என் மலர்
செங்கல்பட்டு
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது
- சென்னை மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் பள்ளிகளுக்கும் கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 760 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்களும், நாளை (18-ந்தேதி) 1935 சிறப்பு பஸ்கள், 19-ந்தேதி 1040 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரங்கள் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
1-வது நடைமேடை: நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை.
2-வது நடைமேடை: திருநெல்வேலி, பாபநாசம், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை(டி.என்.எஸ்.டி.சி), திருநெல்வேலி(டி.என்.எஸ்.டி.சி).
3-வது நடைமேடை: மதுரை, மதுரை கோட்டம், உசிலம்பட்டி, கீழக்கரை, திருமயம், காரைக்குடி, புதுக்கோட்டை, தேவகோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம், ஏர்வாடி, கீரமங்கலம், தொண்டி, பொன் அமராவதி, வீரசோழன், சிவகங்கை, பரமக்குடி, ஒப்பிலான்.
4-வது நடைமேடை: திருச்சி, அன்னவாசல், ஊரணிபுரம், புள்ளம்பாடி, கரூர்,பொள்ளாச்சி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், தேனி, பழனி, கொடைக் கானல், போடி, மூணாறு, கம்பம், குமிழி, திண்டுக்கல்(டி.என்.எஸ்.டி.சி), தேனி(டி.என்.எஸ்.டி.சி), கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி.
5-வது நடைமேடை: திருச்சி, பெரம்பலூர், துறையூர், அரியலூர், புதுக்கோட்டை, காரைக்குடி.
6-வது நடைமேடை: சேலம், எர்ணாகுளம், குருவாயூர், ஊட்டி, ஓசூர், பெங்களூரு, கோயம்புத்தூர், நாமக்கல், மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம்(டி.என்.எஸ்.டி.சி), ஈரோடு(டி.என்.எஸ்.டி.சி), கோயம்புத்தூர்(டி.என்.எஸ்.டி.சி).
7-வது நடைமேடை: கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம்.
8-வது நடைமேடை: திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், அரியலூர்.
9-வது நடைமேடை: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வடலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி.
மேலும் பஸ் நிறுத்தம் பகுதியில் எல்லா இடங்களிலும் வழிகளை அறிந்து கொள்ள பெயர் பலகை, பாதுகாப்புக்காக சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் காத்திருப்பு அமருமிடம், உணவகங்கள், கடைகள், அவசர மருத்துவ பிரிவு, பிரீபெய்டு ஆட்டோ, கார் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் சிறப்பு பஸ்கள் குறித்து அமைச்சர் சிவசங்கரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர்கள், பயணிகளிடம் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கிளாம்பாக்கம் பஸ் நிலைய தலைமைச் செயலர் பிரின்ஸ்லி ராஜ்குமார், போக்குவரத்து தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
- கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
சென்னை :
தீபாவளியை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வருகிற17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் அறிவித்துள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-


- அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.
- எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.
செய்யூர்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மீண்டும் கிராமங்களை நோக்கி மருத்துவர் அய்யா என்கிற தலைப்பில் நேற்று முதல் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் நடைபெற்ற கிராம அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசாங்கம் நீங்கள் நல்லா குடியுங்கள், அதை வைத்துதான் ரூ.1,000 கொடுக்க முடியும் என சொல்கிறது.
ஆனால், நாங்கள் ஒரு சொட்டு மது இருக்கக்கூடாது என்று பேசி வருகிறோம், இளம் தலைமுறையினர் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். கஞ்சாவுக்கு அடிமையானால் மீள முடியாது.
எல்லாரும் குடிங்க, குடிங்க என்று சொல்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தான் படிங்க, படிங்க என சொல்கிறேன்.
உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள், அதற்காக தான் நான் பல போராட்டங்களை நடத்தி உள்ளேன். நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை, என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து மற்றவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், செங்கல்பட்டு மாவட்டச்செயலாளர் சாந்த மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கல்பட்டு அருகே சூனாம்பேடு பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ராமதாஸ் ஈடுபட்டார்.
- 100க்கும் மேற்பட்ட பெண்களிடையே ராமதாஸ் உரையாற்றினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்ணை பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி நடைபயணத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ராமதாஸ் திண்ணை பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
அதன்படி, செங்கல்பட்டு அருகே சூனாம்பேடு பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ராமதாஸ் ஈடுபட்டார். 100க்கும் மேற்பட்ட பெண்களிடையே ராமதாஸ் உரையாற்றினார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், ராமதாஸ் நியமித்த மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
- அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.
- இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தேர்தல் பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கிய உதயநிதி, செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* இ.பி.எஸ். ஆம்புலன்சில் செல்வார் என பேசவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதர் அப்படி பேசுவானா?
* அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.
* அ.தி.மு.க. கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படும்போது காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்று கூறினேன்.
* எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வரத்தான் செய்யும்.
* இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.
* அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும்.
