என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெற்றி.. வெற்றி.. வெற்றி..! த.வெ.க. மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் உரை
    X

    வெற்றி.. வெற்றி.. வெற்றி..! த.வெ.க. மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் உரை

    • விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.
    • நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.

    மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடக்க உரையாற்றினார்.

    அப்போது அவர் விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.

    மேலும் அவர்," சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்தினோம். அப்போது நம் எண்ணங்களை, ஆசைகளை தலைவருடன் பகிர்ந்துக் கொண்டோம்.

    நம் தலைவர் ஒரு கட்சியை அல்ல. புரட்சியை தொடங்கினார் என்று கோடிக்கணக்கான மக்கள் படை இவருடன் நிற்கிறது. இதற்கு பேர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது.

    அதேபோல், இன்று நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.

    இத்தனை லட்சம் மக்களை பார்க்கும்போது ஒரே வார்த்தைதான் தோன்றுகிறது. வெற்றி.. வெற்றி.. வெற்றி.

    எந்தவொரு தலைவருக்கும் வராத அளவில் தலைவர் விஜய்க்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் வரத் தொடங்கியது" என்றார்.

    Next Story
    ×