என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 300 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் வித்தியாசமான முறையில் பாராட்டு விழா நடந்தது.
மைதானத்தின் ஓரம் பீரோ போன்று வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து இருவரும் வெளியே வந்ததும் பூச்செண்டு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் அதில் இருந்த தங்களது ஆளுயர புகைப்படத்தில் கையெழுத்திட்டனர். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 160 ரன்கள் குவித்தது.
- கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார்.
தம்புல்லா:
பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார். குசால் மெண்டிஸ் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் வாசிம் ஜுனியர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் சல்மான் ஆகா 12 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 12 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடர் 1-1- என சமனில் முடிந்தது.
இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஹசரங்கா வென்றார்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. சோபி டிவைன் 95 ரன்னும், அஷ்லே கார்ட்னர் 49 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் நந்தனி ஷர்மா 5 விக்கெட்டும், சினேலி ஹென்றி, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லீசெல் லீ 54 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். லாரா வோல்வார்ட் 38 பந்தில் 77 ரன்கள் குவித்து கடைசி வரை போராடி அவுட்டானார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
- இந்தியா 49 ஓவரில் 306 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
- ரோகித் சர்மா 2 சிக்சர் பறக்கவிட்டு ஆட்டமிழந்தார்.
வதோதரா:
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 2 சிக்சர் பறக்கவிட்டு 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா மொத்தம் 329 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் .
தொடக்க ஆட்டக்காரராக கிறிஸ் கெயில் 328 சிக்சர்கள் அடித்திருந்தார். அந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 7-6(7-1) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் விராட் கோலி
- நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களும், சுப்மன் கில் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 49 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
- அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி இன்று வதோதராவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்துவருகிறது. இந்நிலையில் 40வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இப்போட்டியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் கோலி. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி தனது 624வது இன்னிங்ஸில் இந்த சாதனையை அடைந்தார்.
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், 34,357 ரன்கள் குவித்து, இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
- சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.
இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.
நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.
ஆனால் ஒருமுனையில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அரைசதம் அடித்து அசத்தினார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்தது. சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- 2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதித்யா அசோக் அறிமுகமானார்.
- இவர் சுடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசுகிறது. நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள 23 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அவரது உறவினர்கள் வேலூரில் தான் வசித்து வருகிறார்கள்.
2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் சுடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 3 பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறது.
- அர்ஷ்தீப் சிங் இடம் பெறாதது குறித்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஜடேஜா உடன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது. சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (வி.கீ.) ஆகிய பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கியுள்ளது.
இந்திய டி20 அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் விளங்கி வருகிறார். அவருக்கு மற்ற வடிவிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இன்றைய போட்டியில் கூட முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் இந்தியா, இடது கை பந்து வீச்சாளரான அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் "அர்ஷ்தீப் சிங்கை எங்கே? அவ்வளவுதான்.." எனக் குறிப்பிட்டுள்ளார்.
26 வயதான அர்ஷ்தீப் சிங் 72 டி20 போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க தவறினார்.
- இருவரும் 60 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.
இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.
நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது.
- இந்த போட்டிக்காக விராட் கோலி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வதோதராவில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வதோதராவைச் சேர்ந்த இளம் பந்து வீச்சாளர்கள் நெட் பவுலர்களாக பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் விராட் கோலிக்கு நன்றாக பந்து வீசினர். அவர்கள் பந்து வீச்சில் விராட் கோலி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டார்.
தனக்கு பந்து வீசிய இளைஞர்களுக்கு கையெழுத்திட்ட பந்துகளை வழங்கினார். அத்துடன் உத்வேகம் அளிக்கும் வகையில் டிப்ஸ் வழங்கினார்.
நெட் பவுலர்களுடன் உரையாடிய விராட் கோலி "ஒரு பந்து வீச்சாளராக எனக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் தானாகவே எதையும் செய்யாமல், நான் தவறு செய்வதற்காகவோ அல்லது பந்து தானாகவே அடிக்கும் வகையில் வருவதற்காக காத்திருந்தால், அப்போது பந்து வீச்சாளருக்கு எல்லாம் முடிந்துவிட்டது. அதனால், ரன்கள் விட்டுக் கொடுத்தால் அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால், அதை தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள். நான் வீச விரும்பும் பந்தைத்தான் நான் வீசுவேன். ஒரு பேட்ஸ்மேன் விரும்பும் பந்தை நான் வீசப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.






