என் மலர்
செய்திகள்

அரசியல் கேள்விகளை ஜெயக்குமாரிடம் கேட்கச் சொல்லும் செங்கோட்டையன்
அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க எனவும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேளுங்கள் என்றும் ஈரோட்டில் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
நம்பியூர்:
தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டப்படும் கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நம்பியூர் அடுத்த திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜையிலும் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த 2 நிகழ்ச்சியின் போதும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் தனது கல்விதுறை சம்பந்தமானவற்றையே கூறினார்.
பேட்டியின்போது அரசியல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூற மறுத்தார்.
“அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க... அதற்கென்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளார். அவரிடம் அரசியல் கேள்விகளை கேளுங்க...” என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டப்படும் கூடுதல் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நம்பியூர் அடுத்த திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜையிலும் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த 2 நிகழ்ச்சியின் போதும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் தனது கல்விதுறை சம்பந்தமானவற்றையே கூறினார்.
பேட்டியின்போது அரசியல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூற மறுத்தார்.
“அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க... அதற்கென்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளார். அவரிடம் அரசியல் கேள்விகளை கேளுங்க...” என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
Next Story






