search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
    • தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். 30-ந்தேதி ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று மாலை ஸ்ரீரங்கம் பள்ளி தொகுதியில் ஐடி ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத் தேர்தலிலும் பரேலேகா களமிறங்கியுள்ளார்.
    • நாகர் கர்னூல் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா என்கிற பரேலேகா. பி.காம் பட்டதாரியான இவர் வேலையில்லா விரக்தியில் எருமை மாடு மேய்க்கும் தொழிலில் இறங்கினார்.

    ஒருநாள் தான் மாடு மேய்க்கும்போது, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார். அதில், "நான் பரேலக்கா. எவ்வளவுதான் படிச்சி, டிகிரி வாங்கினாலும் நமக்கு இந்த தெலுங்கானா வேலை தராது.

    அதனாலதான் பிகாம் படிச்சிட்டு, என் அம்மா தந்த காசில், 4 எருமை மாடு வாங்கிட்டு, இப்படி மேய்ச்சிட்டு இருக்கேன். இங்கு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது" என்று பேசியிருந்தார்.

    இந்த வீடியோ, வைரலானது. இளைஞர்களின் மத்தியில் புதுவித தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் பிரபலமானார்.

    தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல்களில் பல வீடியோக்களை வெளியிட்டார். இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் அவரை எருமை மாடு மேய்க்கும் பெண் என செல்லமாக அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோலாப்பூர் தொகுதியில் பரேலக்கா சுயேட்சையாக போட்டியிட்டார்.

    அவருக்கு, தெலுங்கானா பல்கலைக்கழக மாணவர்கள் பிரசாரம் செய்தனர்.

    இளவரசி பரேலக்கா என்று ஒரு பட்டப்பெயரை வைத்து, செல்லுமிடமெல்லாம் பாடல்களை பாடி, பொதுமக்களை கவர்ந்து வாக்குகளை கேட்டனர்.

    அந்த தேர்தலில் அவர் 5,754 வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலிலும் பரேலக்கா களமிறங்கியுள்ளார். அவர் நாகர் கர்னூல் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    இதனால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நான் வாக்குகள் பெற்றேன். பொதுமக்கள் எனக்கு நேர்மையாக வாக்களித்தார்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார்.

    • நமது எல்லைகளில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு அவசியம்.
    • அதற்கு நமது ராணுவத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றார் வெளியுறவு மந்திரி.

    ஐதராபாத்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது.

    கொரோனா காலகட்டத்திலும், உக்ரைன் போர், இஸ்ரேல் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களிலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது.

    உலகில் தற்போது எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் தவறாகப் போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்து சூழல்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

    நமது எல்லைகளில் நமக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. அதை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு அவசியம். ராணுவத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமானது.

    கடந்த 1992-ம் ஆண்டு இஸ்ரேலில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது. அதற்குமுன் அங்கு இந்திய தூதரகம் இல்லை. தொடர்ந்து 1992 முதல் 2017 வரை பிரதமர் மோடியை தவிர எந்தவொரு இந்திய பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றதில்லை.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய தவறை நாங்கள் திருத்தியிருக்கிறோம் என தெரிவித்தார்.

    • பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார்.

    தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து மத்திய மந்திரியாக இருந்தார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் அனகா பள்ளி பாராளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் மற்றும் பெண்டுர்த்தி சட்டமன்ற ஜனசேனா கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு ஆகியோர் நடிகர் சிரஞ்சீவியை விஜயவாடாவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

    நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு நான் அரசியல் பேசுகிறேன். இதற்கு காரணம் ஆந்திராவில் எனது சகோதரர் பவண் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.


    எனது நண்பர் ரமேஷ் மற்றும் எனது ஆசியுடன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ரமேஷ்பாபு ஆகியோர் அனகா பள்ளி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க கூட்டணிக்கு ஆந்திர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மாநிலம் முழுவதும் வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு நடிகர் சிரஞ்சீவி ஆதரவு அளித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாகேஷிடம் ஏன் குளத்திற்குள் இறங்கினாய் என விசாரித்தனர்.
    • என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்றார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கொம்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ். அப்பகுதியில் உள்ள ஜெயபேரி பூங்கா குளத்தில் திடீரென இறங்கினார்.

    குளத்தில் இறங்கிய நாகேஷ் எனது மனைவி என்னை அடித்து சித்ரவதை செய்கிறாள். அவளிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் என கத்தியபடி இருந்தார்.

    நீண்ட நேரம் குளத்தில் கத்தியபடி இருந்த வாலிபரை வெளியே வருமாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

    ஆனால் வாலிபர் குளத்தில் இருந்து வெளியே வர மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி நாகேஷை வெளியே இழுத்து வந்தனர்.

    நாகேஷிடம் ஏன் குளத்திற்குள் இறங்கினாய் என விசாரித்தனர். என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.

    குழந்தைகளிடம் பேசக்கூட அனுமதிப்பதில்லை. அப்பா இறந்து விட்டார் என குழந்தைகளிடம் தவறாக கூறுகிறாள். மேலும் அவரது மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை காட்டினார்.

    தினமும் என்னை அடிக்கிறார். என்னால் அடி வாங்க முடியவில்லை. விவாகரத்து வாங்கி கொடுங்கள் இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என வேதனையோடு தெரிவித்தார்.

    அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். நாகேஷ் கூறிய விசித்திரமான வீடியோவை பார்த்தவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை.
    • தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோண்டாபூரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஷேக் அக்மல் என்ற இளைஞர் (22 வயது) வசித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக ஜிம்முக்கு சென்று வந்துள்ளார். நேற்று அதிகாலை வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று விட்டு மீண்டும் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

    அப்போது குடியிருப்பு கேட்-ன் அருகே இருந்த தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை அவர் கவனிக்கவில்லை. இதனால், எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார் ஷேக் அக்மல். இதனை குடியிருப்பில் இருந்த நபர் பார்த்தும், பார்க்காதது போல் இருந்தது மட்டுமல்லாமல் ஷேக் அக்மலை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. மனிதத் தவறால் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம் என்ற போதும், தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த நபரை காப்பாற்றாமல் தண்ணீர் தொட்டியை மூடிச்சென்ற அந்த நபரின் செயல் மனிதநேயம் குறித்து பல்வேறு கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது.