* அ.தி.மு.க.வினர் இதை ஒத்துக்கொள்வார்களா என தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
- கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சிபுரம் தே.மு.தி.க. கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.
இதன்பின் செய்தியாளளை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "உள்ளம் தேடி இல்ல நாடி" என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் 2-ம் கட்ட பயணம் நாளை (இன்று) தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன். நான் சொல்லாதது செய்தியாக வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொல்லாததை அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளன. நான் அப்படி பேசவே இல்லை. இவை அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது.
எங்கள் கட்சி நிர்வாகிக்குள் பேசுவதை, நீங்கள் நான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தே.மு.தி.க. சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன் என்றார்.
முன்னதாக, தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று பிரேமலதா கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வண்டலூர்:
சிங்கப்பெருமாள் கோவில், பாரதியார் தெருவை சேர்ந்தவர் யமுனாபாய். இவரது மகன் ரத்தீஸ். தி.மு.க.பிரமுகரான இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளராக உள்ளார். பஸ், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். யமுனாபாய் தனியாகவும், ரத்தீஸ் குடும்பத்துடன் தனியாகவும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று மாலை யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு மகன் வீட்டுக்கு வந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யமுனாபாயின் வீட்டுக்குகள் பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 140 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அள்ளிசென்று விட்டனர்.
இன்று காலை யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் நேரத்தை நோட்ட மிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
- உடையார்பாளைம் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் மொபைல் போனுக்கு, வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்துள்ளது. அதில், அந்த பெண்ணும், அவரது கணவரும் தனிமையில் இருந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
பின்னர் அந்த வீடியோவை அனுப்பிய மர்ம நபர், அந்த பெண்ணிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தான் கேட்கும் பணத்தை தராவிட்டால், வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இது குறித்து அந்த பெண், தனது கணவரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், கிளாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மிரட்டல் விடுத்த நபர் பெரும்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 27) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் பிரகாஷ் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். பின்னர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளைம் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது கணவன் - மனைவி இருவரும் தனியாக இருந்ததை பெண் ஒருவர் வீடியோ எடுத்து கொடுத்ததாக கூறினார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் பிரகாசை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தமிழ்நாட்டை சேர்ந்த கோபூடோ கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றார்.
- “போதிதர்மர்” வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
மாமல்லபுரம்:
சென்னை குயின் மேரி கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில், பெண்களுக்கான தற்காப்புக்கலை குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கா நாட்டு தற்காப்புக்கலை பயிற்சியாளர் கியோசி டிமோதி, சுவிட்சர்லாந்து கியோசி டெல்ஹம், தைவான் நாட்டு ஐஹி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள்களுடன் தமிழ்நாட்டை சேர்ந்த கோபூடோ கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றார்.
பின்னர் இவர்கள் 4 பேரையும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையகம், மாமல்லபுரம் வரவழைத்து அவர்களுக்கு "போதிதர்மர்" வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது. அப்போது விழா அரங்கத்தில் இருந்த சிலம்பம் கம்புகளை எடுத்து, அமெரிக்க நாட்டு தற்காப்புக்கலை வீரரும், சுவிட்சர்லாந்து வீரரும் முறையாக தத்ரூபமாக சிலம்பம் சுற்றி சண்டையிட்டனர்.

இது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. மன்சூரியா தற்காப்பு கலையின் தேசிய தலைவர் மல்லை சத்யா, செயலாளர் மாஸ்டர் அசோக்குமார், மாமல்லன், இளையராஜா, உள்ளிட்ட குங்ஃபூ வீரர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.
- உலகலாவிய புராதான சின்னமாக நிற்கும் மாமல்லபுரம் கடற்கரைகோவில் ஆகும்
- கிழக்கு பகுதி கடலில் ஆய்வு செய்து பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
மாமல்லபுரம்:
ஏழாம் நுாற்றாண்டு காலகட்டத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவர்களின் துறைமுக பட்டினமாக மாமல்லபுரம் விளங்கியது. மாமல்லபுரத்தில் உள்ள பாறை குன்றுகளில் அவர்கள் பலவகையான சிற்பங்களை செதுக்கினர்.
