என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது.
    • தவெக தலைவர் விஜய் மதுரை மாநாட்டு மேடைக்கு வந்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

    மாநாடு தொடங்கிய நிலையில், விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிப்பரப்பட்டது. இதனைத்தொடர்ந்து "உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நா" என்று தொடங்கும் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.

    இதனிடையே, மதுரை மாநாட்டில், த.வெ.க. கொடியுடன் பனை மரத்தில் ஏறிய தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.
    • நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.

    மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடக்க உரையாற்றினார்.

    அப்போது அவர் விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.

    மேலும் அவர்," சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்தினோம். அப்போது நம் எண்ணங்களை, ஆசைகளை தலைவருடன் பகிர்ந்துக் கொண்டோம்.

    நம் தலைவர் ஒரு கட்சியை அல்ல. புரட்சியை தொடங்கினார் என்று கோடிக்கணக்கான மக்கள் படை இவருடன் நிற்கிறது. இதற்கு பேர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது.

    அதேபோல், இன்று நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.

    இத்தனை லட்சம் மக்களை பார்க்கும்போது ஒரே வார்த்தைதான் தோன்றுகிறது. வெற்றி.. வெற்றி.. வெற்றி.

    எந்தவொரு தலைவருக்கும் வராத அளவில் தலைவர் விஜய்க்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் வரத் தொடங்கியது" என்றார்.

    • புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

    • தவெக தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார்.
    • த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

    அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், த.வெ.க. மதுரை மாநாட்டிற்காக சென்னையில் இருந்து சென்ற பிரபாகரன் என்பவருக்கு, சக்கிமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    மயங்கி விழுந்த பிரபாகரன் மேல் சிகிச்சைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    • மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

    தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.

    தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், மாநாடு இசை நிகழ்ச்சியுடன் சுமார் 3.30 மணியளவில் தொடங்கியது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார். தொடர்ந்து, மதுரை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையில் தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.

    அப்போது, தொண்டர்கள் தூக்கி வீசிய கட்சி துண்டுகளை அணிந்தவாறும், தலையில் கட்டியபடியும் விஜய் சென்றார். அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

    • மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர்.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

    இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

    இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

    தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.

    தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியது.
    • த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

    அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

    மதுரை மாநாட்டில் விஜயும் அஜித்தும் ஒன்றாக இருப்பது போன்று தொண்டர்கள் பிடித்திருந்த கட்-அவுட் புகைப்படம் இணையத்தில் வைரலானாது.

    • தவெக மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர்.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

    இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

    தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்யவுள்ளார்.

    இந்த நிலையில், த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியுள்ளது.

    • மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அரியணை ஏற அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. கட்சி இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டு உள்ளது.

    குறிப்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி 200 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வியூகம் வகுத்து வருகிறார்.

    இதற்காக அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே கட்சியை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்ஒரு பகுதியாகவும், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பா.ஜ.க. கட்சியின் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழ்நாடு முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது.

    இதன் முதல் மாநாடு நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 8,595 பூத் கமிட்டிகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன் முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கி ருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்கிறார்.

    மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசு தமிழக மக்களுக்கு அளித்த எண்ணற்ற மக்கள நலத்திட்டங்களையும், பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி செய்ததை ஒவ்வொருவரும் தங்களுடைய பூத்தில் உள்ள பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்து விரிவாக பேச உள்ளார்.

    மேலும், ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீத வாக்குகளை பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியும், வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. தொண்டர்கள் எதிர்கொள்வதற்கான தெளிவான பாதையை காட்டி பேசுவார் என நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதோடு, சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

    உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமித்ஷாவை வரவேற்று நெல்லை மாநகரில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • த.வெ.க.வின் 2வது மாநாட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
    • ஆவியூர் மதுபான கடையில் தவெக தொண்டர்கள் அலைமோதி வருகின்றனர்.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

    த.வெ.க.வின் 2வது மாநாட்டில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    மதுரையில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், த.வெ.க.வின் தொண்டர்கள் வருகை தருகின்றனர்.

    இதற்கிடையே, தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியை அடுத்த ஆவியூர் மதுபான கடையில் தவெக தொண்டர்கள் அலைமோதி வருகின்றனர்.

    இதேபோல், மாநாடு திடலுக்கு அருகில் தவெக தொண்டர்கள் சிலர் கையில் மது பாட்டிலுடன் குடித்துக் கொண்டிருந்தனர். இது, டிரோன் கேமராவில் பதிவாவதை கண்ட தொண்டர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

    • மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது.
    • ஹைட்ரஜன் ரெயில் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் முதன் முதலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. பொதுமக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள். ஒருவழித் தடத்தில் மட்டும் இயக்கப்படுவதால் மற்ற வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையொட்டி மற்றொரு மின்சார ரெயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 10 பெட்டிகளுடன் தயாராகும் ஏ.சி. ரெயில் விரைவில் மற்றொரு வழித்தடத்தில் இயக்குவதற்கு சென்னை ரெயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது.

    இதே போல ஹைட்ரஜன் ரெயிலும் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் சூழலில் சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. முதன் முதலாக ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் ரெயில் இதுவாகும். இந்த ரெயில் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏ.சி. மின்சார ரெயில் பணி விரைவில் முடிந்து விடும். இன்னும் 2 மாதத்தில் சென்னை கோட்டத்தில் ஒப்படைப்போம். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

    • நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது.

    சென்னை:

    அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நகர்ப்புறத்தில் 1428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2135 முகாம்களும் நடத்தப்படுகின்றன.

    வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சாதிசான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் பயன்பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள், ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் போன்ற பல கோரிக்கைகளுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுத்து வருகின்றனர்.

    திட்டம் தொடங்கப்பட்டு 30 நாட்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்து விட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை 3,600 முகாம்கள் நடந்து உள்ளன.

    இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

    இந்த மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில் மனுக்கள் மீதான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் விண்ணப்பித்த பலருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    ×