என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாநகர போக்குவரத்து கழகம்"

    • மத்திய அரசு சார்பில் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • மத்திய அரசின் இரண்டு விருதுகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெற்றுள்ளது.

    நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற பிரிவில் மத்திய அரசு சார்பில் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அரியானாவில் குருகிராம் பகுதியில் நடைபெற்றது.

    மத்திய அரசியின் இந்த உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது.

    இந்த விருதினை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வழங்கினார்.

    இதேபோல், சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரெயில், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரெயில் பிரிவுகளில் மத்திய அரசின் இரண்டு விருதுகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெற்றுள்ளது.

    • மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது.
    • அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் என மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பயணிகள் நலன் கருதி தற்போது உள்ள பஸ் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 7 வழித்தட எண்களை கீழ்கண்டவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 1-ந் தேதி (இன்று) முதல் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று, கவியரசு கண்ணதாசன் நகர் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எச் என்ற தடம் எண் 170டி எனவும், அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

    மேலும், பிராட்வே - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 18ஏ.எக்ஸ் என்ற தடம் எண் 18ஏ எனவும், திருவான்மியூர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 91கே என்ற தடம் எண் 91 எனவும், பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி செல்லும் பஸ்சின் 66எக்ஸ் என்ற தடம் எண் 66பி.எக்ஸ் எனவும், கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 121எச் இடி என்ற தடம் எண் 170டி.எக்ஸ் எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம்.
    • பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும்.

    தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 அரசுப்பேருந்துகள், மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினந்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

    மேலும் மகளிருக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்புச் சலுகை மற்றும் என மக்களுக்கு பயன் தரக்கூடிய பல திட்டங்களையும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

    சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

    சென்னையில் GCC முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளியை மாநகர போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. அதன்படி, மின்சார பேருந்துகளுக்கான நடத்துநர் நியமனம் போக்குவரத்து கழகம் சார்பிலும், பேருந்து பராமரிப்பு, ஓட்டுநர் நியமனம் உள்ளிட்டவை Gross Cost Contract அடிப்படையில் தனியார் மூலமாகவும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒப்பந்தப்புள்ளி படிவங்களை https://tntenders.gov.in/. heetps://mtcbus.tin.gov.in/, https://tnidb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு கொள்ளலாம். ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரி https://tntenders.gov.in/nicgep/app-யில் பதிவேற்றம் செய்யலாம்.

    ஒப்பந்தப்புள்ளி படிவங்களை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவங்களை 10.3.2025 அன்று முதல் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய இறுதி நாள் 03.04.2025 அன்று மாலை 4 மணிவரை ஆகும். 

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன. ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. #Bus
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நேற்று 471 புதிய பஸ்கள் விடப்பட்டன.

    இதில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு (சென்னை) 60 பஸ்களும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு 103 பஸ்கள், சேலத்துக்கு 77 பஸ்கள், கோவைக்கு 43 பஸ்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்துக்கு 111 பஸ்கள், மதுரைக்கு 30 பஸ்கள், நெல்லைக்கு 46 பஸ்கள் புதிதாக விடப்பட்டுள்ளன.

    ஆனால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டும் விடப்பட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து பாரிமுனைக்கு புதிய பஸ் இயக்கப்படுகிறது.

    சென்னையில் பழைய மாநகர பஸ்கள் மற்றும் பழுதடைந்த பஸ்களை மாற்றி புதிய பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சென்னையில் ஓடும் மாநகர பஸ்களில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

    அதாவது சென்னை மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் மாநகர பஸ்களை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 20 சதவீதம் பேர் சென்னை மாநகர போக்குவரத்து பயணிகள் ஆவர்.

    கடந்த ஜூலை மாதம் 515 புதிய பஸ்கள் விடப்பட்டன. தற்போது மேலும் 471 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு இதுவரை விடப்பட்டுள்ள 986 புதிய பஸ்களில் சென்னை மாநகருக்கு ஒரே ஒரு புதிய பஸ் மட்டுமே கிடைத்துள்ளது.

    கடந்த 12 மாதங்களில் 250 பழைய மாநகர பஸ்கள் இயக்குவதற்கு தகுதியுடன் இல்லை என்று கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் 3,300 பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட 6 லட்சம் கிலோ மீட்டரை கடந்துள்ளது.

    இதையடுத்து அவசர தேவைக்காக 245 புதிய மாநகர பஸ்கள் தேவை என்று கேட்டுக்கொண்ட நிலையில் ஒரே ஒரு பஸ் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறும்போது, “சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 50 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அவை விரைவில் இயக்கப்படும். பஸ்களுக்கு பாடி கட்டும் பணிக்காக தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார். #Bus
    ×