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஷேக் அக்மல் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இளைஞரை காப்பாற்றாமல், தண்ணீர் தொட்டியை மூடிவிட்டு மனிதநேயத்தை குண்டுகுழியில் புதைத்த நபரை வசைபாடி வருகின்றனர்.

    • பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன.
    • வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தென் மாநிலங்களின் நல்வாழ்வு வளர்ச்சிக்கு எதிராக உள்ளன. மோடியின் உத்தரவாதங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் பி. ஆர்.எஸ் வாக்குகளால் பா.ஜ.க. ஆதாயம் அடையலாம். ஆனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் 14 இடங்களையாவது கைப்பற்றும்.

    பா.ஜ.க. தென் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படி இல்லை.

    தென் மாநிலம் உட்பட அனைவரையும் உள்ளடக்கி உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள 130 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க.வை அதிகபட்சமாக 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெற விடமாட்டோம். அதற்குள் அவர்களை கட்டுப்படுத்துவோம்.

    வட மாநிலங்களில் 2019 தேர்தலில் பெற்ற வெற்றிகளை விட பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறையும். ஒவ்வொரு மருந்துக்கும் காலாவதி தேதி உண்டு. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி அடைவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.
    • ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் (வயது 32) என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனை அறிந்த ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் வயிற்று வலி குறையவில்லை.

    இதையடுத்து முகமது ஷேக்கை ஐதராபாத்தில் உள்ள காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் முகமது ஷேக் வயிற்றை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.

    இதில் முகமது ஷேக்கின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இரப்பை குடல் துறை தலைவர் டாக்டர் ஷ்ரவன் குமார் தலைமையிலான டாக்டர்கள் முகமது ஷேக் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் 45 நிமிடங்களில் 5 அங்குலம் நீளமுள்ள 9 ஆணிகளை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து கைதியிடம் விசாரித்த போது அவர் தற்கொலை செய்துவதற்காக ஆணிகளை விழுங்கியதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை இந்தியா கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
    • உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன ஒழிப்பு கருத்து தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

    அப்போது சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியது. இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தெலுங்கானா காங்கிரஸ் முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

    ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு கருத்து குறித்த கேள்விக்கு கடும் கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

    உதயநிதியின் கருத்து தவறானது. இதனை நான் கண்டிக்கிறேன். அது அவரது எண்ணம். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கூறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்குள் கூட, தனிநபர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், உதயநிதியின் நிலைப்பாடு அவருடையது.

    தெலுங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்-மந்திரி என்ற முறையில், சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த தவறான கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே நமது கொள்கை. மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீங்கு விளைவிக்காமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலை நிறுத்துவது முக்கியம்.

    பாஜகவின் "400 தொகுதிகளில் வெற்றி முழக்கம் என்பது தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

    தற்போது இது சாத்தியமில்லை. மக்களவையில் 400 இடங்கள் என்ற இலக்கை அடைய பா.ஜ.க. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாக்கு கேட்க வேண்டும்.

    குஜராத்தில் 26 இடங்களையும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும், டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றாலும் கூட. பீகாரில் 39 முதல் 40 இடங்களும், உத்தரபிரதேசத்தில் 62 இடங்களும், வங்காளத்தில் 18 இடங்களும், வட மாநிலங்களில் கணிசமான பெரும்பான்மையும் பெற்றால், 300 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். பா.ஜ.க.வால் இலக்கை அடைய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் விரைவில் பா.ஜ.கவுக்கு சென்று விடுவார் என தெலுங்கானா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஏரிகளில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.
    • குடிநீர் பிரச்னையை பிஆர்எஸ் கட்சி பெரிதாக பேசுகிறது.


    தெலுங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வரானார். லோக்சபா தேர்தலிலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.

    தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 லோக்சபா தொகுதிகளில் 14ல் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறது.

    இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறை தெலுங்கானாவில் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக வற்றி வருவது காங்கிரஸ் ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    தலைநகர் ஐதராபாத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் உஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர் ஆகிய இரண்டு ஏரிகளிலும் அதன் கொள்ளளவில் 60 சதவீதம் தண்ணீரே உள்ளது.

    அதேபோல், மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நாகார் ஷூன சாகர், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் ஆகியவற்றிலும் அதன் கொள்ளளவில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.

    தெலுங்கானாவில் இப்போதே ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கியுள்ள குடிநீர் பிரச்னையை பிஆர்எஸ் கட்சி பெரிதாக பேசுகிறது.

    இந்த ஆண்டு தெலுங்கானாவில் மழைப்பொழிவு குறையவில்லை. ஆனாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்றால் அது மாநில அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்ற பிஆர்எஸ் கட்சியின் குற்றச்சாட்டி வருகிறது.

    இது மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

    பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.




    இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

    'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

    • ஹைதராபாத் தொகுதியில், 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி தோற்கடித்தார்
    • இந்த முறை ஒவைசிக்கு போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்பத்தின் கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இந்த முறை அவருக்குப் போட்டியாக அந்த தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாதவி லதா, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

    மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன.

    இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர். கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர்

    இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் குடியுரிமை திருத்த சட்டம் தேவை என்று இஸ்லாமியர்களை மத ரீதியாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், தெலங்கானாவில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் மாதவி லதா செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா தனது செயலால் யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

    ×