என் மலர்tooltip icon

    சென்னை

    • திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது.
    • திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது:-

    வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலுங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்து விட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு தமிழகத்தில் ஒன்றுமே செய்யவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க.வுக்கு பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் இங்கே தமிழகத்தில் இனம், பிரிவினை என ஒவ்வொரு ஆயுதமாக கையில் எடுத்து வருகின்றனர்.

    தமிழ் பற்றை பேசாமல் திராவிடத்தை முன்னிறுத்தி தி.மு.க. பேசுகிறது.

    ஆனால் தமிழ் பற்று, தேசப்பற்றை பேசும் பொறுப்பு நமக்கு உள்ளது. கலை கலாச்சார பிரிவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    இங்கே திரையுலகில் பூதம் பிடித்துள்ளது. திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது. திரைத்துறையை விடுவிக்க என்ன வழியோ அதனை செய்ய வேண்டும்.

    இங்கே ஒரு சிறிய படத்தை எடுத்தால் அதனை ரிலீஸ் செய்யும் வரை போதும் போதும் என்றாகி விடுகிறது. தீபாவளிக்கு கூட நல்ல படம் வரவில்லை. நல்ல படம் வருவதற்கு ஒருவரை மட்டுமே ஏன் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்? திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும். அதற்கு பா.ஜ.க. கலை கலாச்சார அணி முயற்சி செய்ய வேண்டும் என பேசினார். 

    • பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள்.
    • நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அடையாறு போட் கிளப்பில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.யின் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கவுரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீசனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு 3 தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.

    நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நாளை காலை 9 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

    • ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பருவகால மாற்றத்தின் போது டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டு சென்னையில் கடந்த மாதம் வரை 1633 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சராசரி 200 பேருக்குள் இருந்த பாதிப்பு செப்டம்பர் மாதம் 237 ஆக உயர்ந்தது. கடந்த மாதம் 600 ஆக உயர்ந்திருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2023-ம் ஆண்டு 2029 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அது 2024-ல் 1403 ஆக குறைந்தது. இந்த ஆண்டு சற்று உயர்ந்துள்ளது.

    ஜனவரி முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 25 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.

    டெங்கு பாதித்தவர்கள் பெரும்பாலும் விரைவாக குணம் அடைந்து விடுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெங்குவை பரப்பும் கொசுக்களை லார்வா பருவத்திலேயே அழிக்க அவை உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் 80 வீடுகள் என்ற அடிப்படையில் 2600 ஊழியர்கள் வீடு வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், கழிவு பொருட்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்த கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே அந்த மாதிரி பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும் படி சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

    • பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் கொடுக்கும்போது குழப்பம் ஏற்படுவதாகவும், பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து சென்னை மாநகராட்சி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவர்கள் தலைமையில் இயங்கும் வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.

    இந்த போன் நம்பர்களில் தொடர்பு கொண்டு அந்தந்த தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கான உதவி மைய எண்கள் விவரம் வருமாறு:-


    எண் தொகுதி போன் நம்பர்
    1 ஆர்.கே.நகர் 9445190204, 8072155700
    2 பெரம்பூர் 9445190204, 8015959489
    3 கொளத்தூர் 9445190206, 7812811462
    4 வில்லிவாக்கம் 9445190208, 7845960946
    5 திரு.வி.க.நகர் 9445190206, 9791755291
    6 எழும்பூர் 9445190205, 9941634048
    7 ராயபுரம் 9445190205, 7867070540
    8 துறைமுகம் 9445190205, 8778381704
    9 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 9445190209, 9884759592
    10 ஆயிரம்விளக்கு 9445190209, 9626150261
    11 அண்ணாநகர் 9445190208, 8680973846
    12 விருகம்பாக்கம் 9445190210, 7358275141
    13 சைதாப்பேட்டை 9445190213, 7358032562
    14 தியாகராயநகர் 9445190210, 7418556441
    15 மயிலாப்பூர் 9445190209, 9789895378
    16 வேளச்சேரி 9445190213, 9499932846
    17 மதுரவாயல் 9445190091
    18 அம்பத்தூர் 9445190207
    19 மாதவரம் 9003595898
    20 திருவொற்றியூர் 9445190201
    21 சோழிங்கநல்லூர் 9445190214, 9445190215
    22 ஆலந்தூர் 9445190212


    • சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமான் இன்று 59-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில்," இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு இளவல் சீமான் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.
    • SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. தொடங்கப்படவில்லை.

    * ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம் தி.மு.க. என எழுதி உள்ளார் ராகுல்காந்தி.

    * அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்க விரும்பும் இயக்கம் என்கிறார் கெஜ்ரிவால்.

    * தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.

    * கியூபா புரட்சி வரை பத்திரிகையில் எழுதி மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.

    * தி.மு.க. பெற்றுள்ள வெற்றி என்பது நாம் அடைந்த வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை.

    * கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாமால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது.

    * SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    * தமிழகத்திற்குள்ளேயே தி.மு.க.வை முடக்க நினைத்தார்கள். ஆனால் நாம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறோம்.

    * தி.மு.க.வை அழிக்க நினைப்போரின் எண்ணம் என்றும் நிறைவேறாது. இது கூடிக் கலைகின்ற கூட்டமல்ல.

    * தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நேரத்தில் குழப்பதை ஏற்படுத்தவே SIR

    * களத்தில் பணியாற்றும் தி.மு.க.வினர் போலி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * வாக்காளர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.
    • வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.

    சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    அறிவுத் திருவிழாவை ஏற்பாடு செய்த துணை முதலமைச்சர் உதயநிதியை 'கொள்கை இளவல்' எனக் குறிப்பிட்டு வாழ்த்தினார். அறிவு திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் வேண்டும் நடத்திட வேண்டும் என உதயநிதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    * திருவள்ளுவர் கோட்டமே திராவிடக்கூட்டமாக மாறியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    * உலகத்தமிழர்கள் உள்ளத்தில் தமிழை உயர்த்திப் பிடிக்கும் பேரியக்கம் தி.மு.க.

    * தி.மு.க.வை தொடங்கியது அண்ணா, 50 ஆண்டுகளாக கட்டி காத்தவர் கலைஞர்.

    * அறிவொளியை பரப்புவதையே தலையாய கடமையாக கொண்டு செயல்படுகிறது தி.மு.க.

    * மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.

    * கட்சியை தொடங்கியவுடன் அடுத்த முதலமைச்சர் என அறிவித்து விட்டு நாம் ஆட்சிக்கு வரவில்லை.

    * வரலாற்றை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள்.

    * தி.மு.க.வை போல் வெற்றி பெற தி.மு.க.வை போல் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை

    * ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான்.

    * தி.மு.க.வை போல் வெற்றி பெற வேண்டும் என சில அறிவிலிகள் கனவு காண்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. சார்பில் முக்கிய நகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரங்களை ம.தி.மு.க. அறிவித்து உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிடக்கோரி இந்த கூட்டணி சார்பில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் முக்கிய நகரங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் விவரங்களை ம.தி.மு.க. அறிவித்து உள்ளது. அதன்படி சென்னையில் வருகிற 11-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் ஆடிட்டர் அர்ஜுனராஜ், கடலூரில் செந்திலதிபன், திருச்சியில் துரை வைகோ, திருவள்ளூரில் வழக்கறிஞர் அந்திரி தாஸ், செங்கல்பட்டில் ஜீவன், காஞ்சீபுரத்தில் மல்லிகா தயாளன் கலந்து கொள்கிறார்கள்.

    • இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.
    • இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின் படி ரூபாய் 1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த 8 மார்ச் 2025-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கப்பட்டது.

    இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சில ஆண்கள் ஓட்டுவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு ஆட்டோகளை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.



    இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத்துறையால் எச்சரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது புகார் பெறப்பட்டுள்ளது. மேலும், இது போல் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

    • டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
    • சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

    டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புகிறது.

    இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு நிலை தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணிகளில் அமர லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர.

    இந்நிலையில், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 10ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
    • பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும்!

    ஒரு குற்றம் நடந்தவுடனே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்பப் புத்தியோடு செயல்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கோவை நிகழ்வு.

    கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் 'பச்சைப் பொய்' பழனிசாமி. கோவை நிகழ்வில் காவல்துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. "என்னை யாரும் கடத்தவில்லை" என அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

    இதே போல நேற்றைய முன்தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியைத் தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்துவிட்டது. உண்மைகள் இப்படியிருக்கத் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

    திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும் என்று கூறியுள்ளார். 

    ×