என் மலர்
உத்தரப் பிரதேசம்
- சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த கட்டடம் 150 வருட பழமையானது.
- கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் சதார் பஜார் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று நேற்றைய தினம் இடிந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டடம் இடிந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் நொடியில் உயிர் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 100 முதல் 150 வருட பழமையான அந்த கட்டடம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 6-7 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அந்த கட்டடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து வந்தனர்.
அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பும் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கணவன்-மனைவி இடையேயான தாம்பத்திய உறவில் உள்ள சிக்கலே இதற்கான அடிப்படை காரணம் என்பது தெரியவந்தது.
- பிரஞ்சல் மீதான வரதட்சணை வழக்கை நீதிபதி அனிஷ் குமார் குப்தா ரத்து செய்தார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரஞ்சல் சுக்லா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மீஷா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, பிரஞ்சல் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் 2 பேர் மீது மீஷா வழக்கு தொடர்ந்தார்.
தன்னை ஆபாச படங்கள் பார்க்கவும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் பிரஞ்சல் மீது மீஷா குற்றம் சாட்டியிருந்தார். தன்னை தனியாக விட்டுவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டதாகவும் அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் நீதிபதி அனிஷ் குமார் குப்தா முன்பு விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில், பிரஞ்சல் மீது கூறப்பட்ட வரதட்சணை புகார் பொய்யானது என தெரியவந்தது. ஏனெனில் திருமணத்துக்கு முன்பு கூட பிரஞ்சல் குடும்பத்தினர் வரதட்சணையாக பணம் எதுவும் கேட்கவில்லை என கண்டறியப்பட்டது.
அப்படியென்றால் கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்சனைக்கு காரணம் என்ன? என்று விசாரித்தபோது உண்மை வெளியானது.
அதாவது கணவன்-மனைவி இடையேயான தாம்பத்திய உறவில் உள்ள சிக்கலே இதற்கான அடிப்படை காரணம் என்பது தெரியவந்தது. பிரஞ்சலுடன் பாலியல் உறவுக்கு மீஷா தொடர்ந்து மறுத்து வந்ததே இந்த பிரச்சனைக்கான காரணம் என கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரஞ்சல் மீதான வரதட்சணை வழக்கை நீதிபதி அனிஷ் குமார் குப்தா ரத்து செய்தார்.
அந்த உத்தரவில் அவர் மேலும் கூறியதாவது:-
பிரஞ்சல் மீதான வழக்கையும், மனைவியின் வாக்குமூலத்தையும் தீவிரமாக ஆய்வு செய்ததில் இருவருக்கு இடையே எதாவது தாக்குதல் நடந்திருந்தால் அது வரதட்சணைக்காக அல்ல என்பதும் எதிர் தரப்பினரின் (கணவர்) இல்லற இன்பத்துக்கு மறுத்ததால் நடந்தது என்பதும் உறுதியாகிறது. இதில் வரதட்சணை புகார் என்பது கட்டுக்கதை ஆகும்.
இந்த விவகாரத்தில் இருதரப்புக்கு இடையேயான தகராறு, பாலியல் இணக்கமின்மை தொடர்பான சர்ச்சை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது, மேலும் இந்த தகராறு காரணமாக எதிர் தரப்பினரால் (மனைவி) தவறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து உடனடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒழுக்கமான நாகரிக சமூகத்தில் ஒருவர் தனது சொந்த மனைவியை அல்லது கணவரை தவிர இல்லற இன்பத்துக்கு வேறு எங்கு செல்ல முடியும்?
இவ்வாறு நீதிபதி கூறினார்.
- ராவணனின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது.
- ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான ராவண வதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஸ்ராக் [Bisrakh] என்ற கிராமம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
ராமாயணக் கதைப்படி ராவணன் தீய சக்தியாக சித்தரிக்கப்பட்டு அவரின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது. மாறாக இந்த பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் ஆத்மா சாந்தியடைவதற்காகப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
ராவணன் தங்களின் பிஸ்ராக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் அனைவரும் ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் இம்மக்கள் நம்புகின்றனர். எனவே தங்களின் மூதாதையான ராவணனின் புத்திக்கூர்மையையும், கடவுள் சிவன் மீது அவர் வைத்திருந்த பக்தியையும் போற்றுகின்றனர்.
ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். இந்த கிராமத்தில் சிவன்கோவிலில் உள்ள லிங்கம் முற்காலத்தில் ராவணன் மற்றும் அவரது தந்தையால் வழிபடப்பட்டது என்று இவர்கள் கருதுகின்றனர். இவர்களை போல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மந்தோர் கிரமத்தில் ராவணன் மூதாதையாக கருத்துப்பட்டு அம்மக்களால் வழிபடப்பட்டு வருகிறார்.

தற்போது தங்கள் மூதாதை ராவணனுக்காகக் கோவில் கட்டவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். கதைப்படி ராவணன் இலங்கையைச் சேர்ந்தவர் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், வெவ்வேறு பகுதிகளில் ராமாயணம் வெவ்வேறு வகையாகப் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஆகியவற்றில் ராவணனுக்குக் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகளைக் கொலை செய்ய சுபாஷ் என்ற நபரை ரூ. 50,000 காசு கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார் தாய்.
- இதுதெரியாமல் மகளை கொல்ல சுபாஷுக்கு அல்கா பணம் கொடுத்துள்ளார்.
மகள் காதலிப்பதைப் பிடிக்காமல் அவளை கொலை செய்ய காசு கொடுத்து ஒருவரை ஏற்பாடு செய்துள்ளார் தாய். கடைசியில் அந்த நபரால் தாயே கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஏதா [Etah] மாவட்டத்தில் வசித்து வந்தவர் 42 வயதான அல்கா தேவி [Alka Devi]. இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தனது மகள் யாருடனோ காதலில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் மகளைக் கொலை செய்ய சுபாஷ் என்ற நபரை ரூ. 50,000 காசு கொடுத்து ஏற்பாடு செய்துள்ளார் அல்கா.
இதற்கிடையே தனது மனைவி அல்கா வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போனதாக அவரது கணவர் ராம்காந்த் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு அல்கா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடத்திய விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. அதாவது, தனது மகளை கொல்ல அல்கா சுபாஷ் என்ற நபரை நியமித்திருந்ததும் அதே சுபாஸ் மகளுக்கு பதிலாக பணம் கொடுத்து கொலை செய்ய சொன்ன அல்காவை கொன்றுள்ளது தெரியவந்தது. ஆனால் சுபாஷ் ஏன் அல்காவை கொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அதன் காரணமும் தெரியவந்துள்ளது.
அதாவது, அல்காவின் மகளை காதலித்து வந்ததே சுபாஷ்தான். இதுதெரியாமல் மகளை கொல்ல சுபாஷுக்கு அல்கா பணம் கொடுத்துள்ளார். எனவே சுபாஷும் அல்காவின் 17 வயது மகளும் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அல்காவின் மகளை கொலை செய்துவிட்டதுபோல் பொய்யாக புகைபடங்களை எடுத்து அதை தாய் அல்காவுக்கு அனுப்பி வைத்து மேலும் அதிக பணம் கேட்டுள்ளார் சுபாஷ்.
இதுதொடர்பாக பேச சுபாஷை சந்திக்க அல்கா நேரில் வந்த நிலையில் அல்காவின் மகள் மற்றும் சுபாஷ் இருவரும் அல்காவை ஊருக்கு ஒதுக்குபுறமான விவசாய நிலத்துக்கு கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த உண்மைகள் அனைத்தும் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அல்காவின் மகளும் சுபாஷும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்
- அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடந்த ராம்லீலா நாடகத்தை நாற்காலியில் உட்கார்ந்து பார்த்ததாகத் தலித் நபரை போலீசார் தாக்கியுள்ளனர். உ.பி. மாநிலம் காஸ்கஞ்ச்[Kasganj] மாவட்டத்தில் உள்ள சலேம்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமாயண புராணக் கதைகளைக் கூறும் ராம்லீலா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது.
