என் மலர்
ஈரோடு
- ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலத்திலிருந்து ஈரோடு வழியே இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது. ஆனால் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் - ஈரோடு இடையே அரசுப் பேருந்து ஒன்று திடீரென பழுதானதால், பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும். பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்லும் பொழுது, பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றது.
பேருந்தில் பயணிகள் இல்லாததாலும், சாமர்த்தியமாக ஓட்டுநர் பேருந்தினை இயக்கியதாலும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
- துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
சித்தோடு:
சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.
இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திக் கேயன், பஸ்சை உடனடியாக சாலை யோரமாக நிறுத்திய தோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். டிரைவரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைப்பட்டது. மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகு தியில் மின்சாரம் இல்லாமல் 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.
மலை கிராமம் கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளிதிம்பம், தடசலட்டி என 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.
மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகிலுள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரை குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர்.
- யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதி விட்டு வெளியேறி சாலையில் சுற்றி வருவதும், சிலசமயம் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று தேவர் மலையில் இருந்து தாமரை கரை செல்லும் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் யானையை பார்த்ததும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரமாக சாலையிலேயே நின்று கொண்டு இருந்தது. இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து சாலையில் நின்று கொண்டிருந்த யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் யானை அருகே நின்று செல்பி எடுத்த நபர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நேற்று பவானிசாகர் அணைக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 661 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 74.73 அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியாக உயர்ந்து உள்ளது.
- கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 399 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 70.93 அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 350 கனஅடி என மொத்தம் 955 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.80 அடியாக உயர்ந்து உள்ளது.
- மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும்.
- பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும்.
மலை கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடும். அந்த சமயம் ஆபத்தை உணராமல் பரிசலில் மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை மாயாற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர்வரத்தானதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கறைகளையும் தொட்டபடி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் இன்று மாயாற்றில் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரிக்கும் மாணவர்கள் மற்றும் வியாபாரத்துக்கு செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் தெங்குமரஹாடா, அல்லி மாயார் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் நீண்ட வருடமாக தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதும் தொங்கு பாலம் அமைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
- மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தியூர்:
கர்நாடகா மாநுலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரவு வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி கர்நாட கத்தையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதார துறை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனை ச்சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வருபவர்களும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியாக அதிகளவில் சென்று வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதார த்துறை கர்நாடகா எல்லை பகுதிகளில் சோதனைக்கு பிறகு அனுமதிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் கர்கே கண்டி செக் போஸ்ட் அருகே அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.
அந்த பகுதியில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்சல், இருமல் மற்றும் நோய் தென்படும் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வரட்டுபள்ளம் சோதனச்சாவடியிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி, தாளவாடி, காரப்பள்ளம், மற்றும் புளிஞ்சூர் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த வழியாக வரும் சரக்கு வாகனம், பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர்களிடம் விசாரணை நடத்திய பின்பே அனுப்பி வைக்கின்றனர்.
காய்ச்சல் உள்ளிட்ட நோய் உபாதைகள் உள்ளதா என சோதனை செய்த பிறகே மருத்துவ குழுவினர் வாகன ஓட்டிகளை அனுமதிக்கின்றனர்.
- பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
- கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் கோபி, சக்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செய்கிறார்கள்.
அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் கோபி நம்பியூர் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்று மாலை மற்றும் இரவில் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைப்பகுதியில் 1020 கன அடி தண்ணீர் அணையிர் இருந்து வெளியேறி வருகிறது.
இதனால் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால் கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று தடைவிதித்துள்ளனர். இதனால் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையடுத்து இன்று காலை பொதுமக்கள் அணை அருகே உள்ள பாலத்தின் மீது நின்று அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ரசித்தும் புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.
இதை போன்று அணையின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியில் பரிசல் இயக்கவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் துணித்து வைத்தல் போன்றவைக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது குறித்து நுழைவு வாயில் பகுதியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
- கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 3 மணிக்கு பிறகு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து தொடங்கியது.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையத்தில் மதியம் 3.45 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுமார் 45 நிமிடம் மழை கொட்டியது. கோபிசெட்டிபாளையத்தில் மட்டும் மாவட்டத்தில் அதிகபட்சமாக 62.20 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதன் காரணமாக கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. உடனடியாக நகராட்சி பொறியாளர் சிவகுமார் அடங்கிய குழுவினர் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். பின்னர் ஒரு மணி நேரத்திற்குள் குடியிருப்பில் சூழ்ந்த மழை நீர் வற்றியது.
மழைக்காலத்தில் குடியிருப்புகள் தண்ணீர் புகாத வகையில் ஓடை அமைந்துள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேப்போல் கொடிவேரிப்பள்ளம் அணை, வரட்டுப்பள்ளம், பவானிசாகர், குண்டேரிப்பள்ளம் அணை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதேப்போல் அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதியில் சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாநகர பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபிசெட்டிபாளையம்-62.20, எலந்த குட்டைமேடு-23.60, கொடிவேரிஅணை-11, அம்மாபேட்டை-9.40, வரட்டுப்பள்ளம்-8.40, கவுந்தப்பாடி-6.40, சென்னிமலை-4, பெருந்துறை-3, குண்டேரிப்பள்ளம் -2.20, பவானிசாகர்-1.80, ஈரோடு-1.20.
- கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
- தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோட்டில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் மொத்த விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர் ராவணன். கடையின் பின்பகுதியில் பெரிய அளவில் குடோன்கள் செயல்பட்டு வருகிறது. கடையில் வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள், அதன் மூலப்பொருட்கள் என கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் உள்ளன.
இன்று காலை வழக்கம் போல் கடையில் ஊழியர்கள், வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் கடையின் ஒரு இடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப ட்டது. இதை அணைக்கும் முயற்சியில் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவியது.
இதனால் கரும்புகை விண்ணை தொடும் அளவில் வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த இடங்களுக்கு பரவியதால் கூடுதலாக ஈரோடு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி என 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கும், குடோன்களுக்கும் பரவி வருவதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் அக்கம்பக்கத்தில் உள்ள கடைகள் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி நின்று கொண்டனர்.
அதேபோல் அருகில் தனியார் பெண்கள் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கும் கரும்புகை பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அருகில் கடையில் உள்ளவர்கள் அவசர அவசரமாக தங்களது பொருட்களை வெளியேற்றி வருகின்றனர். மேலும் கரும்புகை 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு பரவியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டது அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் கடையில் இருந்த 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக கரும்புகை அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவியது. 6 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. எனினும் தண்ணீர் தேவையான அளவு இல்லை. இதை தொடர்ந்து மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் ஈரோடு-சத்தி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை சீர்படுத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.87 அடியாக உள்ளது.
- 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.70 அடியாக உயர்ந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக வந்த நீர் இன்று காலை மேலும் அதிகரித்து 4,649 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 69.31 அடியாக உயர்ந்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.87 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.70 அடியாக உயர்ந்து உள்ளது.






