என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • பார்மர் மாவட்டத்தில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சனை பல ஆண்டாக நீடித்து வருகிறது.
    • ஜோஜாரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஜோத்பூர், பாலி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஜோஜாரி ஆற்றில் கலக்கின்றன.

    அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, தொழிற்சாலை கழிவுகள் மாசடைந்த நீராக கரையோர பகுதிகளில் தேங்குகின்றன. வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்து விடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    இந்நிலையில், பார்மர் பகுதிக்குச் சென்ற ராஜஸ்தான் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை மந்திரி கே.கே.விஷ்ணோயிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.

    அப்போது அவர் கூறுகையில், பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் மிகவும் தாராள மனதுடன் இருக்கிறார். நமது முதல் மந்திரி, பகவான் கிருஷ்ணரை வேண்டும் போதெல்லாம் இங்கு மழை கொட்டித் தீர்க்கிறது. பிறகு, இந்திரனிடம் சொல்லி, மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர மழையை தணிக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.

    கே.கே.விஷ்ணோயின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக, பார்மர் மாவட்டம் பேடூ தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் சவுத்ரி கூறுகையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனையின் பொறுப்பை கடவுள்மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. மந்திரி, பிரச்சனையை திசைதிருப்புவது மட்டுமின்றி, பிரச்சனையை அரசாங்கத்தால் சரிசெய்ய முடியாது, பிரார்த்தனையால்தான் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் கூறுகிறார். இது அபத்தமானது என்றார்.

    • மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
    • முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.

    வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் ராஜஸ்தான் முதல்வர் அலுவலகம் பீதியில் ஆழ்ந்தது.

    முதல்வர் அலுவலகத்துடன் சேர்த்து ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த மின்னஞ்சல்களில், முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு தடுப்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உடனடியாக முதல்வர் அலுவலகம் மற்றும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை நடத்தினர்.

    இருப்பினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இரு இடங்களிலும் கிடைக்காததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.  

    • பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தனர்.
    • "ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம்.

    ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிம்ப்லோடில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏழு அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். 11க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சம்பவத்திற்கு முன்பு மாணவர்கள் கூரையிலிருந்து கற்கள் விழுவதாக என்று ஆசிரியர்களை எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து விபத்தில் இருந்து தப்பிய எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கண்ணீருடன் கூறுகையில், "மேலே இருந்து கற்கள் விழுவதாக ஆசிரியர்களிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களைத் திட்டி வகுப்பறையில் உட்காரச் சொன்னார்கள். அப்போது,  கூரை இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது" என்று கூறினார்.

    இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஆசிரியர்களின் கடுமையான அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

    பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மேற்பரப்பு சிமென்ட் மற்றும் பிளாஸ்டரிங் மூலம் தாற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, ஜலவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோட், அலட்சியத்திற்காக ஐந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்தார்.

    "ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம். இந்த சம்பவத்தில் தெளிவான அலட்சியம் உள்ளது. நாங்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம், அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ரத்தோட் கூறினார்.   

    • கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.
    • கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்துள்ளன.

    ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சவாரியா சேத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் மூலவரான கிருஷ்ணருக்கு பக்தர் ஒருவர் வெள்ளி துப்பாக்கி மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூண்டு காணிக்கை அளித்தார்.

    இந்த இரண்டும் சேர்ந்து சுமார் அரை கிலோ எடை கொண்டவை. கடவுளுக்கு ஆயுதம் காணிக்கையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று கோவில் தலைவர் ஜானகி தாஸ் கூறினார்.

    கடந்த ஆண்டு ராஜஸ்தானில் பூண்டின் விலை கடுமையாக அதிகரித்தது.

    பூண்டு பயிரில் இருந்து சில விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டினர். அதனால் வெள்ளி துப்பாக்கி, பூண்டு ஆகியவற்றை இறைவனுக்கு வழங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வெவ்வேறு பரிசுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல.

    கடந்த காலங்களில் வெள்ளி பெட்ரோல் பம்ப், விமானம், டிராக்டர், மடிக்கணினி மற்றும் ஐபோன் போன்ற பரிசுகள் வந்துள்ளன. இங்குள்ள கிருஷ்ணர் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என தெரிவித்தனர்.

    • பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
    • பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளி இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது. பள்ளி திறந்து சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.

    இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

    சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    ராஜஸ்தானில் அரசு பள்ளி இடிந்து விழுந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,

    ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பள்ளி இன்று காலை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    பாழடைந்த நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

    கட்டிட விபத்து குறித்து தகவல் அறிந்து ஜலாவர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி அமித் குமார் புடானியா சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    பள்ளியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    • ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஷம்புலால் தகாத். இவர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் செல்போன்களில் இருந்த அந்தரங்க வீடியோக்களை, தனது செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர் அதை வைத்து மாணவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். இந்த விகாரம் பற்றி அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ஷம்புலால் தகாத், மாணவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷம்புலால் தகாத்தை கைது செய்தனர்.

    தவறு செய்யும் மாணவர்களை திருத்த வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்தால் எப்படி? என்று சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    • கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.
    • அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    ராஜஸ்தானின் பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று காலை ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.

    அதிகாலை 3 மணியளவில், நிலையத்தில் இருந்து கிளம்பியபோது கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.

    லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.
    • இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு.

    ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் டான்டா நகரை சேர்ந்த சிறுமி பிராச்சி குமாவத் (வயது 9) இவர் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார் .

    கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பள்ளியில் சக மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட சென்றார். சாப்பாடு பாத்திரத்தை திறந்த போது மாணவிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அவள் வகுப்பிலேயே சரிந்து விழுந்தார்.

    பதறிப்போன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    குடும்பத்தினர் அவளை சிகாரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

    மாணவி பள்ளிக்கு வந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். காலை பிரார்த்தனை மற்றும் கூட்டத்திலும் பங்கேற்றார். மதிய உணவு நேரத்தில் அவள் மயக்கமடைந்துள்ளார்.

    மாணவி மாரடைப்பு காரணமாக இருந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பள்ளியில் பதிவு செய்யப்பட்ட கடைசி வீடியோவில், மாணவி சிரித்துக் கொண்டே தன்னையும் தனது வகுப்புச் சான்றிதழ்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்து செல்வது காணப்பட்டது.

    பிராச்சிக்கு எந்த தீவிர அறிகுறிகளும் இல்லை என்றும், அவரது திடீர் மரணம் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இது குழந்தைகளுக்கு ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், பிறவி இதய நோய் அல்லது மின் தூண்டுதலில் தொந்தரவு இருக்கலாம், பெற்றோர்கள் அவற்றைக் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் அது விசாரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் வர்மா என்பவர் கூறினார்.

    இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில், கடந்தவாரம் பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

    கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • ரூ.15 கோடி மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் தயாரித்துள்ளனர்.
    • கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    ராஜஸ்தானில் போதைப்பொருள் தயாரித்ததற்காக இரண்டு தனியார் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கு அமெரிக்க தொலைக்காட்சி தொடரான Breaking Bad பாணியில் அமைந்துள்ளது.

    அவர்கள் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 5 கிலோ மெஃபெட்ரோன் தயாரித்துள்ளனர். இதில் 4.22 கிலோவை மருந்துகள் விற்பனை செய்துள்ளனர். இதன் பயன்பாடு கடுமையான மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    கங்காநகரில் உள்ள டிரீம் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் போதைப்பொருள் தயாரித்து வந்தனர்.

    விசாரணையில், இருவரும் சுமார் இரண்டரை மாதங்களாக இங்கு போதைப்பொருள் தயாரித்து வந்தது தெரியவந்தது.

    டெல்லியில் இருந்து போதைப்பொருள் தயாரிக்க ரசாயனங்கள் மற்றும் பிற உபகரணங்களை அவர்கள் கொண்டு வந்தனர். வேலைக்கு விடுமுறையில் இருந்தபோது அவர்கள் போதைப்பொருள் தயாரித்து வந்தனர்.

    ஜூலை 8 ஆம் தேதி காலை போதைபொருள் தடுப்புப் பிரிவினர் (NCB) நடத்திய சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.  

    • இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் கீழே விழுந்தது. வழக்கமான பயிற்சியின்போது இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

    தகவலறிந்து போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விமான விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×