என் மலர்
நீங்கள் தேடியது "Rajasthan Women"
- தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
- நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ரேகா கல்பெலியா (வயது55). இவரது கணவர் காவ்ரா கல்பெலியா. இவருக்கு நிரந்த வேலை இல்லாததால் குப்பை பொறுக்கி பிழைப்பை நடத்தி வருகிறார்.
தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். 5 குழந்தைகள் பிரசவித்த சில நாட்களிலேயே இறந்து போயுள்ளது. மீதி குழந்தைகள் இவர்களுடன் வசதித்து வருகின்றனர். இதில் 5 பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பிணியானார். நேற்று பிரசவ வலியில் துடித்த அவர் ஜாடோல் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 17-வது குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
ஆஸ்பத்திரியில் ரேகா கல்பெலியா பிரசவத்திற்கு அனுமதித்த போது இவருக்கு 4-வது பிரசவம் என்று அவர்கள் டாக்டரிடம் கூறியுள்ளனர். ஏற்கனவே வறுமையில் தவிக்கும் காவ்ரா கல்பெலியா தம்பதியினர் 16 குழந்தைகளை வளர்த்தெடுக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.
குழந்தைகளின் பசியை தீர்க்க காவ்ரா கல்பெலியா 20 சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்க அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
அவரது மகள் ஷிலா கல்பெலியா கூறும் போது, எங்கள் குடும்பம் வாழ்வதற்கு பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் அனைவரும் நிறைய சிரமங்களை எதிர் கொண்டு வருகிறோம். எங்கள் தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர் என்றார்.
குப்பை சேகரிப்பதன் மூலம் உயிர்வாழும் எங்கள் குடும்பத்தினரால் குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியவில்லை. "பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஒரு வீடு எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு பசி தீர்க்க உணவும், கல்வி வழங்கவும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கும் போதுமான பண வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை சந்தித்து வருவதாக 17 குழந்தைகளின் தந்தை காவ்ரா கல்பெலியா கூறியுள்ளார்.
- கடந்த மாதம் மனதளவில் பாதிக்கப்பட்ட பாத்திமா குழந்தைகளை பார்க்க விரும்பினார்.
- ராஜஸ்தானில் பிவாதியில் உள்ள அவரது குழந்தைகளிடம் போலீசார் விசாரித்த போது, அஞ்சுவை சந்திக்க மாட்டோம் என குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
உத்தரபிரசேதத்தில் உள்ள கெய்லர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானின் பிவாதி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அஞ்சுவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பேஸ்புக் மூலமாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஜூலை மாதம் அஞ்சு தனது கணவரிடம், ஜெய்ப்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் அதன்பின் கணவரை தொடர்பு கொண்ட அவர் நான் பாகிஸ்தானின் லாகூருக்கு செல்கிறேன் என கூறியதை கேட்டு அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அஞ்சு வாகா-அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றதும், அவர் 4 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் பழகிய நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இஸ்லாமிய மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என மாற்றம் செய்து கொண்டு நஸ்ருல்லாவுடன் பாகிஸ்தானில் கைபர் பக்துன்கூவா மகாணத்தில் ஒன்றாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் மனதளவில் பாதிக்கப்பட்ட பாத்திமா குழந்தைகளை பார்க்க விரும்பினார். இதற்காக பாகிஸ்தான் அரசிடமும் விண்ணப்பம் செய்தார்.
அதைத்தொடர்ந்து அவருக்கு இந்தியா செல்ல அனுமதி கிடைத்த நிலையில் நேற்று அவர் இந்தியா திரும்பினார். டெல்லி வந்தடைந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அரவிந்த்தை விவாகரத்து செய்த பிறகு எனது குழந்தைகளை பாகிஸ்தானுக்கு அழைத்து செல்வேன். வேறு எதுவும் கூறவிரும்பவில்லை என கூறிவிட்டு சென்றார்.
இதற்கிடையே நாடு திரும்பிய அஞ்சு தனது குழந்தைகளை பார்ப்பதற்காக இதுவரை ராஜஸ்தானும் செல்லவில்லை. எனவே அவர் எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை.
இது தொடர்பாக ராஜஸ்தானில் பிவாதியில் உள்ள அவரது குழந்தைகளிடம் போலீசார் விசாரித்த போது, அஞ்சுவை சந்திக்க மாட்டோம் என குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அரவிந்த் கூறுகையில், எனக்கும் அஞ்சுவுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. விவாகரத்து நடக்க 3 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றார்.






