என் மலர்tooltip icon

    சென்னை

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் ரூ.2 ஆயிரத்து 200 உயர்ந்து, சவரன் ரூ.74 ஆயிரத்து 320 எனும் இமாலய உச்சத்தை எட்டியது. இது, நடுத்தர, ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஆனால், மறுநாளே அந்தர் பல்டியாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவு சரிவை சந்தித்தது.

    அதாவது, கடந்த 23-ந்தேதி, சவரன் ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, மீண்டும் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையில் தொடர்ந்து 4 நாட்கள், தங்கம் விலை எந்தவித மாற்றங்களும் இன்றி இருந்தது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் ஒரு கிராம் ரூ.8,980-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520

    27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-04-2025- ஒரு கிராம் ரூ.111

    29-04-2025- ஒரு கிராம் ரூ.111

    28-04-2025- ஒரு கிராம் ரூ.111

    27-04-2025- ஒரு கிராம் ரூ.112

    26-04-2025- ஒரு கிராம் ரூ.112

    • நடிகரும், ரேசருமான அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    நடிகரும், ரேசருமான அஜித் குமார் இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தன் கடும் உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், நாட்டின் முக்கியமான திரைக்கலைஞர்களில் ஒருவராக உயர்ந்து, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் வென்றிருக்கும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

    • உழைப்பாளர் உரிமை காப்போம் !
    • மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி, உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக்காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!

    உழைப்பாளர் உரிமை காப்போம்!

    இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.
    • விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    உலக உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவசங்கர், ஆவடி நாசர், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன், ஆ.ராஜா எம்.பி.

    தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், தலைவர் நடராஜன், செல்வராஜ், தயாநிதிமாறன் எம்.பி., தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பிரபாகரராஜா எம்.எல்.ஏ.., பரந்தாமன் எம்.எல்.ஏ., மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன்மோகன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    மே 1-ம் நாள் தொழிலாளர் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி கொண்டு இருக்கிறோம். குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

    உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.

    மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. 4 லட்சத்து 37 ஆயிரத்து 750 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 ஓய்வூதியம் வழங்கியது தி.மு.க. அரசு.

    இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிற திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இந்த 4 ஆண்டு காலத்திலே எத்தனையோ திட்டங்களை எத்தனையோ சாதனைகளை, தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கிற இந்த நேரத்திலே, குறிப்பாக தொழிலாளர்களுக்கு கடந்த 4 ஆண்டில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 461 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாம் வழங்கி இருக்கிறோம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.

    ஊதியத்தோடு தொழிலாளர் நல வாரியம் என கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம். உழைப்பாளர்களையும், உழைப்பையும் போற்றும் ஆட்சியாக திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது.

    உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கியவர் கலைஞர்.

    தொழிலாளர் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எந்த முதலீடு திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எவ்வளவு பேருக்கு வேலை கொடுப்பீர்கள் என்று முதல் கேள்வியை கேட்பது உண்டு.

    ஆகவே வேலை தருபவர் பணியாளர்களுடன் இருக்கக்கூடிய உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்தி கொண்டு இருக்கிறோம். பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இது சாமானிய மக்களுக்கான, சாமானிய ஆட்சி என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

    உங்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் அரசுக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். விரைவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

    உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ந்தேதியன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    மே 1 உழைப்பாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    மே தின பூங்காவில் உள்ள தூணுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    செஞ்சட்டை அணிந்து வந்து மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

    • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டு, 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    இதனிடையே, இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்து இருந்தது. இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

    இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!
    • உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.

    மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளர். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!

    உலக உழைப்பாளர் தினமான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள்.

    உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.

    கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
    • வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1906-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது.
    • அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் என மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பயணிகள் நலன் கருதி தற்போது உள்ள பஸ் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 7 வழித்தட எண்களை கீழ்கண்டவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 1-ந் தேதி (இன்று) முதல் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று, கவியரசு கண்ணதாசன் நகர் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எச் என்ற தடம் எண் 170டி எனவும், அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

    மேலும், பிராட்வே - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 18ஏ.எக்ஸ் என்ற தடம் எண் 18ஏ எனவும், திருவான்மியூர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 91கே என்ற தடம் எண் 91 எனவும், பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி செல்லும் பஸ்சின் 66எக்ஸ் என்ற தடம் எண் 66பி.எக்ஸ் எனவும், கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 121எச் இடி என்ற தடம் எண் 170டி.எக்ஸ் எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெருக்கடி காலத்திற்கு பிறகு நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
    • கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சிக்கு வந்தோம்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுவின் மகள் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை தாங்கி நடத்தி வைத்–தார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாம் சொல்லி இருக்கிறோமோ, அந்த வாக்குறுதிகளை படிப்படியாக இன்றைக்கு எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இப்போது சொல்லப்பட்டிருக்கும் அந்த உறுதிமொழிகளும் விரைவாக, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றப்படும்.

    இங்கு சிலர் பேசும்போது 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 அல்ல 220 வரும் என்று சொன்னார்கள். அதில் என்ன கஞ்சம்? 234 என்றே சொல்லுங்கள். வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், செல்லும் இடங்களில் எல்லாம் அந்த வரவேற்பைப் பார்க்கிறேன்.

    1975-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்துகின்றபோது அதை எதிர்த்து இந்தியாவில் முதல் குரல் கொடுத்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. நெருக்கடி நிலையை ரத்துசெய்ய வேண்டும். அவசர நிலையை ரத்துசெய்ய வேண்டும் என்று அன்றைக்கு தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்ட அடுத்த விநாடியே நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. அதைப்பற்றி கவலைப்படவில்லை.

    நெருக்கடி காலத்திற்கு பிறகு நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சிக்கு வந்தோம். அதற்கு பிறகு 6-வது முறையாக என்னுடைய தலைமையில் நீங்களெல்லாம் ஆட்சியை உருவாக்கித் தந்து இருக்கிறீர்கள். 7-வது முறையும் இந்த ஆட்சியை தொடர வைப்பீர்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உண்டு என தெரிவித்தார்.

    • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

    புதுடெல்லி:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 72 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.

    சென்னை அணி 10 போட்டியில் 2 வெற்றி, 8 தோல்வி என கடைசி இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய சி.எஸ்.கே. 190 ரன்களைக் குவித்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் மீண்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷேக் ரஷித் 11 ரன்னும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்னும், ஜடேஜா 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன் - பிரேவிஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 78 ரன்கள் சேர்த்த நிலையில் பிரேவிஸ் 32 ரன்னில் அவுட்டானார்.

    சாம் கர்ரன் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 47 பந்தில் 88 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பஞ்சாப் அணி சார்பில் 19வது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங், யான்சென் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

    பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்னும், நேஹல் வதேரா 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 6வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

    ×