என் மலர்
சென்னை
- நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
- வெள்ளி விலையும் ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கிடுகிடுவென உயருவது, பின்னர் சற்று சரிவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வாரம் இறுதி வரை விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. 10, 11-ந்தேதிகளில் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்தை மீண்டும் தாண்டியிருந்த நிலையில், நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஒன்பதாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-11-2025- ஒரு கிராம் ரூ.173
11-11-2025- ஒரு கிராம் ரூ.170
10-11-2025- ஒரு கிராம் ரூ.169
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
- த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
- கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.
த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
* த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
* தலைவர் விஜய்க்கு மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி அதிகரித்துள்ளது.
* பா.ஜ.க., தி.மு.க.-வை தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்.
* த.வெ.க. தலைமையை ஏற்று வரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.
* கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ஐ.டி. காரிடர்: எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், ஃபவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கை அம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, குளக்கரை தெரு, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகர், ஆனந்த் நகர், எம்கா நகர் அவென்யூ, செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலை நகர் இணைப்பு, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலை நகர் இணைப்பு, ராமப்பா நகர், ராமப்பா நகர், சி.பி.ஐ.டி. காலனி, மீனாட்சி புரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.
- வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது.
- கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டு, தமிழ்நாட்டில் மழை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்தாலும், பருவமழை அளவுக்கு இல்லை. இந்த இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவகாற்று தமிழ்நாட்டில் முழுவதுமாக நேற்று முன்தினம் முதல் வீசத் தொடங்கியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் 16-ந் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதன்படி, வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ந் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும்.
17, 18-ந் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும் எனவும், 18, 19-ந் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்கிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், பெரிய அளவில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என்றாலும், நீர்நிலைகள் நிரம்பும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதனையடுத்து 3-வது நிகழ்வாக தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்த நிலைகளை கடந்து, புயலாக வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இது முந்தைய 2 நிகழ்வுகள் நிறைவுபெற்றதும், இந்த புயல் எப்படி இருக்கும்? எங்கு கரையை கடக்கும்? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.
- சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 17-11-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர்.
- கருக்கா வினோத்தின் வழக்கு என்.ஐ.ஏ., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
இந்த சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
- சாலைகளில் செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
- சென்னை அண்ணா மேம்பாலத்தில் தி.மு.க. கொடிகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி இடங்களில் அனுமதியின்றி உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளது.
சாலைகளில் செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நீதிபதி இளந்திரையன் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், சென்னை அண்ணா மேம்பாலத்தில் தி.மு.க. கொடிகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில், "பொது இடங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் அறிக்கை கோரியுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 3ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சட்டவிரோதமாக தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவது இனியும் யாராலும் ஏற்க முடியாததாகும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த 8.11.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வானகிரி ஊராட்சியைச் சேர்ந்த திரு. ராமையன் என்பவருக்குச் சொந்தமான படகில் 12 மீனவர்கள், தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் கடலூர் மாவட்டம் வசானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என்று மொத்தம் 14 பேர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், படகில் பழுது ஏற்பட்ட காரணத்தினால், காற்று வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றதால் 9.11.2025 அன்று இலங்கை கடற்படை மீனவர்களால் கைது செய்யப்பட்டனர்.
நமது மீனவர்கள் படகில் பழுது ஏற்பட்டுள்ள காரணத்தில் திசை மாறி இங்கே வந்துவிட்டோம், எங்களுக்கு உதவுங்கள் என்று கோரியதை இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் ஒதுக்கித்தள்ளி சட்டவிரோதமாக தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கக்கூடிய சூழ்நிலை எப்போது வருமோ ? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் அவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருவது இனியும் யாராலும் ஏற்க முடியாததாகும்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிபதில் இருந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதே சமயம் த.வெ.க. கூட்டங்களில் விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் மரம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் மீது ஏறியதை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்தனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று கூறவேண்டாம் என திமுக எம்.எல்.ஏ. எழிலன் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. எழிலன், "தற்குறி என்று பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்களை விமர்சிப்பது தவறானது. நாம் அவர்களுடன் உரையாடவில்லை என்பது நமது தவறு. பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை. நாம் அவர்களுடன் உரையாட தொடங்கினால், அவர்கள் தெளிவடைவார்கள்.
சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்களை 'தற்குறி' என அவமானப்படுத்துவது சங்கிகளின் சதி. சோசியல் மீடியாவில் அவர்களை தற்குறி என அழைப்பது தேவையில்லை. அது சங்கிகளின் திட்டம். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.நாம் அந்த சதியை உணர வேண்டும்.
தவெக தலைமை சுயநலமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம்தான். அவர்களை விமர்சிக்காமல், அவர்களுடன் உரையாட தொடங்க வேண்டும். அவர்கள் சங்கிகள் அல்ல, நம்ம பசங்கதான். அவர்களை நாம் நெருக்கமாகப் பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.
- அமைச்சர் சேகர்பாபு துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.
- அங்கே இருக்கிற தலைவர்கள் அண்ணாமலை உட்பட எல்லோரும் அதற்கான ‘கவுண்டவுனை’ தொடங்கி விட்டார்கள்.
சென்னை:
இந்து அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் தி.மு.க.வின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளிக்கும்போது, 'நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருக்கும் நாட்கள்தான் எண்ணப்பட்டு வருகிறது.
அந்த நாட்கள் எண்ணுவதற்கு அங்கே இருக்கிற தலைவர்கள் அண்ணாமலை உட்பட எல்லோரும் அதற்கான 'கவுண்டவுனை' தொடங்கி விட்டார்கள்' என்றார்.
- கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
- கும்கி 2 படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பட வெளியிட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழர்களை உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
- பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






