என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
    • சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    பின்னர், சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். பேக்கரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையால் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் புல்டோர் மூலம் பேக்கரியை இடித்தது.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்த அமைச்சரும், நிஷாத் கட்சி தலைவருமான சஞ்சய் நிஷாத், செய்தியாளர்கள் முன் மனம் உடைந்து அழுதார். அப்போது அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சி மொயீத் கானை கட்சியில் இருந்து நீக்கவோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எதுவும் கூறுவோ இல்லை. குற்றவாளியைப் பாதுகாக்கிறது என்று கூறினார்.

    • ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார்.
    • வாலிபரை புதைத்த 4 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 24 வயது இளைஞர் ஒருவர் நிலத்தகராறில் உயிருடன் புதைக்கப்பட்டார். அதன்பின் தெரு நாய்களால் தோண்டி எடுக்கப்பட்ட வினோதம் நடைபெற்றுள்ளது.

    ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் ரூப் கிஷோர் (24). கடந்த மாதம் 18-ம் தேதி அன்று ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்த தன்னை அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் என 4 பேர்தாக்கியதாக குற்றம் சாட்டினார்.

    கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துவிட்டார் எனக்கருதி அவர்களது பண்ணையில் கிஷோரை புதைத்தனர். கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் கூட்டம் தோண்டத் தொடங்கியது.

    அப்போது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவருக்கு திடீரென சுயநினைவு திரும்பியது. இதனால் அங்கிருந்து எழுந்த அவர், அப்பகுதியில் இருந்து வெளியேறினார். உள்ளூர்வாசிகள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக கிஷோரின் தாய் கூறுகையில், 4 பேர் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர் என குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது என்றும், தப்பிச்சென்ற 4 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவர், தெருநாய்களால் உயிர் பிழைத்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை

    ஏற்படுத்தியுள்ளது.

    • பைக்கில் சென்ற பெண்ணை ஒரு கும்பல் துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரல்.
    • அந்த கும்பலை அங்கிருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கனமழை பெய்ததால் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில், லக்னோவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் பைக்கில் சென்ற பெண்ணை ஒரு கும்பல் துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    தாஜ் ஓட்டல் பாலத்தின் கீழ் வெள்ளம் தேங்கியிருந்த சாலையில் பைக்கில் ஒரு ஆணும் பெண்ணும் வந்துள்ளனர். அப்போது அவ்வழியில் இருந்த ஒரு கும்பல் அவர்களின் மீது தேங்கியிருந்த தண்ணீரை தெளிக்க தொடங்கியது. பின்னர் பைக்கை பின்னல் இருந்து பிடித்து இழுத்து நிறுத்தினர். இதனால் நிலை தடுமாறிய இருவரும் சாலையில் தேங்கியிருந்த வெள்ளத்தில் விழுந்தனர்.

    அதன் பின்னர் பாலத்தின் அடியில் இருந்த அந்த கும்பலை அங்கிருந்து போலீசார் விரட்டி அடித்தனர்.

    இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, லக்னோவின் உதவி காவல் ஆணையர், கூடுதல் காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரை கைது விசாரித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் எந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
    • ராகுல் காந்தியுடனான சந்திப்பை தொடர்ந்து தொழிலாளி ராம்சேட் அந்த பகுதி மக்களிடம் பிரபலமானார்.

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 26-ந்தேதி சுல்தான்பூரில் வழக்கு ஒன்றிற்காக கோர்ட்டுக்கு சென்றிருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் கோர்ட்டுக்கு வெளியே 40 ஆண்டுகளுக்கு மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் ராம்சேட் என்ற தொழிலாளியை சந்தித்து கலந்துரையாடினார்.

    அப்போது ராம்சேட்டின் வேலைகள், அவர் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார். மேலும் காலணிகளை சரி செய்வது தொடர்பாகவும் ராகுல் காந்தி, ராம்சேட்டிடம் கற்றுக்கொண்டார்.

    பின்னர் மறுநாள் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் எந்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


    கடைக்கு வந்த ராகுல் காந்திக்கு தொழிலாளி ராம்சேட் குளிர்பானம் வழங்கிய காட்சி.


    ராகுல் காந்தி வழங்கிய பரிசால் இன்ப அதிர்ச்சி அடைந்த ராம்சேட், இனி கைகளால் செருப்பு தைக்க தேவையில்லை என மகிழ்ச்சியுடன் கூறினார். அதோடு ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார்.

