என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
    • முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.

    கொல்கத்தா:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    பெங்காலில் உள்ள கல்யாணியில் நடக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பெங்கால் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 49 ரன்னில் அவுட்டானார்.

    சுதீப் சாட்டர்ஜி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகினர். ஷபாஸ் அகமது 42 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்புடன் ஆடிய சுதீப் குமார் கராமி சதமடித்து 136 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.

    • ஊழியர்கள் உடனடியாக அந்தப் பெட்டியை தனியே பிரித்தனர்.
    • ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வா ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டது.

    அதிகாலை சுமார் 4.30 மணியளவில், கட்வா இரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த கட்வா - அசிம்கஞ்ச் பயணிகள் ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

    தீ பரவுவதைத் தடுக்க இரயில்வே ஊழியர்கள் உடனடியாக அந்தப் பெட்டியை ரெயிலின் மற்ற பெட்டிகளில் பிரித்தனர்.

    தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தின் போது ரெயில் பெட்டி காலியாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • ரஞ்சி கோப்பை தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன.
    • முதல் காலிறுதியில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணியில் நடந்த முதல் அரையிறுதியில் பெங்கால், ஆந்திரா அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்கால் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 83 ரன்னும், ஸ்ரீகர் பரத் 47 ரன்னும், ஷேக் ரஷீத் 46 ரன்னும் எடுத்தனர்.

    பெங்கால் சார்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய பெங்கால் அணி 629 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுதீப் குமார் கராமி ஒரு ரன்னில் முச்சதத்தை தவறவிட்டு, 299 ரன்னில் அவுட்டானார். ஷகிர் அபிப் காந்தி 95 ரன்னும், சுமந்தா குப்தா 81 ரன்னும், முகமது ஷமி 53 ரன்னும் எடுத்தனர்.

    ஆந்திரா சார்பில் ஷேக் ரஷீத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    334 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆந்திரா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. நிதிஷ் குமார் ரெட்டி 90 ரன்னும், திரிபுரானா விஜய் 46 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஆந்திரா அணி இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்கால் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    பெங்கால் அணி சார்பில் ஷபாஸ் அகமது 4 விக்கெட்டும், சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சுதீப் குமார் கராமிக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 182 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 18.5 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இதில், ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-வது வீரராக ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்தார்.

    டி20 போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள் விவரம்:

    லசித் மலிங்கா (இலங்கை)

    டிம் சௌதி (நியூசிலாந்து)

    பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)

    ரொமாரியோ ஷெப்பர்ட் (வெஸ்ட் இண்டீஸ்)

    • ஊடுரு​வல் நடக்​கும் விதம், ஒட்​டுமொத்த நாட்​டுக்கே பாது​காப்​புப் பிரச்சினை​யாக மாறி​யுள்​ளது.
    • ஊடுரு​வல்​காரர்​களை அவர்​கள் தங்​கள் வாக்கு வங்கியாக கருது​வது​தான் இதற்​குக் காரணம்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் தருகிறது.

    ஊடுருவல் நடக்கும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கே பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது.

    நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எல்லை வேலி அமைப்பதற்காக பிஎஸ்எப் படைகளுக்கு திரிணாமுல் அரசு நிலம் வழங்க மறுக்கிறது.

    ஊடுருவல்காரர்களை அவர்கள் தங்கள் வாக்கு வங்கியாகக் கருதுவதுதான் இதற்குக் காரணம்.

    மாநில காவல்துறை சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுப்பதில்லை. அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் நாடு முழுவதும்

    அனுப்பப்படுகின்றனர்.

    திரிணாமுல் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசை நிறுவ வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அரசு அமைவது மாநிலத்துக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியமானது என தெரிவித்தார்.

    • கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று.
    • பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற 92 வயதான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் குற்றம்சாட்டி உள்ளார்.

    தேசிய ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகவும் கவனத்துடனும், போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டும் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால், மேற்கு வங்காளத்தில் அது அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

    வாக்காளர்கள் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யவும் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு செய்யத் தவறினால், அது வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமர்த்தியா சென் அவரது வாக்காளர் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது பேசுபொருளானது.   

    • காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை நிபா வைரஸ் ஆரமபகட்ட அறிகுறிகளாகும்.
    • இறப்பு ஏற்பட வாய்ப்பு 40% முதல் 75% வரை மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

    இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்.

    பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    பழம் தின்னும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.

    காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை நிபா வைரஸ் ஆரமபகட்ட அறிகுறிகளாகும்.

