என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும்.
    • வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று சுமார் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    மேலும், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2,870 கோடி மதிப்பில் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் புதிய முனைய கட்டிடம் மற்றும் தொடர்புடைய பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரம் பெறும்போது, சமூகமும் வளர்ச்சியடையும்.

    பெண்களுக்கு பாஜக அரசு புதிய பலத்தை அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுகிறோம்.

    மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளோம். நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களே அரசின் முதன்மையான முன்னுரிமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.
    • வீடியோ எடுக்கும்போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து ஆசீப் கீழே விழுந்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.

    3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஆசிஃப்பிறகு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிப்பை அவரது நண்பர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் வெளியேறியதினால் ஆசீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மேலும், தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் ரூ.100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.
    • திருமணத்தை விரைந்து ஆன்லைனில் நடத்தி முடிக்க இருவீட்டார் முடிவு எடுத்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய மணமகன், பாகிஸ்தான் மணமகளுக்கு ஆன்லைன் வழியே எல்லை தாண்டிய திருமணம் நடந்தது. இந்த வித்தியாச திருமணம் பா.ஜ.க.-வை சேர்ந்த உள்ளூர் தலைவர் தஹ்சீன் ஷாஹித் குடும்பத்தில் தான் வெற்றிகரமாக அரங்கேறி இருக்கிறது.

    தஹ்சீன் ஷாஹித் மகன் முகமது அப்பாஸ் ஹைதர் மற்றும் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த ஆன்ட்லீப் சஹ்ராவுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி, மணமகன் பாகிஸ்தான் செல்ல விசா கோரி விண்ணப்பித்து இருந்தார். எனினும், இரு நாடுகள் இடையே அரசியல் பிரச்சினைகள் நிலவுவதால், விசா கிடைக்காமல் போனது.

    இதைத் தொடர்ந்து மணப்பெண் தாயார் ராணா யாஸ்மின் ஜைதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தாயார் உடல்நிலையை கருத்தில் கொண்டு திருமணத்தை விரைந்து முடிக்க ஆன்லைனில் நடத்துவதே சிறந்த வழியாக இருக்கும் என்று இருவீட்டார் இணைந்து முடிவு எடுத்தனர்.

    அதன்படி கடந்த வெள்ளிக் கிழமை இரவு, ஷாஹித் இமாம்பராவில் கூடி ஆன்லைன் திருமணத்தில் பங்கேற்றார். லாகூரைச் சேர்ந்த மணமகளின் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.

    ஆன்லைன் திருணம் பற்றி பேசிய ஷியா மதத் தலைவர் மௌலானா மஹ்ஃபூசுல் ஹசன் கான், "இஸ்லாத்தில், திருமணம் செய்ய பெண்ணின் சம்மதம் இன்றியமையாதது. மேலும் மணப்பெண் தன் சம்மதத்தை மௌலானாவிடம் தெரிவிக்க வேண்டும். இரு தரப்பு மௌலானாக்கள் இணைந்து விழாவை நடத்தும் போது ஆன்லைன் திருமணம் சாத்தியமான் ஒன்று தான்," என்றார்.

    மேலும் மணமகன் ஹைதர் தனது மனைவிக்கு இந்திய விசாவை எந்த தொந்தரவும் இல்லாமல் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.
    • இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார்.

    சாலையில் கிடந்த தக்காளிகளுக்கு இரவு முழுவதும் உ.பி. போலீஸ் காவல் இருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லாரி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதி அருகே நெடுஞ்சாலையில் குறுக்கே பசுமாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது.

