என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
    • சில பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இவ்வாறு ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தவறு என பதிவிட்டனர்.

    கால்கள் செயல் இழந்த நிலையிலும் வாலிபர் ஒருவர் வீல் சேருடன் பங்கி ஜம்பிங் சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள இந்தியாவிலேயே மிக உயரமான பங்கி ஜம்பிங் சாகசம் செய்யும் தளத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அபைய் டோக்ரா என்ற வாலிபர் இந்த சாகசத்தை நிகழ்த்தி உள்ளார். அவரை 117அடி உயரத்தில் இருந்து குதிக்க வைக்கும் முன்பு அவரது வீல் சேருடன் சேர்த்து அவருக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

    பின்னர் அவர் சாகசத்தை நிகழ்த்திய பிறகு மகிழ்ச்சி அடைகிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சிலர், அந்த வாலிபரின் தைரியத்தை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இவ்வாறு ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தவறு என பதிவிட்டனர்.


    • கங்கை நதி நீர் 'ஏ' முதல் 'ஈ' வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
    • ஹரித்துவார் கங்கை நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தர பிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.

    அதன்படி நதி நீர் 'ஏ'(A) முதல் 'ஈ'(E) வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

    ஏ என்பது மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம்.

    அதே சமயம் ஈ என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் 'பி' வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரிய வந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    • பேருந்தில் சுமார் 35 பேர் பயணம் செய்த நிலையில் விபத்து.
    • சிலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை.

    உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சுமார் 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை 9 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கவும் காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். அல்மோரோ எஸ்.பி. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    சால்ட் துணை மாவட்ட கலெக்டர், சில பயணிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    மேலும் "பேருந்து விபத்து ஏற்பட்ட 28 பேர் உயிரிழந்தது செய்தி மிகவும் கவலையளிக்கும் செய்தி. துரித மீட்புப்பணிக்கு உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    • உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
    • சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    உணவு மாசுபாடு மற்றும் உணவில் எச்சில் துப்புவதை தடுக்க உத்தரகாண்ட் அரசு கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், உணவு மாசுபாடு கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஓட்டல் மற்றும் தாபா ஊழியர்களை போலீசார் சரிபார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதை அவர் "தூக் ஜிஹாத்" என்று குறிப்பிட்டார்.

    சமீபத்தில், சுற்றுலா பயணிகளுக்கு பழச்சாற்றில் எச்சில் துப்பியதற்காக முசோரியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    டேராடூனில் நடந்த மற்றொரு சம்பவத்தில் ரொட்டிக்கு மாவை தயார் செய்யும்போது சமையல்காரர் எச்சில் துப்பிய வீடியோ சமீபத்தில் வைரலானது.

    இது தொடர்பாக சுகாதார அமைச்சர் தன் சிங் ராவத், வர இருக்கும் பண்டிகை காலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்வதே முதன்மையானது என்று கூறினார்.

    • ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
    • சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதியுள்ளனர்.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமானின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்த இரண்டு கைதிகள் சீதையை தேடுவதுபோல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர்.

    ஆனால் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. அதன்பிறகே அவர்கள் தப்பியோடியதைச் சிறை அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவனும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவனும் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க வெகு நாட்களாகத் திட்டம் தீட்டி வந்ததாகத் தெரிகிறது.

    சிறையில் நடக்கும் நவராத்திரி ராம்லீலா நாடகத்தை சரியான வாய்ப்பாக கருதிய அவர்கள் குரங்கு வேடமிட்டு சீதையைத் தேடச் செல்லும் காட்சியில் நைசாக நழுவி கட்டுமானப்பணிக்காகச் சிறையில் வைத்திருந்த ஏணியைப் பயன்படுத்தி சிறைச் சுவரைத் தாண்டி வெற்றிகரமாகத் தப்பித்துள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.

    • மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.
    • அரை மணி நேரத்திற்கு ஐந்து பேர் வீதம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வந்தனர்.

