என் மலர்
ஈரோடு
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி அருள்வாடி போன்ற 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
இங்கு கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இந்த பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. உள்ளதாகவும் இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசுக்கு ரூ.1 முதல் ரூ.2 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்
3 மாத பயிரான முட்டைகோஸ் 1ஏக்கர்க்கு நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என 50 வரை செலவு ஆகிறது.
இந்த முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்துள்ளது. வெளி மார்க்கட்டில் தற்போது கிலோ ரூ.15க்கு முட்டைகோஸ் விற்றாலும் விவசாயிகளிடம் இருந்து 1 ரூபாய் முதல் 2 ரூபாய் மட்டுமே வியாபாரிகள் கேட்கின்றனர்.
குறைந்தபட்சம் ரூ.10க்கு விற்றால் தான் ஓரளவு கட்டுபடியாகும். ஆனால் விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்பதால், முட்டைகோசை அறுவடை செய்வதா? இல்லை அப்படியே பூமியிலேயே விட்டு விடுவதா? என்று புரிய வில்லை.
இவ்வாறு வேதனையுடன் கூறினர்.
கடந்த 6 மாதமாக இதே நிலை நீடிப்பதால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினர்.
இந்தியாவில் தமிழகம் தொழில் துறையில் 3-வது இடத்தில் உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,10-ந் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடத்தி அதில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜனவரி மாதம் 23, 34-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளார். இந்தியாவிலேயே தொழில் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும் முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஈரோடு மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தி கொடுத்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செய்து கொடுத்துள்ளார்.
550 கோடி ரூபாய் மதிப்பில் ஊராட்சி கோட்ட குடிநீர் திட்டம், ரூ.64 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், ரூ.130 கோடியில் 1,520 அடுக்குமாடி குடியிருப்புகள்.
ரூ.43 கோடியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், ரூ.300 கோடியில் பெருந்துறை சாலையில் உயர்மட்ட மேம்பாலம். ரூ.18 கோடியில் புறவழிச்சாலை அமைக்கின்ற திட்டம் ஆகியவற்றை கொடுத்தற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சில கோரிக்கைகளையும் சட்டசபையில் பதிவு செய்து கொள்கிறேன். ஈரோட்டுக்கு ஒரு அரசு மகளிர் கல்லூரி வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
அதே போன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும்.
ஈரோடு-சத்தி சாலையை நான்கு வழிச்சாலையாகயும், பவானி சாலையை நான்கு வழிச்சாலையாகவும் மாற்றி கொடுக்க வேண்டும். அதே போல் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டை ரூ.100 கோடி மதிப்பில் அடுக்குமாடி மார்க்கெட்டாகவும், ஈரோடு முனிசிபல் சத்திரத்திலுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்புகளும், ஈரோடு சி.என்.சி.கல்லூரியை அரசு கல்லூரியாகவும், ஈரோடு நடராஜா தியேட்டர் பகுதியிலுள்ள மரப்பாலம், குய்வன் திட்டு பகுதியில் உள்ள 396 அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளதால் இங்கு புதிய குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டை அடுத்த பட்லூர் நால்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சி தானந்தம் தலைமை தாங்குகிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் வருகின்ற தேர்தலுக்கு கட்சியினரை தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணை தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, வடக்கு மாவட்ட துணை தலைவர் எ.சே துவெங்கட்ராமன் வடக்கு மாவட்ட பொருப்பாளர் மோகன்கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த தகவலை ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தெரிவித்து உள்ளார். #Tamilnews
ஈரோடு:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குடவல்லூரைச் சேர்ந்தவர் பிஜூ (வயது45). இவரது தந்தை கேசவன் (70).கேசவன் பெங்களூரு, சிக்கஹன்னி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி பெங்களூரு சென்ற பிஜூ தனது தந்தை கேசவனை அழைத்து கொண்டு குடவல்லூர் செல்வதற்காக பெங்களூரில் இருந்து கேரளா செல்லும் ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
இரவில் கேசவனும். பிஜூயும் தூங்கினர். மறுநாள் (8-ந் தேதி) அதிகாலை இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது. அப்போது பிஜூ தனது தந்தை கேசவனை பார்த்த போது அவர் அங்கு இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிஜூ அங்குள்ள பெட்டிகளில் தேடியுள்ளார். ஆனால் கேசவன் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து பிஜூ ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கேசவனை தேடி வருகிறார்கள்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.
ஊட்டிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் மலை அடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 3251 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதையொட்டி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும் இன்று பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 55.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 57.46 அடியாக உயர்ந்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வருவதையொட்டி அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் பாசனத்துக்கு வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் உள்ளனர்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டப்படும் கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நம்பியூர் அடுத்த திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜையிலும் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த 2 நிகழ்ச்சியின் போதும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் தனது கல்விதுறை சம்பந்தமானவற்றையே கூறினார்.
பேட்டியின்போது அரசியல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூற மறுத்தார்.
“அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க... அதற்கென்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளார். அவரிடம் அரசியல் கேள்விகளை கேளுங்க...” என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய- மாநில அரசுகள் துணையுடன் நம்பியூர் அருகே உள்ள கொளப்பலூரில் டெக்ஸ்டைல் பார்க் என சொல்லக் கூடிய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.
இங்கு 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்தபொது தேர்வு ஆனாலும் அதை தமிழக மாணவர்கள் மிக எளிதாக அணுகக்கூடிய அளவில் தற்போதைய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் சரளமாக பேச, லண்டன், ஜெர்மனி நாடுகளில் இருந்து 600 சிறப்பு ஆசிரியர்கள் தமிழகம் வந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு 6 வார காலம் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிகள் யாவும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரப்படும்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 4 சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.41 கோடியே 6 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்காக இன்று காலை 7 மணிக்கு நடந்த பூமி பூஜையில் தமிழக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி நடக்கும் இந்த அரசு அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக திகழ்ந்து வருகிறது.
அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திருத்தி அமைக்கப்பட்ட பாட புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும். பள்ளிகள் திறந்து 3 நாட்களுக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இப்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 65 மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றார்கள். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே நீட் தேர்வு பயிற்சி தொடங்கியதால் நீட் தேர்வில் 1412 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வுக்காக இந்தியாவிலேயே பயிற்சி அளிக்கும் ஒரே மாநிலம் நமது தமிழகம் தான். இன்னும் கட்-ஆப் மார்க் வரவில்லை. வந்த பிறகு தான் எத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்வார்கள் என தெரியவரும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
சேலம் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தப்படுவதாக ஈரோடு கனிம வள கடத்தல் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட கனிம தனி வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அதிகாரி குரு மூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஈரோடு கனிராவுத்தர்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் தடுத்து சோதனையிட்டனர். அப்போது அந்த லாரி எடப்பாடி அருகே உள்ள சேவூரில் இருந்து வருவது தெரியவந்தது.
அந்த லாரியில் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது. ஆனால் அந்த மணலை கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் டிரைவரிடம் இல்லை. எனவே மணலுடன் அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த லாரி ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக ஆர்.டி.ஓ. இது தொடர்பாக விசாரணை நடத்தி அபராதம் விதிப்பார் என்று தெரிகிறது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையம் ஊராட்சி அண்ணாமடுவு, சித்தி ரெட்டிபாளையம், கந்தாம்பாளையம், காட்டூர், பவானி சாலை ஆகிய பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று தெரிகிறது.
இதை கண்டித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் இறங்கினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட அவர்கள் ஒன்று திரண்டனர்.
கையில் காலி குடங்களுடன் வந்த அந்தியூர்- பவானி-மேட்டூர் செல்லும் 3 வழிச்சாலையில் அவர்கள் குவிந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் பெண்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை. அப்படியே குடிநீர் விநியோகித்தாலும் இரவு 11 மணிக்கு மேல் விநியோகிக்கிறார்கள். அதுவும் வாரத்துக்கு ஒரு முறைதான் வருகிறது.
எனவே 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வட்டார வளர்ச்சி அதிகாரி இங்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. எனினும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 55). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி நாகம்மா.
இவரின் நடத்தையில் பசுவண்ணாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 14-1-2017 அன்று இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசுவண்ணா அருகே கிடந்த கல்லை தூக்கி நாகம்மாவின் தலையில் போட்டார். இதில் நாகம்மா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவண்ணாவை கைது செய்தார்கள்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பசுவண்ணா ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு பசுவண்ணாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
அதன்பேரில் போலீசார் பசுவண்ணாவை தேடி வந்தார்கள். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கடந்த 6-ந் தேதி கைது செய்தனர். பின்னர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, பசுவண்ணாவை 15 நாட்கள் கோபியில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பசுவண்ணாவுக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை ஜெயிலில் இருந்த போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுவண்ணா பரிதாபமாக இறந்தார்.
கைதியான பசுவண்ணா இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு ரங்கராஜன் இன்று கோபிக்கு வருகிறார்.
பசுவண்ணாவுக்கு எப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது? எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்? எப்போது இறந்தார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் யார்? என்பது தொடர்பாக அவர் விசாரணை நடத்த இருக்கிறார். #tamilnews
கோபி அருகே உள்ள புதுவள்ளியம் பாளையத்தில் ரூ.4½ லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். சத்தியபாமா எம்.பி., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 500 பட்டய கணக்காயர்கள் மூலம் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சி.ஏ. படிக்க முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.

10, 12-ம் வகுப்புகளில் அரசு பள்ளிகளில் சேர எந்த தடையும் இல்லை. தனியார் பள்ளிகளில் இருந்து வந்தாலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடைபெறும். குறிப்பாக தென் மாவட்டம், வட மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடங்கள் குறைவாக உள்ளது. ஆனால் அங்கு மாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் உள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற விரும்புகிறார்கள். ஆனால் அந்த பகுதிகளில் காலி பணியிடங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் செய்ய முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNMinister #Sengottaiyan