    இதனால் வண்டியிலிருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இந்த விபத்தில் லாரியின் பின்னால் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

    மேலும் இரவு நேரம் என்பதால் சாலையில் கிடந்த தக்காளிகளைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விடியும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்கப்படும் நிலையில் தக்காளிகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது. எனவே சாலையிலேயே தக்காளிகளுக்கு இரவு முழுவதும் போலீசார் காவலாக நின்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பெட்ரோல் பங்க் வந்த எம்.எல்.ஏ. ஊழியரின் கோரிக்கையால் அதிர்ச்சி.
    • இருவரின் உரையாடல் வீடியோவை எம்.எல்.ஏ. முகநூலில் பதிவேற்றம் செய்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் போட வந்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடம், பெட்ரோல் பங்க் ஊழியர் விடுத்த கோரிக்கை அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    44 வயதான அகிலேந்திர கரே என்ற பெட்ரோல் பங்க் உதவியாளர், தனக்கு மணப்பெண் கண்டுபிடிக்க உதவுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சரகாரி தொகுதி எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத் அதிர்ச்சியடைந்தார்.

    சமீபத்திய தேர்தல்களில் ராஜ்புத்துக்கு வாக்களித்ததாகக் கூறிய காரே, எம்.எல்.ஏ.வின் வெற்றியில் தனது பங்கு இருந்ததாக தெரிவித்தார். இதற்கு கைமாறு செய்யும் வகையில், எம்.எல்.ஏ. தனக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவ வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

    எம்.எல்.ஏ. மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் இடையிலான இந்த உரையாடல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்த எம்.எல்.ஏ. தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.


    • மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    • கடந்த முறை 7 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 288 இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

    கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நாளை மகாராஷ்டிரா செல்கிறார்.

    அவர் இந்தியா கூட்டணியில் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடும் வகையில் இடங்களை கேட்டு வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்தமுறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஏழு இடங்களில் போட்டியிட்டது. இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

    "நாளை நான் மகாராஷ்டிரா செல்கிறேன். இந்தியா கூட்டணி வெற்றியை உறுதி செய்வதுதான் எங்களுடைய முயற்சி. மகாராஷ்டிராவில் சரத் பவார், உத்தவ் தாக்கரே கட்சி தலையைிலான இந்தியா கூட்டணியில், சமாஜ்வாடி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் அடங்கும்.

    எங்கள் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது நாங்கள் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் வகையில் அதிகமான இடங்களை கேட்போம். எங்களின் முழு பலத்துடன் இந்தியா கூட்டணிக்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம்" என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • குடும்பத்தில் உள்ள அனைவரும் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டதால் தொழில் அதிபருக்கு சந்தேகம்.
    • சமையல் அறையில் ரகசிய கேமரா வைத்தபோது பணிப்பெண் சிறுநீர் கலந்தது தெரியவந்தது.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை.

    இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்திருந்தார்.

    அப்போது சமையல் வேலையும் செய்யும் பெண் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சமையல் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்து தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அந்த சமையல் பணிப்பெண் 8 வருடமாக வேலை செய்து வருகிறார். இருந்த போதிலும் முதலாளிக்கு எதிராக இப்படி ஒரு அருவருப்பான வேலையை செய்துள்ளார்.

    இதனால் அந்த தொழில் அதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் குற்றச்சாட்டை மறுத்த அந்த பணிப்பெண், வீடியோவை காண்பித்ததும் அமைதி காத்தார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • 44 வயதான பெட்ரோல் பங்க் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் பெண் பார்க்க உதவி கேட்கிறார்.
    • வாக்களித்ததால் உதவி கேட்பதாக அந்த ஊழியர் தெரிவிக்க, நிச்சயமாக என எம்எல்ஏ உறுதியளிக்கிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் சர்க்காரி தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பிரிஜ்பூஷண் ராஜ்புட். இவர் தனது காரில் பயணம் மேற்கொண்டபோது, மஹோபா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி எரிபொருள் நிரப்பினார்.

    அப்போது பெட்டோல் நிரப்பும் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் தனக்கு பெண் பார்க்க உதவும்படி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக இருவரிடையே நடைபெற்ற உரையாடல் வைரலாகி வருகிறது.

