என் மலர்tooltip icon

    கடலூர்

    • ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.
    • ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும்.

    கடலூர்:

    வேளாண்மைத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய அமைப்பாளர்கள். – துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர். துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவும், பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம். ஒரு துணை அமைப்பாளர் தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.

    நியமிக்கப்படவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லுரி , டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயிலக்கூடியவராகவோ இருத்தல் வேண்டும். இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் கடலூர் கிழக்கு மாவட்ட அலுவலகம் ,வலைதள முகவரியிலிருந்தோ பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகின்ற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலைக்குள் மாவட்ட ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் அந்தந்த மாவட்டத்திலேயே மாணவர் அணி நிர்வாகிகளால் நடத்தப்படும். நேர்காணல் நடைபெறும் நாள், நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • 2 தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வர வேண்டுமென கூறி அனுப்பிவைத்தார்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ் நேற்று புறப்பட்டது. நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை பணிகள் நடப்பதால், இந்த பஸ் மாற்று பாதையில் சென்றது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இந்த பஸ் நேற்று மாலை பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி அருகில் சென்றது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ், கள்ளக்குறிச்சி பஸ்சின் குறுக்கே நிறுத்தப்பட்டது. இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், தனியார் பஸ் ஊழியர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், பயணிகளை இறக்கிவிட்டு பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வரவேண்டுமென கூறி அனுப்பிவைத்தார். இதையடுத்து இன்று காலை 2 தனியார் பஸ் ஊழியர்கள் பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் பஸ் ஊழியர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், பொதுமக்களுக்கும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக் கூடாதென எச்சரித்து அனுப்பினார்கள்.

    • டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.
    • பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தி.மு.க. திராவிட மாடல் அரசின் சாதனைகளின் முழக்கங்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரின் மாபெரும் எழுச்சி பேரணி கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இப் பேரணிக்கு லீமா அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார்.

    இப்பேரணி கடலூர் ஜவான்பவன் சாலையில் இருந்து தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாதனைகளை முழக்கங்களோடு அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பேரணியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.எஸ்.எல். குணசேகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் கே.ஜி.எஸ் தினகரன், வக்கீல் சுந்தர், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் உமா சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், பாருக் அலி, கர்ணன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
    • திட்டக்குடியில் சாலையோரம் முறையான வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த 2 தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கன மழை தொழுதூர், ராமநத்தம், வாகையூர், இடைச்செருவாய், திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்தது.

    இதனால் ராமநத்தம்- விருத்தாச்சலம் மாநில நெடுஞ்சாலையில் சாலை முழுவதும் அதிக அளவில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர். சாலையோரம் மழைக்காலத்தில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் இது போன்று மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் திட்டக்குடியில் சாலையோரம் முறையான வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • முகாம் கடலூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் கடலூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக 859 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் கார்டுகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 3,65,747 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக 557 முகாம்களில் 5.08.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற கால அட்டவணை வெளியிடப்பட்டது.

    இந்த 2-ம் கட்ட முகாமில் இதுவரை 2,04,426 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், 15.08.2023 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொருட்டு 2-ம் கட்ட முகாம்களின் இறுதி 2 நாட்களான 15.8.2023 மற்றும் 16.8.2023 நடைபெறும் 2-ம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவ ர்களின் விண்ணப்பபதிவு செய்யும் நிகழ்வை 19.8.2023 மற்றும் 20.8.2023 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. விடுபட்டவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். முதல் கட்ட மற்றும் 2-ம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேற்படி முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்ப ங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ள ப்படும். அப்போது விண்ணப்ப தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது.
    • வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று (12-ந் தேதி) விநாயகர் பூைஜயுடன் தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு புத்துமாரியம்மனுக்கு புனிதநீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும், சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு செடல் பெருவிழாவும் நடந்தது. அதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (14-ந் தேதி) மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பாவாடை ராயனுக்கு படையல் பூைஜயும் நடைபெறுகிறது.

    • விபத்து களைத் தடுக்கும் வகையில் கண்டறிந்து உடனடி யாக மூடவும் உத்திரவிடப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பணிகளின் போது ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றம் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஆபத்துகளை ஏற்படுத்துவதுடன் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய, விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்தவெளி கிணறுகள் மற்றும் செய லிழந்த ஆழ்துளை கிணறு களின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த அலுவலர்களுக்கு உத்திர விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்திய மான அபாயங்களைக் குறைக்க அனைத்து திறந்த வெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளையும், திறம்பட பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த வெளி கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்து களைத் தடுக்கும் வகையில் கண்டறிந்து உடனடி யாக மூடவும் உத்திர விடப்பட்டுள்ளது. மேலும், கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகை யில் உடனடி நடவடிக்கை யாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரி குத்தகை தாரர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோன்று சாலையைப் பயன்படுத்து பவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில் கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைத்திடவும், அவை வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும், அபாய கரமான இடங்களின் அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர்.
    • அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமங்கலம் கிராம த்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 52) என்பவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் விவசாய வேலை செய்து வருகி றார். இவர் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று விட்டுள்ளார். மீண்டும் மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சிறுமங்கலம் சுடுகாட்டின் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக மின்கம்பத்தில் இருந்த மின் ஒயர்கள் அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது. இதை பார்த்த திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் ஆனவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.

    மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.


    கடலூர்:

    போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அறி வுறுத்தலின் பேரில், தமிழ்நாடு காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டையில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு, மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காளமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி விழிப்புணர்வு பேரணியானது மங்கலம்பேட்டை கடைவீதி, மெயின் ரோடு வழியாக சென்று புல்லூர் சோதனைச் சாவடியை சென்றடைந்தது. இந்த பேரணியின்போது, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், தனிப்பிரிவு தலைமைக் காவலர் ராஜசேகர், பள்ளி ஆசிரியர்கள் பாபாஜி, விசாலாட்சி, சங்கர், சுடர் ஒளி, அனிதா உள்ளிட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியசாமி அவரது மனைவி மற்றும் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார்.
    • சுவர் மழைச்சாரலில் ஊறி கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    கடலூர்:

    திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட தர்மகுடிக்காடு கிராமத்து சாலையோரம் சில கூரை வீடுகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இதில் பெரியசாமி (வயது 75) என்பவர் அவரது மனைவி மற்றும் மகனுடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் கூரை வீட்டின் 2 பக்க மதில் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாரும் காயம் இன்றி உயிர் தப்பினர். கடந்த 2 தினங்களாக திட்டக்குடி பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்வதால், சுவர் மழைச்சாரலில் ஊறி கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறைனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    கடலூர்:

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இன்று காலை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் ஏ.ரூபியால் ராணி முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் தலைமை கல்வி அலுவலர் எஸ். பாலதண்டாயுதபாணி தலைமையில் துணை முதல்வர் எஸ்.அறிவழகன் உறுதிமொழி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இறுதியில் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் போதை பொருட்களின் தீங்குகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
    • கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக் டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் அரசு மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும். மேற்படி நாளில் அனைத்து பார்கள் மற்றும் அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும். மேலும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை மேற்கொண்டால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கள் மற்றும் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×