலும் ஒரு நிர்வாகி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் தெற்கு நகரப் பொருளாளர் பவுன்ராஜை, நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

    • ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
    • மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது.

    கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

    காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார்.

    இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.

    இதற்கிடையே, கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், கரூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    ×