    சர்க்காரி என்ற இடத்தில் வசித்து வரும் பெட்ரோல் நிரப்பும் ஊழியரான அகிலேந்திர கரே, எம்.எல்.ஏ.விடம் "தனக்கு பெண் பார்க்க உதவுங்கள்" எனக் கேட்கிறார்.

    அதற்கு எம்.எல்.ஏ. பிரஜ்பூஷண் ராஜ்புட் "உங்களுக்கு என்ன வயது ஆகிறது" எனக் கேட்க, அந்த ஊழியர் "44 வயது ஆகிறது" எனக் கேட்கிறார்.

    "உங்களுக்கு பெண் தேடுவதற்காக என்னை தேர்ந்தெடுத்தது ஏன்?" என எம்.எல்.ஏ. கேட்க, அந்த ஊழியர், "நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன்" எனக் கூறுகிறார்.

    அதற்கு எம்.எல்.ஏ. "வேறு யாரிடம் பெண் பார்க்க சொன்னீர்களா? நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். பெண் தேட முயற்சிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் எனக்கு வாக்களித்துள்ளீர்கள்" எனக் கூறுகிறார்.

    உங்களுடைய வருமானம் எவ்வளவு, ஒருவேளை பெண் வீட்டார் கேட்டால் கூற வேண்டும் எனக் கேட்க, அந்த ஊழியர், "6 ஆயிரம் ரூபாய். 13 பிகாஸ் நிலம் உள்ளது" என்கிறர். அதற்கு எம்.எல்.ஏ. நிலம் கோடிக்கணக்கில் மதிப்பு மிக்கது. உங்களுக்கு உதவி செய்வேன்" எனக் கூறுவது போல் உரையாடல் முடிவடைகிறது.

    • நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது.
    • நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது.

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் ராவணனாக நடித்த 2 நடிகர்கள் உண்மையிலேயே சண்டையிட்டு கொண்ட நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராம்லீலே நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. அப்போது ராமனும் ராவணனும் அம்புகளை விட்டு சண்டையிட தொடங்குகின்றனர். அப்போது ஜெய்ஸ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

    அப்போது ராவணனாக நடித்த நபர் திடீரென்று ராமனை தள்ளி விடுகிறார். அதனால் கோபமடைந்த ராமன் ராவணனை தாக்க வருகிறார். அப்போது ராமனை கீழே தள்ளி அவரை ராவணன் அடிக்க தொடங்குகிறார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • வீட்டுக்கு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர்.
    • இளைஞர்கள் 3 பேர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

    பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக அன்றி இன்னும் இந்த சமூகம் போகப் பொருளாகவே பார்க்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் அதையே சுட்டிக்காட்டுகிறது.

    நேற்று [திங்கள்கிழமை] அதிகாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சின்ஹாட் சாலையில் மோசமான நிலையில் கிடந்துள்ளார். லாலுளாய் [Laulaai] கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி கிராமத்தில் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து உடல் உபாதையை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரை தேடி வந்துள்ளனர். அப்போதே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த அவர் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

    வீட்டை விட்டு அதிகாலை வெளியே வந்த சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து அவளின் கை கால்களைக் கட்டி சாலையில் வீசிச் சென்றுள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. லோஹியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்
    • மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை.

    உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும் என்றும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை திறந்து வைத்தார். அதன்பிறகு பேசிய அவர், "மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்." 

    "ரத்த அழுத்த நோயாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவர்களின் மருந்து அளவை 10 நாட்களில் 20 மில்லி கிராமில் இருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம்."


     

    "இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை, மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொடுக்க வேண்டும். மாடுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒருவகையில் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கும். மாட்டு சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்."

    "தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? மாடுகள் விளை நிலங்களில் மேய்வதாக கூறுகின்றனர். மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் இந்த பிரச்சினை உருவாகிறது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாட்டு தொழுவத்திற்கு வரவேண்டும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும் பாலில் செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    ×