    நோய்த்தொற்று மோசமானால் மூளை அழற்சி ஏற்பட்டு உயிரிழப்பிற்கு வழிவகுக்கும்.

    நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை.

    இறப்பு ஏற்பட வாய்ப்பு 40% முதல் 75% வரை மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ளது. 

    • SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    SIR நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பதற்றம் காரணமாக தினசரி 4 முதல் 5 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவமனையில் 45-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தனை வருங்களுக்குப் பிறகு, நாம் நாட்டின் குடிமக்களா? என நிரூபிக்க வேண்டியுள்ளது.

    சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட திட்டக்குழுவை, மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக நிதி ஆயோக்கை கொண்டு வந்துவிட்டது. போஸின் பிறந்தநாள் இன்னும் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    • பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது.

    இந்நிலையில் SIR ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அவதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன் ஆஜரான பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருக்கு முன்னதாக விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    விசாரணைக்கு பின் அவர் கூறுகையில், இந்தத் திருத்தப் பணி மிகவும் அவசரமாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும் செயல்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்கப்படாததால், இது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது.

    என்னை விசாரணைக்கு அழைத்ததில் எனக்குப் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    மேலும், பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது மேற்கு வங்க மக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தானும் ஆதரிப்பதாகச் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.

    சந்திர குமார் போஸ் மட்டுமல்லாது, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், நடிகர் தேவ், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தொழிலதிபர் ஸ்வபன் சாதன் பாசு மற்றும் எழுத்தாளர் ஜாய் கோஸ்வாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறிது காலம் பாஜகவோடு பயணித்த சந்திர குமார் போஸ், கடந்த 2023 இல் அக்கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
    • இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது

    மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜன.19) உத்தரவிட்டது.

    ஆட்சேபனைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் இந்தச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது.

    இந்தப் பெயர் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தந்தை பெயரில் மாற்றம், வயது முரண்பாடு (எடுத்துக்காட்டாக, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15-க்கும் குறைவாகவோ அல்லது 50-க்கும் அதிகமாகவோ இருத்தல்) போன்ற காரணங்களால் இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

    முன்னதாக, கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த 1.25 கோடி பேரின் தரவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்பட உள்ளது 

    • தஜ்முல் ஹொசைன் 3 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்.
    • அவரது தந்தை முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் வரை வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதில் பெயர் இல்லாதவர்கள் பெயர்களை சேர்க்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    2002-ல் உள்ள வாக்காளர் பட்டியலுக்கும், தற்போதுள்ள பட்டியலுக்கும் இடையில் வேறுபாடு இருப்பின், அவர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க கேடடுக் கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் மேற்கு வங்க மாநில அமைச்சர் தஜ்முல் ஹொசைனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படடுள்ளது. அதில் தொடர்பான ஆவணங்களுடன் ஜனவரி 29-ந்தேதி காலை 10.30 மணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தஜ்முல் ஹொசைன் கூறியதாவது:-

    இதே தேர்தல் ஆணையம் தன்னை 3 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது தகுதியான வாக்காளர்தானே என்பதை உறுதிப்படுத்த கேட்கிறது. தேர்தல் நடைபெற 3 மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக ஆதாயம் அடைவதற்காகவே SIR நடத்தப்படுகிறது.

    மேற்கு வங்கத்தில் பாஜக அரசை நிறுவுவதற்கு இதுபோன்ற சதித்திட்டதிற்கு எதிராக மேற்கு வங்க மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    தஜ்முல் ஹொசைனின் தந்தை பெயர் திதர் ஹொசைன். இவர் யாதவ் சமூதாயத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர். இவருடைய மூதாதையர் வீடு உத்தர பிரதேசத்தில் உள்ளது. இவருடைய குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர்.

    தஜ்முல் ஹொசைன் 2006 மற்றும் 2016-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2021-ல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.

    அதேபோல், ஐ.எஸ்.எஃப் சட்டமன்ற உறுப்பினர் நவுசாத் சித்திக் என்பவருக்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சித்திக் சமர்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடு இருப்பதை கண்டறிந்தோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
    • நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்

    மத்திய அரசு அமைப்புகளிடம் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.

    மேடையில் பேசிய அவர், "மத்திய ஏஜென்சிகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஜனநாயகத்தைச் சீர்குலைக்கின்றன.

    அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகளில் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள்.

    நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்." என்று தெரிவித்தார்.

    சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பாக் தேர்தல் வியூக அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, மம்தா பானர்ஜி நேரில் சென்று அந்தச் சோதனையைத் தடுத்ததாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மம்தா பானர்ஜி மற்றும் டிஜிபி ராஜீவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   

    ×