என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரெயிலில் பயணம் செய்த முதியவர் திடீர் மாயம் - மகன் போலீசில் புகார்
ஈரோடு:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குடவல்லூரைச் சேர்ந்தவர் பிஜூ (வயது45). இவரது தந்தை கேசவன் (70).கேசவன் பெங்களூரு, சிக்கஹன்னி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி பெங்களூரு சென்ற பிஜூ தனது தந்தை கேசவனை அழைத்து கொண்டு குடவல்லூர் செல்வதற்காக பெங்களூரில் இருந்து கேரளா செல்லும் ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
இரவில் கேசவனும். பிஜூயும் தூங்கினர். மறுநாள் (8-ந் தேதி) அதிகாலை இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது. அப்போது பிஜூ தனது தந்தை கேசவனை பார்த்த போது அவர் அங்கு இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிஜூ அங்குள்ள பெட்டிகளில் தேடியுள்ளார். ஆனால் கேசவன் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து பிஜூ ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கேசவனை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்