என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநாட்டு திடல் மேடையில் த.வெ.க. தலைவர் விஜய் "ரேம்ப் வாக்"- தொண்டர்கள் ஆரவாரம்
- மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.
தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.
தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், மாநாடு இசை நிகழ்ச்சியுடன் சுமார் 3.30 மணியளவில் தொடங்கியது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார். தொடர்ந்து, மதுரை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையில் தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.
அப்போது, தொண்டர்கள் தூக்கி வீசிய கட்சி துண்டுகளை அணிந்தவாறும், தலையில் கட்டியபடியும் விஜய் சென்றார். அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.






