search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly missing"

    களக்காட்டில் முதியவர் மாயமானது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் முதியவரை தேடி வருகிறார்கள்.

    களக்காடு:

    களக்காடு ஆவுடைவிலாசம் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது72). இவரது மனைவி வசந்தா. இவர்கள் மகன் முத்துராஜுடன் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி பழனி ஆற்றுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பழனி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது மகன் முத்துராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பழனியை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள காமராஜர்புரம் மாணிக்கபுரம் விலக்கு பகுதியைச் சேர்ந்த பெரியலிங்கையா மனைவி போலம்மாள் (வயது 70). கடந்த சில நாட்களாக இவருக்கு பல் வலி ஏற்பட்டது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக தனது வீட்டில் கூறிச் சென்றார்.

    ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மகள் லதா வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ரெயிலில் பயணம் செய்த முதியவர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குடவல்லூரைச் சேர்ந்தவர் பிஜூ (வயது45). இவரது தந்தை கேசவன் (70).கேசவன் பெங்களூரு, சிக்கஹன்னி பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி பெங்களூரு சென்ற பிஜூ தனது தந்தை கேசவனை அழைத்து கொண்டு குடவல்லூர் செல்வதற்காக பெங்களூரில் இருந்து கேரளா செல்லும் ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

    இரவில் கேசவனும். பிஜூயும் தூங்கினர். மறுநாள் (8-ந் தேதி) அதிகாலை இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது. அப்போது பிஜூ தனது தந்தை கேசவனை பார்த்த போது அவர் அங்கு இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிஜூ அங்குள்ள பெட்டிகளில் தேடியுள்ளார். ஆனால் கேசவன் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது குறித்து பிஜூ ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கேசவனை தேடி வருகிறார்கள்.

    ×