search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே போலி டாக்டர் கைது
    X

    விருத்தாசலம் அருகே போலி டாக்டர் கைது

    • அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது.
    • மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு போலி டாக்டர் மருத்துவம் பார்த்து வருவதாக விருத்தாசலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சாமிநாதன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள சங்கர் (வயது52) என்பவரிடம் சோதனை நடத்தினர். சோதனையில் அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சில வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×