என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி
- 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.
- 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார், சின்னதுரை. இவர்களிடம் ஆளக்கொரு பசுமாடு உள்ளது. இதேபோல தெம்மூர் கிராமத்தை சேர்ந்த சரவணனிடம் காளை மாடு உள்ளது. இந்த 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. நீண்ட நேரமாகியும் மாடுகள் திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை தேடினார்கள். அப்போது வயல்வெளி பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்தது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன. இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்்ளனர்.
Next Story