அத்துடன் அவர்கள் கோவில் கட்டுமானமாக உருவாக்கியது உலகலாவிய புராதான சின்னமாக நிற்கும் மாமல்லபுரம் கடற்கரைகோவில் ஆகும். இந்த கோவில் சிவன், விஷ்ணு சன்னிதிகளுடன் உருவாக்கபட்டுள்ளது. அதன் கிழக்கில் மேலும் சிலகோவில்கள் அமைந்து, அவைகள் கடல் சூழ்ந்து மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறையின் நீருக்கு அடியில் சென்று ஆய்வு செய்யும் சிறப்பு பிரிவினர் 2001-ல் கோவிலின் கிழக்கு பகுதி கடலில் ஆய்வு செய்து பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். 2004-ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின்போது, கடலில் உள்ள பாறைகள் வெளிப்பட்டன, அந்த பாறைகளில் பழங்கால கட்டுமானங்கள் உள்ளதா? என, 2005ல் ஆய்வு செய்து, பாறை கல்லிலான சுவர் போன்ற அமைப்பு சேதமடைந்து கிடப்பதாகவும், அவைகள் கலைநயமான வேலைப்பாடுகளுடன் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

அதன் தன்மையும், துல்லியமும் குறித்து அறிய முடியாத நிலை இருந்தது. தற்போது அதை கூடுதலாக ஆய்வு செய்வதற்காக, ஆர்.ஓ.வி எனக் கூறப்படும் [ரிமோர்ட்லி ஆப்ரேட் வெகிள்] மீன் வடிவிலான ரோபோட்டிக் கேமரா மூலமாக கடலில் மூழ்கிய கட்டுமான சிதைவுகளை துல்லியமாக படம் பிடித்து, அவைகளை ஆவணப்படுத்த தொல்லியல்துறை முடிவு செய்தது.
அதன்படி அத்துறையின் கூடுதல் இயக்குனர் அலோக் திரிபாதி, பிரிவின் தலைவர் அப்ரஜிதா சர்மா உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக மாமல்லபுரம் கடலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கூடுதல் இயக்குனர் அலோக் திரிபாதி கூறியதாவது:-
கடற்கரை கோவிலுக்கு கிழக்கில், ஒரு கி.மீ., தூரத்தில் 6 மீட்டர் ஆழத்தில், நீருக்கு அடியில் பழங்காலத்து கோவில் வெட்டுக்கல் சுவர்கள் இருப்பதை ஆர்.ஒ.வி., கருவி மூலம் துல்லியமாக ஆய்வு நடத்தி கண்டு பிடித்துள்ளோம். தொடர்ந்து இதுகுறித்தும், கடலுக்குள் மூழ்கிய கோவில்கள் குறித்தும் இன்னும் கூடுதலாக நவீன தொழில்நுட்ப உதவியுடன், கடல் மற்றும் செயற்கைகோல் வழியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
- இந்தியாவில் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன.
- நாட்டின் மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம்இ தான் 30 சதவீதம் பங்காற்றுகிறது.
விவசாயத்தில் சிறுகுறு நிறுவனங்கள் தொடங்கி தொழில் முனைவோர்களாக நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என வழிகாட்டுகிறார் "சி சேஞ்ச் " ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனரும், வணிக யுக்தி ஆலோசகருமான எம்.கே.ஆனந்த்.
இதுகுறித்து, அவர் கூறியது: "பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது. அந்த வகையில் உலகளவில் குறுசிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பொருளாதாரத்தை அதிகரிக்கும் பிரதானக் காரணிகளாக உள்ளன. 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் விவசாயம், குறுசிறு நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் தான் பொருளாதார ஊக்கியாக உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன. அதாவது, 7 கோடி தொழில் முனைவோர்கள் உள்ளனர். இதில் 12 கோடி பேர் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் 10 கோடி அளவுக்கு ஆண்டுக்கு வருமானம் ஈட்டினால் அவை குறு நிறுவனங்கள் என்றும், 100 கோடிகள் வரை ஆண்டு வருமானம் ஈட்டினால் சிறு நிறுவனங்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.500 கோடிகள் வருவாய் ஈட்டினால் நடுத்தர நிறுவனங்கள் அன்றும் அரசு வரையறுத்துள்ளது.
நாட்டின் மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம்இ தான் 30 சதவீதம் பங்காற்றுகிறது. அப்படிப் பார்க்கையில் இந்தியாவின் முதுகெலும்பு எம்எஸ்எம்இயைச் சார்ந்துள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக எம்எஸ்எம்இ தொடர்பான "ஸ்டார்ட்அப்" என்பது பெருகி வருகிறது. 1 லட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் "ஸ்டார்ட்அப்" பில் பதிவு செய்து, புதிதாகத் தொழில் தொடங்க வந்துள்ளனர்.
மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில், அனைவருக்கும் வேலை என்ற இலக்கை அடைய தற்போது உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை போதவில்லை. ஆக, அனைவருக்கும் வேலை வேண்டும் என முடிவெடுத்தால், நிறைய தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் இங்கு அவசியம்.
இளைஞர்கள், படித்தவர்கள், வணிகயோசனை கொண்டவர்கள், சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், "ஸ்டார்ட்அப்" என்ற கலாச்சாரத்துக்குள் வரத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் "ஸ்டார்ட்அப்"பில் வருபவர்கள் தொழில்நுட்பத்தை சாந்துள்ளனர்.
எம்எஸ்எம்.இ மற்றும் விவசாயத்தில் ஸ்டார்ட்அப் தொழில்கள் மூலமாக தொழில்நுட்ப புரட்சி அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் பில் சிறுகுறு தொழிலுக்கான திட்டங்கள், வழிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள, வருகின்ற 17.08.2025 ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