    ராகுல் காந்தியுடனான சந்திப்பை தொடர்ந்து தொழிலாளி ராம்சேட் அந்த பகுதி மக்களிடம் பிரபலமானார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி சரி செய்த செருப்பு மற்றும் ஷூவை ரூ.1 லட்சத்திற்கு ராம்சேட்டிடம் பலரும் விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால் ராம்சேட் அதனை கொடுக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து ராம்சேட் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை ஜூலை 26-ந்தேதி எனக்கு அதிர்ஷ்ட நாளாகும். ராகுல் காந்தி எனது கடைக்கு வந்தது கடவுளே என் கடையில் வந்து இறங்கியது போன்று இருந்தது. நான் காலணிகளை எவ்வாறு சரி செய்கிறேன் என்பதை செய்து காட்டும்படி ராகுல் காந்தி என்னிடம் கேட்டார்.

    சிறிது நேரத்தில் அவர் ஒரு செருப்பை எடுத்து என்னிடம் கொடுத்து அதை எப்படி தைப்பது என்று எனக்கு கற்றுக் கொடுக்கும்படி கேட்டார். நான் அவருக்கு செருப்பை தைப்பது குறித்து செய்து காட்டினேன்.

    பின்னர் அவருக்கு ஒரு குளிர்பானம் கொடுத்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு என்னுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி எனது தினசரி சம்பாத்தியம் குறித்து விசாரித்தார்.

    அவரிடம் நான் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன் என கூறினேன். அதோடு அவரிடம் செருப்பு தைக்கும் எந்திரம் வழங்குமாறு உதவி கேட்டேன். அவரும் வழங்குவதாக உறுதி அளித்தார். மறுநாளே செருப்பு தைக்கும் மின்சார எந்திரத்தை ராகுல் காந்தி எனக்கு பரிசாக அனுப்பினார்.

    அவருக்கு நான் தைப்பதற்காக கற்றுக்கொடுத்த செருப்பு மற்றும் ஷூவை ஒரு லட்சத்திற்கு மேல் பலர் கேட்கிறார்கள். ஆனால் அவை விலைமதிப்பற்ற உடமைகள். பணத்தின் அடிப்படையில் அவற்றை எடைபோட முடியாது. கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அவற்றை விற்க மாட்டேன்.

    நான் வாழும் வரை அவற்றை பிரேம் செய்து என் கண்முன்னே வைத்திருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டசபை அதிகாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர்.
    • சட்டசபை செயலக அலுவலகத்திலும் மழைநீர் புகுந்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில், கனமழையால் அம்மாநில சட்டசபைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தண்ணீர் தேங்கியதன் காரணமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபை வளாகத்தில் இருந்து மாற்று வாசல் வழியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

    சட்டசபை அதிகாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர். சட்டசபை செயலக அலுவலகத்திலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    உ.பி. சட்டசபையில் இதற்கு முன்பு இந்த அளவு தண்ணீர் தேங்கியதை நாங்கள் பார்த்ததில்லை என்று அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    டெல்லியில் பெய்துவரும் கனமழையால் நேற்று பாராளுமன்ற வளாகத்திற்க்குள்ளும் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி கேட்டுள்ளார்.
    • கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு சேலை வாங்கி தராத கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2022 ஆம் ஆண்டு முதல் திருமணமான இந்த ஜோடி, சிறு சிறு விஷயங்களுக்கு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். புதிதாக சேலை வாங்கி தரச்சொல்லி கணவனிடம் மனைவி வற்புறுத்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, கணவர் தனக்கு சேலை வாங்கிதரவில்லை என்றும், என்னை உடல் ரீதியாகவும் தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அதில் மனைவிக்கு புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

    பின்னர் கணவன் புடவை வாங்கி கொடுத்த பின்னர் மனைவி சமாதானம் ஆனதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    • பாஜக ஆட்சியில் உலக அதிசயமான தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
    • தாஜ்மஹாலில் சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்ததாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன

    தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன.

    தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தற்போது கன்வார் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மீனு ரத்தோர் எனும் பெண் ஒருவர் 'கன்வார்' ஒன்றை தோளில் சுமந்துகொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    தன்னை அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர் என கூறிக்கொண்ட அவர், "தாஜ்மஹால முன்பு தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது என்றும் சிவபெருமான் தன் கனவில் வந்து அவரது கோவிலில் கங்கை நதியின் புனித நீரை தெளிக்க சொன்னார். ஆனால் போலீசார் என்னை தடுத்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

    • லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.
    • லவ் ஜிகாத்' குற்றத்திற்கான அபராத தொகை 5 லட்சமாக உயர்த்தப்படும்.

    லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாஜகவினர் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக 2021 ஆம் ஆண்டு யோகி அரசு சட்டம் இயற்றியது.

    இந்த சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டு காதலித்து, பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது என்றும் அவ்வாறு திருமணம் செய்தவரை ஜாமீனில் வரமுடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

    இந்நிலையில் லவ் ஜிகாத் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தரபிரதேச பாஜக முடிவு செய்துள்ளது.

    உத்தரபிரதேசம் மதமாற்றதடைச்சட்டம் 2024 என்று முன்மொழியப்படவுள்ள இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா உத்தரபிரதேச சட்டசபையில் இன்று அறிமுகம் வைத்தார்.

    இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அபராத தொகை 50,000 ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.

    லவ் ஜிகாத் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் புகார் கொடுத்தால் தான் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது அந்த வரம்பை தளர்த்தி யார் புகார் கொடுத்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று இந்த சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் சோட்கி இப்ராடிஹிம்பூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு பஞ்சாயத்தில் கொடூர தண்டனை அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தண்டனை அளிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் மும்பையில் வேலை பார்ப்பதாகவும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண் தொடர்பில் இருந்த ஆணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதாக விசாரணை தெரிய வந்துள்ளது

    இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. பஞ்சாயத்தின் உத்தரவின் பேரில், அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, தலைமுடி வெட்டப்பட்டு, முகத்தில் கருப்பு மை பூசி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த தண்டனை வழங்கியபோது அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆண் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    காவல் நிலையப் பொறுப்பாளர் நந்த் லால் சிங் அளித்த புகாரின் பேரில், 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, வீட்டில் படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார்.
    • இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், தீபாளியும் ஒருவர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி தீபாளி கனோஜ்யா அமெரிக்க வெளியுறவுத் துறை நிதியுதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பை படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆகஸ்ட் 19 அன்று தீபாளி அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.

    சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, அவரது கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். தனது தந்தை படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் வீட்டில் ட்யூஷன் நடத்தி தீபாளி தாய்க்கு உதவி வந்துள்ளார்.

    ஒதுக்கப்பட்ட சமூகம் மற்றும் நலிந்த பொருளாதார பின்னணியை சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார்.

    இது தொடர்பாக பேசிய தீபாளி, "இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், நானும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவை பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் எனது படிப்புக்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய தீபாளியின் தாயார், "என் மக்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு சற்று பதட்டமாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
    • ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை ராம்சேட் பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

    அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நேற்று செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் மெஷின் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

    இதனால், இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

    • கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார்,கவுமுக், கங்கோத்திரி உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கு சிவனின் பக்தர்கள் பயணம் சென்று கங்கை நீரை எடுத்துவரும் இந்து மத யாத்திரை கன்வர் யாத்திரை என்று அழகைக்கப்படுகிறது. உத்தரபிரதேசம் வழியாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 6 தேதி முடிவடைகிறது.

    முன்னதாக உ.பியில் கன்வர் யாத்திரை நடக்கும் வழியில் உள்ள உணவகங்களின் முன் உரிமையாளர்கள் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது. இது இஸ்லாமிய கடை உரிமையாளர்களை பாதிக்கும் விதமாக உள்ளது என்று சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையில் கடைகளில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, அமைதியை உறுதிசெய்யவே என்று உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி உ.பி மாநிலம் முஜாபர்நகரில் உள்ள சாலையில் தங்களை பார்த்து ஹாரன் அடித்ததாகவும் மோத முயன்றதாகவும் கூறி இஸ்லாமிய நபர் சென்ற காரை அடித்து உடைத்து அவரை தாக்கும்  வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 15 கன்வர் யாத்ரீகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இந்நிலையில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உ.பியின் மீனாக்ஷி சவுக் பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி முகாமிட்டிருந்த அந்த பக்தர்கள், அவ்வழியாக சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபரை மக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தி அதை படம் பிடித்தும் உள்ளனர். தாக்கப்பட்ட நபர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் உ.பி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்துவருவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏறபடுத்தியுள்ளது.

    ×