என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சிறியதாக திருடி சேர்க்க முடியாததால், பெரிதாக ஏதாவது திருட்டில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.
    • போலீசார் தப்பியோடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நகைக்கடையில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வு நடத்தினர். கடையில், இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்து கொண்டு கடைக்குள் சென்றுள்ளார்.

    அங்கு ஷோகேஸ்களில் இருந்த நகைகளை தேடி எடுத்து கடையில் இருந்த பையில் வைத்து எடுத்து சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    முகத்தை கேமிராவில் இருந்து மறைக்க தனது மேல் சட்டையை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து, சில அடி தூரம் நடந்து சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சி பஸ்சில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதனால் கொள்ளையன் பொள்ளாச்சி, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, உடுமலை, பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.மேலும் கொள்ளையனின் உருவம், நடை, செயல்பாடு ஆகியவற்றை வைத்து அவர் பழைய குற்றவாளியா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பொள்ளாச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், கோவை நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரியவந்தது.

    நகைக்கடையில் கொள்ளையடித்த நபர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய்(வயது28).இவர் மீது தர்மபுரி மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக தர்மபுரி போலீசார் அவரை கைது செய்து, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    அப்போது அவருக்கு கோவை மத்திய ஜெயிலில் போக்சோ வழக்கில் கைதாகி இருந்த ஆனைமலையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். பின்னர் மீண்டும் தர்மபுரிக்கு சென்றார். அப்போது மீண்டும் அவரை வேறு வழக்கில் போலீசார் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்ததும், விஜய் இங்கிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பதால், வேறு எங்காவது செல்ல நினைத்தார்.

    அப்போது அவருக்கு ஜெயிலில் அறிமுகமான சுரேஷின் நினைவு வந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் தர்மபுரியில் இருந்து கோவைக்கு தனது மனைவியுடன் வந்த அவர், ஆனைமலையில் வீடு எடுத்து வாடகைக்கு தங்கி இருந்தார்.

    இங்கு வந்த பின்னரும், மீண்டும் விஜய் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளார். சிறியதாக திருடி சேர்க்க முடியாததால், பெரிதாக ஏதாவது திருட்டில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.

    அதன்படியே கோவையில் உள்ள நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்தார். பின்னர் தான் கொள்ளையடித்த நகைகளில் பாதியை அரூரில் உள்ள தனது தாய் வீட்டிலும், மற்றொரு பாதியை ஆனைமலையில் உள்ள வீட்டிலும் வைத்தார்.

    இந்த நிலையில் ஆனைமலையில் விஜய் இருப்பதாக கோவை தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதேபோல் கோவையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளை பார்த்த தர்மபுரி போலீசாரும், விஜயை கைது செய்ய கோவைக்கு வந்தனர்.

    பின்னர் கோவை தனிப்படை போலீசார் மற்றும் தர்மபுரி போலீசார் இணைந்து ஆனைமலை பகுதிக்கு சென்றனர். அங்கு விஜய் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை வெளியில் வர எச்சரிக்கை விடுத்தனர்.

    போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்ததும், விஜய் தனது வீட்டின் ஓட்டை பிரித்து மேல் பகுதி வழியாக வெளியில் வந்து, போலீசாரின் கண்ணில் படாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    சிறிது நேரம் கழித்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அவரது மனைவியை பிடித்தனர். அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீடு மற்றும் அரூரில் விஜயின் தாய் வீட்டில் இருந்த 2¾ கிலோ நகையையும் மீட்டனர்.

    மேலும் விஜய்க்கு வீடு பார்த்து கொடுத்த சுரேஷ் என்பவரை பிடித்து நகை கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா? என விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்து.

    இதையடுத்து போலீசார் தப்பியோடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளையன் சிக்கிய நிலையில் வீட்டை சுற்றி வளைத்த 2 மாவட்ட போலீசாரும் அவனை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டு விட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.
    • நகைக்கடையில் நகைகள் திருடிய கொள்ளையன் ஆனைமலையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வு நடத்தினர். கடையில், இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்துக்கொண்டு கடைக்குள் சென்றுள்ளார்.

    அங்கு ஷோகேஸ்களில் இருந்த நகைகளை தேடி எடுத்து கடையில் இருந்த பையில் வைத்து எடுத்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    முகத்தை கேமராவில் இருந்து மறைக்க தனது மேல் சட்டையை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.

    மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து, சில அடி தூரம் நடந்து சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சி பஸ்சில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதனால் கொள்ளையன் பொள்ளாச்சி, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, உடுமலை, பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மேலும் கொள்ளையனின் உருவம், நடை, செயல்பாடு ஆகியவற்றை வைத்து அவர் பழைய குற்றவாளியா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பொள்ளாச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நகைக்கடையில் 200 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் ஆனைமலையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்து சென்று கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் இந்த சம்பவத்தில் இவர் மட்டும் தனியாக ஈடுபட்டரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொள்ளை அடித்த நகைகள் எங்கே? யாரிடமாவது நகைகளை கொடுத்துள்ளாரா? என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 200 பவுன் நகைகளை மீட்கும் பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அதன்பிறகே கொள்ளையன் யார் என்ற விவரத்தை போலீசார் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    • கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    • கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதி.

    கோவை நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் அடையாளத்தை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது உறுதியாகியுள்ளறதாக தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களையும் முடக்கியுள்ளனர்.
    • கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் செல்ல அ.தி.மு.க அரசில் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    கருமத்தம்பட்டி:

    கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு 10 அடி உயர மாலை, கிரேன் மூலம் போடப்பட்டது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்ற விருதும் வழங்கப்பட்டது.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி ஒரு குட்டிக்கதையை கூறி தனது பேச்சை ஆரம்பித்தார். அந்த குட்டிக்கதையில், ஒரு விவசாயிக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் தந்திரசாலி, தீயவன். இளைய மகன் அப்பாவி நல்லவன்.

    2 பேரையும் விவசாயி, தினமும் தனக்கு சொந்தமான வயலுக்கு சென்று விவசாயம் பார்க்க அனுப்பினார். இளைய மகனான அப்பாவி, தனது தந்தை சொல்லுக்கு மதிப்பளித்து, தினமும் வயலில் விவசாயம் பார்த்தார்.

    மூத்த மகன் தந்திரிசாலி அல்லவா அவன் தனது தம்பியிடம் எனக்கு உடல்நலம் சரியில்லை. எனது வேலையும் சேர்த்து பார்த்து விடு என அன்போடு கூறி விட்டு, தீய செயல்களை செய்து பொழுதை கழிப்பார். அப்பாவியான தம்பி, அண்ணனின் வேலையையும் சேர்த்து பார்த்தார்.

    ஆனால் வீட்டிற்கு வரும்போது மட்டும் மூத்தவன், ஏதோ வயலில் பகல் முழுவதும் வேலை பார்த்த மாதிரி, உடம்பில் சேறும், சகதியுமாக வந்தான். இளையவன் குளித்துவிட்டு வந்தார். இதனால் விவசாயிக்கு தனது மூத்த மகன் தான் வேலை பார்க்கிறார். இளைய மகன் வேலை பார்க்கவில்லை என நினைத்துக்கொண்டு, மூத்த மகனுக்கு பண்டிகை காலங்களில் செல்வங்களை அள்ளி அள்ளி கொடுப்பார். இளைய மகனுக்கு கிள்ளி கொடுப்பார்.

    ஆனால் தந்தை திட்டுவதையோ, தனக்கு எதுவும் கொடுக்காததையோ நினைத்து இளைய மகன் வருத்தப்படவில்லை. தன்னை தந்தை ஒரு நாள் புரிந்து கொள்வார் என்று, தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து வந்தார்.

    ஒருநாள் இளைய மகனுக்கு விபத்து ஏற்பட அவரால் வயலில் வேலை பார்க்க முடியவில்லை. மூத்த மகன் விவசாயம் பார்த்து தருவார் என விவசாயி நினைத்தார். ஆனால் மூத்த மகன் தான் வயல் பக்கமே போனதில்லையே அவருக்கு எப்படி விவசாயம் செய்வது என்றே தெரியவில்லை. இதனால் அந்த வருடத்தில் விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது.

    அப்போது தான் விவசாயிக்கு மூத்த மகன் சோம்பேறி என்பதும், இளைய மகன் தான் இதுவரை வேலை பார்த்து தனது குடும்பத்தை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதன்பின்னர் இளைய மகனின் அதிகமான அன்பு காண்பித்ததுடன், மூத்த மகனை திருத்தவும் செய்தார்.