இந்த நாடகத்தைப் பார்க்க ஆவூரைச் சேர்ந்த சந்த் [Chand] [ 48 வயது நபர்] வந்துள்ளார். அங்கு காலியாக கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்து ராமாயண நாடகத்தைப் பார்த்ததால் கொதிப்படைந்த சாதிய வக்கிரம் கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் சிலரை ஏவி சந்த் -ஐ அடிக்க வைத்துள்ளனர். அந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளி சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிதித்தும் சரமாரியாக அடித்தும் உள்ளனர்.
இதனால் சந்த் அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. பின் அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்த சந்த் தனது மனைவி ராம் ரதியிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
திங்கள்கிழமை காலை எழுந்து பார்க்கும்போது தனது கணவர் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை மனைவி ராம் ரதி பார்த்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக மனைவி ராம் ரதி போலீசில் மேற்கூறியபடி நடத்தவை குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாரதி, ராம்லீலா நிகழ்ச்சிக்கு மதுபோதையில் வந்த சந்த் மேடை மீது ஏறி அமர்ந்துள்ளார்.அவரை அப்புறப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். எனவே அவரை போலீஸ் மேடையில் இருந்து இறக்கியுள்ளது. அதன்பின் அவர் பத்திரமாக வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் காலையில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். சந்த் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை விவசாய வேலைகள் செய்து காப்பாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று இரவே அருங்காட்சியகம் தகர தடுப்புகளால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த வருடமும் ஜே.பி நாராயண் சிலைக்கு மரியாதை அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்
மறைந்த சோசியலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினம் இன்று [அக்டோபர் 1] கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள அவரது அருங்காட்சியகத்துக்குச் செல்ல முயன்ற சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் இன்டர்நேஷனல் சென்டரின் (ஜெபிஎன்ஐசி) அமைந்துள்ள அவரின் சிலைக்கு அகிலேஷ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக இருந்தது. ஆனால் நேற்று இரவே அருங்காட்சியகம் தகர தடுப்புகளால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சமாஜ்வாதி கட்சி அலுவலகம் முன்பும் போலீஸ் குவிக்கப்பட்டது. கடந்த வருடமும் ஜே.பி நாராயண் சிலைக்கு மரியாதை அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அவ்வாறு நடந்துள்ளதால் அகிலேஷ் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அகிலேஷ், பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும்,எதிரானது, ஜே.பி.நாராயண் சிலைக்கு மரியாதைசெலுத்த விடாமல் சமாஜ்வாதி அலுவலகம் முன்பு தடைகள் போடப்பட்டுள்ளது. காலனியவாதிகளுக்கு ஆதரவளித்து வந்ததனால் பாதைகளை எப்படித் தடுப்பது என்பதை நன்றாக கற்றுக்கொண்டுள்ளனர்.

அருங்காட்சியகத்தின் முன் தகரத் தடுப்புகளை வைத்து எதை மறைப்பதற்கு இந்த அரசு முயல்கிறது. இந்த அரசு ஏன் எங்களை தடுக்கிறது? எதற்கு பயப்படுகிறது? எங்களை தடுப்பதால் ஜே.பி. நாராயணனின் சித்தாந்தத்தை வீழ்த்த முடியுமா?
ஒவ்வொரு வருடமும் சோஷலிஸ்டுகள் இங்கு ஒன்றுசேர முடியாதபடி இதை பாஜக செய்து வருகிறது. உ.பி அரசுக்கு அவரைப் பற்றி என்ன தெரியும்?.ஜெ.பி. நாராயண் இயக்கத்தில் இருந்து வந்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இந்த அவமரியாதையைக் கண்டித்து நிதிஷ் குமார் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆதரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

- பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீசார் இதில் தலையிட்டு சமாதானப்படுத்த முற்பட்டனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எம்எல்ஏவை அறைந்த வழக்கறிஞர் உள்ளூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அவதேஷ் சிங் என தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்துள்ளது ஆகவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எம்எல்ஏ யோகேஷ் வர்மா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சய் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
- நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார்.
- இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு மாலத்தீவு அதிபர் வருகை புரிந்தார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதா முகமதுவுடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார். அதில், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்டு அறிமுகம் மற்றும் ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை திறப்பு உட்பட பல ஆவணங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்த மாலத்தீவு அதிபரை ஆக்ரா விமான நிலையத்தில் அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார்.
பின்னர் மாலத்தீவு அதிபர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மஹாலை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்தார்.
மாலத்தீவு அதிபரின் வருகை காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரை தாஜ் மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.
- ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது
கல்யாணத்தில் டி.ஜே பாடல் போடும் தகராறில் மாப்பிள்ளை பக்க விருந்தினர் பெண் வீடு சார்பாக வந்த விருந்தினரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளில் டி.ஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒலிபரப்பும் டிரண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தில், தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.
ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதானமாகி நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் மாப்பிள்ளை வீடு சார்பில் திருமணத்துக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஆத்திரம் அடங்காமல் பெண் வீடு சார்பில் வந்த விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும்போது வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை பக்க உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்.
- தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சிம்ரன் குப்தா. மாநில அளவிலான அழகி போட்டிகளில் பட்டம் வென்ற அவர் டெல்லியில் தங்கியிருந்து மாடலிங் துறையில் கொஞ்சம் காலம் ஈடுபட்டு வந்தார்.
கொரோனா ஊரடங்கின்போது வேலையில்லாமல் திண்டாடி வந்த சிம்ரன் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் அழகை மட்டும் நம்பினால் சம்பாதிக்க முடியாது என முடிவு செய்தார். இதனால் தள்ளுவண்டி மூலம் சாலையோரத்தில் டீக்கடை அமைத்து தனது சொந்த காலில் நிற்க தொடங்கி உள்ளார்.
தற்போது இவரின் இந்த டீக்கடை யூடியூபர்களால் பிரபலமாகி வர ஏராளமானோர் அவருடைய கடைகளில் குவிந்து வருகிறார்கள். டீக்கடையில் நின்றபடி சிம்ரன் குப்தா டீ தயாரிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் மணல் கொட்டப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.
- போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் மண்ணை கொட்டிய லாரி டிரைவர் தப்பி ஓடிய நிலையில், லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ் சிங் ரெயில் நிலையே அருகே ரெயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்ததும், அவர் ரேபரேலியில் இருந்து ரகுராஜ் சிங் நிலையம் வரவிருந்த ரெயில்லை தகவல் கொடுத்து நிறுத்தினார்.
இதனால் பயணிகள் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது. பின்னர் தண்டவாளத்தில் கொட்டிய மணலை அகற்றியபின் ரெயில் சேவை தொடங்கியது.
அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், அதற்கு மணல் கொண்டு வந்த லாரி டிரைவர் தண்டவாளத்தில் மணலை கொட்டிவிட்டு சென்றிக்கலாம் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
மணலை கொட்டிச் சென்ற டிரைவர் போலீசார் தேடிவருகின்றன. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் தலைமை பூசாரி நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார்.
- கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்.
உத்தரப் பிரதேச மாநிலம் கசியபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோவில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் [Narsinghanand] நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஆன பின் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாஸ்னா தேவி கோவில் முன் ஏராளமானோர் திரண்டு நேற்று இரவு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் 10 முதல் 20 பேரை சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காசியாபாத்தில் லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ நாணந்த் கிசோர் குர்ஜார் பேசுகையில்,அவர்கள் கோவில் மீது கல்லெறிந்துள்ளனர். கோவில் தாக்கப்படுவது என்பது சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல். இது மொத்த இந்துத்துவா மீதுமான தாக்குதல். போராட்டத்தில் லத்தி சார்க் செய்து போலீஸ் நாடகமாடியுள்ளது.
10 முதல் 20 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருந்தால் அதன்பின் அவர்களுக்கு போராடும் துணிச்சல் வந்திருக்காது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கண்டனங்களை குவித்து வருகிறது.