    கீழே இறங்கி வர முயன்றபோது கற்கள் விழுந்ததால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் சிக்கித் தவித்தனர். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்பட்டது. நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

    இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அரை மணி நேரத்திற்கு ஐந்து பேர் வீதம் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தமிழர்கள் நாளை இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.

    • தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
    • மலைப்பகுதியில் சிக்கிய 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மலைப்பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். கீழே இறங்கி வர முயன்றபோது கற்கள் விழுந்ததால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர்.

    இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 30 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தகவலறிந்த தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம், இதுபற்றி கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அவர், உத்தரகாண்ட் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டார்.

    இதுதொடர்பாக, கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வேண்டிய உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என கவனித்தபின் அதற்கேற்ப அவர்கள் ஊர் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • உத்தரகண்ட் மாநிலத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த பேனர்களில், "இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் எங்காவது நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிதிக்கப்ட்டுள்ளது.

    முஸ்லிம் சேவா சங்கதன் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சில கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த இத்தகைய பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். இத்தகைய பேனர்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
    • ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.

    உத்தரகாண்ட மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள சால்ட் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சால்ட் பகுதியில் தனது சகோதரனுடன் ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் பகவத்சிங் போரா.

    அவரிடம் இருந்து தப்பிய சிறுமி தனது தாயிடம் நடந்ததைக் கூறவே அவர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு போரா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

    • ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை, இந்திய விமானப்படையில் பழுதுபார்ப்பதற்காக கௌச்சர் விமான ஓடுளத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை பாதுகாப்புப் படைகளின் MI-17 ஹெலிகாப்டரில் பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதிக எடை மற்றும் அதிவேக காற்று காரணமாக MI-17 ஹெலிகாப்டர் சமநிலையை இழக்கத் தொடங்கியது. இதனால், விபத்தை தவிர்க்க ஹெலிகாப்டர் கீழே இறக்கிவிடப்பட்டது. அது லிஞ்சோலியில் உள்ள மந்தாகினி ஆற்றின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    • கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.
    • மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது.

    உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் பெண்ணும், அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.

    இந்நிலையில் கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடைபாதையின் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கேதார்நாத்தில் கிட்டத்தட்ட 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவித்தனர்.

    மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து கேதார்நாத்தில் சிக்கித்தவிக்கும் 150 முதல் 200 யாத்ரீகர்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும், மேக வெடிப்பைத் தொடர்ந்து இதுவரை எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோவை பார்த்த பயனர்கள், தீயணைப்பு வாகனங்களும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்கிறதா? என கேள்வி எழுப்பினர்.
    • 1993-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தியாகி, மகாராஷ்டிராவில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டேராடூன்:

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டுக்கு வெளியே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு, வீட்டின் மாடியில் உள்ள நீர் தொட்டிகளை நிரப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    வைரலான வீடியோ ஜூன் 15-ல் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. வீடியோவில், மகாராஷ்டிரா மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா தியாகியின் வீட்டிற்கு வெளியே தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு புகை அல்லது நெருப்பு எதுவும் இல்லாமல் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

    இந்த வீடியோவை பார்த்த பயனர்கள், தீயணைப்பு வாகனங்களும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்கிறதா? என்றும் தண்ணீர் தொட்டிகளை நிரப்ப தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தினால், தீ விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்றும் கேள்வி எழுப்பினர்.


    இதையடுத்து இச்சம்பவம் குறித்து டேராடூன் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், வயதானவர்கள் இரண்டு பேர் வசிக்கும் வீட்டின் சமையலறையில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

    உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், சிலிண்டரில் தண்ணீரை ஊற்றி கசிவைக் குறைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் சிங்கும் தீயணைப்பு அதிகாரியிடம் தகவல் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1993-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தியாகி, மகாராஷ்டிராவில் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். கண்டிப்பான அதிகாரி என்று பெயர் பெற்றவர். 2014-ம் ஆண்டு ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான 'மர்தானி' திரைப்படம் இவரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×