    இந்த கதையை எதுக்கு சொல்கிறேன் என்றால், தற்போது தமிழகத்தில் நடக்கிற அரசியலிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் உழைப்பால் மற்றவர்கள் வாழவும், மற்றவர் முதுகில் ஏறி சவாரி செய்யவும் பலர் நினைக்கின்றனர் என கூறி தனது குட்டிக்கதையை முடித்தார்.

    நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கின்றனர். மின் கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன.

    அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களையும் முடக்கியுள்ளனர்.

    கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் செல்ல அ.தி.மு.க அரசில் நிதியுதவி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2½ ஆண்டுகளாக ஒரு கிறிஸ்தவரையாவது ஜெருசலேம் புனித பயணத்துக்கு அனுப்பி உள்ளனரா? சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்வதாக பொய்வேடமிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் கேடயமாகவும், பாதுகாப்பு அரணாகவும் அ.தி.மு.க என்றென்றும் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.கவில் இணையும் விழாவில் பங்கேற்றார்.

    • தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கருமத்தம்பட்டி:

    கருமத்தம்பட்டியில் நடந்த கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போதைய தேவை ஆட்சி மாற்றம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் பல்வேறு வாக்குறுதிகளை தந்தனர். சிறுபான்மை மக்களுக்கு என்றும் அம்மா வழியில் பாதுகாவலர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல திருச்சபை திறப்புக்கு காரணம் அவர் தான்.

    முதலமைச்சராக இருந்தபோதும் எளிதாக மக்கள் அணுகக் கூடியவராக செயல்பட்டார். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று தான் கோவை மாவட்டத்தில் 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடி பழனிசாமி தந்துள்ளார். மேம்பாலம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், கலெக்டர் அலுவலகம், புதிய கல்லூரிகள், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனையில் புதிய கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தது தான்.

    கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடத்தப்படும் பல பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினார். தற்போதைய ஆட்சியில் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் பழனிசாமி தலைமையில் பெரிய கூட்டணி அமையும். சட்டசபை தேர்தல் எப்போது நடந்தாலும் பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வெற்றி பெறும். அவர் பொறுப்பேற்ற பின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தனர். ஒவ்வொரு நாளும், கடையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பதை பார்த்து விட்டே வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இன்று காலையும் பணிக்கு வந்த ஊழியர்கள் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது பல கிலோ நகைகள் மாயமாகி இருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான ஊழியர்கள் சம்பவம் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து பார்த்தனர்.

    பின்னர் இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். நகைகள் எப்படி கொள்ளை போனது என்பது குறித்து கடை முழுவதும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கார் பார்க்கிங் பகுதிக்கு செல்லக்கூடிய கதவு திறந்து கிடந்தது. இந்த கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். ஆனால் இன்று கதவு திறந்திருந்ததால் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையர்கள் முன்பக்கம் காவலர்கள் பணியில் இருப்பார்கள் என்பதால், பின்பக்கம் உள்ள கார்பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து நகைக்கடைக்கு செல்லக்கூடிய படியில் மேலே ஏறி சென்று நகைகளை கொள்ளையடித்து விட்டு, மீண்டும் அதே பகுதி வழியாக கீழே இறங்கி வந்து தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த நகைக்கடையில் 20 கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது. இருந்த போதும் மேலாளர் வந்து பார்த்த பின்பே எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது தெரியவரும்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அங்குள்ள தடயங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. நகைக்கடையில் கட்டிட பணி நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு செல்வது போல் 3 பேர் சென்று இந்த துணிகர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஏசி வெண்டிலேட்டர் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக கொள்ளையர்கள் சென்ற விவரமும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

    • ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
    • பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார்.

    கொடநாடு வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்தது குறித்து போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதில் இந்த விபத்தை நேரில் பார்த்தது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.

    இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

    அதன்படி இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.

    அவரிடம் நீங்கள் விபத்தை எப்போது பார்த்தீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அப்போது வேறு யாராவது அங்கு இருந்தனரா? விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியுமா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    • சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பேக்கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
    • சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தபடி படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பேக்கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி 2 வீட்டு பெற்றோரும் பேசி முடிவெடுத்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்வது என்றும், நேற்று திருமணம் நடத்தலாம் எனவும் முடிவு செய்தனர்.

    இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை 2 வீட்டாரும் செய்து வந்தனர். இந்த நிலையில் 17 வயதிலேயே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக, காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலரான அமராவதிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் யாசர், காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் அமராவதி, குழந்தைகள் நல உதவி மைய அலுவலர் கல்பனா ஆகியோர் திருணம் நடைபெறுவதாக வந்த திருமண மண்படத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு சிறுமிக்கும், வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது.

    உடனடியாக போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அதனை தடுத்து நிறுத்தினர்.

    தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது. அதற்குள் எப்படி திருமணம் செய்யலாம். 18 வயது முடிந்த பிறகே திருமணம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தற்போது நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளதாகவும், சிறுமிக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் இது போன்று செய்யக்கூடாது என 2 வீட்டு பெற்றோருக்கும் அறிவுரை வழங்கி சென்றனர்.

    • அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது.
    • தி.மு.க. பேனர்கள் வைப்பதற்கு அனுமதிக்கும் போலீஸ், எதிர்க்கட்சியினர் வைத்தால் மட்டும் அகற்ற சொல்வது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

    கருமத்தம்பட்டி:

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மாநாடு மற்றும் முப்பெரும் விழா இன்று மாலை நடக்கிறது.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    மாநாட்டில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் அ.தி.மு.க. சார்பில் அவினாசி சாலையில் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்றிரவு, அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அங்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் திரண்டனர். அவர்கள் பேனர்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதற்கிடையே மாநாட்டு பந்தலை பார்வையிடுவதற்காக வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பேனர்கள் அகற்றப்பட்ட தகவல் அறிந்ததும், அங்கு சென்று, நிர்வாகிகளை சமாதானப்படுத்தி போலீசாருடன் பேசினார்.

    தி.மு.க. பேனர்கள் வைப்பதற்கு அனுமதிக்கும் போலீஸ், எதிர்க்கட்சியினர் வைத்தால் மட்டும் அகற்ற சொல்வது ஏன் என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் பொது இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி விடுமாறும், தனியார் இடத்தில் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டும் இருக்கட்டும் என அ.தி.மு.க.வினரிடம் கூறி விட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிறிஸ்தவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிற கட்சி நிகழ்வுகளின்போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர்.

    எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் தற்போது அதனை அரசியலாக்க முயற்சித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    சூலூர்:

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அ.தி.மு.க. சமீபத்தில் முறித்துக்கொண்டது.

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க. பெற முடியாமல் போனதாக கட்சியினர் கருதினர். இதைத்தொடர்ந்து சிறுபான்மையினரின் வாக்குகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.

    இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களிடம் அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை அளித்து வருகிறார்.

    இந்தநிலையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம், கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.

    அதன்படி கோவை கருமத்தம்பட்டியில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் இந்த விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.

    அதே பகுதியில் மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் மற்றொரு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    பா.ஜ.க.வில் இருந்து பிரிந்த பிறகு கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாடு கிறிஸ்தவர்களின் ஆதரவை அ.தி.மு.க. பெறும் மாநாடாக அமையும் என அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடியுள்ளார்.
    • புகார் பேரில் வடவள்ளி போலீஸார் ரேவதியை கைது செய்துள்ளனர்..

    கோவை, 

    கோவை வீரகேரளம் பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மலர்(48). இவர் சம்பவத்தன்று கோவை கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீரகேரளம் செல்லும் பஸ்சில் சென்றார். வீட்டிற்கு சென்று தனது பையை எடுத்து பார்த்தார். அப்போது, தங்க செயின் மாயமாகி இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகைைய திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய கடலூர் நெல்லி குப்பத்தை சேர்ந்த ரேவதி(28) என்பவரை கைது ெசய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து 4 பவுன் செயினை மீட்டனர்.

    • தேசியக்கொடியை முண்டாசாக அணிந்து வந்திருந்ததால் பரபரப்பு
    • உறவினர்கள் சொத்துக்களை அபகரித்ததாக மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை. 

    ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவர் இன்று காலை தனது மனைவி, மாமியார், மகள், மற்றும் குழந்தையுடன் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தவுலத் மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது போராட்ட த்தில் ஈடுபட்ட பெண் கூறியதாவது:-

    எங்களுக்கு மேட்டு ப்பாளையம் பகுதியில் 8½ ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடத்தை எனது உறவினர்கள், எனக்கு தெரியாமலேயே தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு விற்று விட்டனர்.

    அதில் எனக்கான பங்கையும் அவர்கள் தரவில்லை. இதுதொ டர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று குடும்பத்துடன் சாலைமறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    ×