என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்த ஒருவர் ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி பையன் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

    மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.

    • சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

    "சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயரோ அரசரோ இல்லை. நமக்கு அவர் தெய்வம். இன்று, நான் அவரது காலடியில் தலை வணங்குகிறேன், என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் மதிப்புகள் வேறுபட்டவை. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை."

    "சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் அவரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை. நான் இங்கு இறங்கியதும், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன், இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."

    "கடந்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும், முழு நாடும் பெறுவதை உறுதிசெய்வதற்காகவே வத்வான் துறைமுகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது," என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • தேசிய கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
    • இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக திகழும்.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். காலை மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடந்த உலகளாவிய பின்டெக் 2024 விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    பின்னர் மதியம் பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

    இதில் ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பில் பால்கர் மாவட்டத்தில் தஹானு நகருக்கு அருகே உள்ள வாத்வான் துறைமுக திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். சுமார் ரூ.1,560 கோடி மதிப்புள்ள, 218 மீன்வளத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் ரூ.360 கோடி செலவில் தேசிய கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நீர்வாழ் பூங்காக்களை மேம்படுத்துதல், மறுசுழற்சி நீர்வாழ் உயிரி வளர்ப்பு முறை போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை தொடங்கி வைக்க உள்ளார்.

    மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள், மீன் சந்தைகள் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

    ரூ.76 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ள வாத்வான் துறைமுகத்தில் பெரிய கப்பல் வந்து நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உலகத் தரம் வாய்ந்த கடல்சார் நுழைவாயிலை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாக திகழும். மேலும், சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு நேரடி இணைப்பை வழங்குவதோடு, போக்குவரத்து நேரங்களையும், செலவுகளையும் குறைக்கும்.

    அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட இந்த துறைமுகம், ஆழமான நிறுத்துமிடங்கள், திறமையான சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் நவீன துறைமுக மேலாண்மை அமைப்புகள் துறைமுகத்தில் இருக்கும்.

    இந்த துறைமுகம் இந்தியாவின் கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, உலகளாவிய வர்த்தக மையமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

    • ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள்.
    • விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் உயிர் நாடியாகக் கருதப்படும் புறநகர் ரெயில் சேவையானது, நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆபத்தானதாக முடிகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ரெயிலை பிடித்து வேலைக்கு செல்ல அவசர அவசரமாக புறப்படுவதால் ரெயில்களில் இருந்து விழுந்து அல்லது தண்டவாளத்தில் ஏற்படும் பிற விபத்துகளால் பயணிகள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது.

    பயணிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்பிரச்சனையை மிக தீவிரமான பிரச்சனையாக கருதி கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி, யத்தின் யாதவ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், கடந்த 2023-ல் 2,590 பயணிகள் ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தனர்; ஒவ்வொரு நாளும் ஏழு பேர் பலியாகின்றனர். இதே காலகட்டத்தில் 2,441 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 1,650 பேரும், மேற்கு ரெயில்வே பிரிவில் 940 பேரும் உயிரிழந்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கானது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி அமித் போர்கர்ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'மும்பையின் நிலைமையை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.

    இவ்விஷயத்தில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேயின் உயர் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், எதையும் செய்ய முடியாது என்று கூறக்கூடாது.

    ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள். இவ்வாறு பயணிகள் பயணிக்க நிர்பந்திக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடானது. எனவே மேற்கு மற்றும் மத்திய ரெயில்வேயின் பொது மேலாளர்கள், இவ்விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள் எட்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    இதையடுத்து இவ்வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மும்பையின் புறநகர் ரெயில்களில் கடந்த ௨௦ ஆண்டுகளில் 51,000-க்கும் மேற்பட்டோரும், தினசரி 7 பேரும் உயிரிழப்பதாக மேற்கு ரெயில்வே மற்றும் மத்திய ரெயில்வே ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் தரவுகளை சமர்ப்பித்துள்ளன.

    மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது மற்றும் ரெயில் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவை அதிக இறப்பு எண்ணிக்கைக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளன. மற்ற காரணங்களாக மழைக்காலங்களில் நீர் தேங்குவது, தண்டவாளங்களில் குப்பை தீப்பிடிப்பது, பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் ஃபுட்போர்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் ஆகியவை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஐதராபாத் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
    • பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 (Hurun India Rich Listers 2024) அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 'ஆசியாவின் பில்லியனர் தலைநகரம்' ஆக மாறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் அதிகரித்து, பட்டியலில் அதன் மொத்த எண்ணிக்கை 386 ஆக உள்ளது.

    முதல் நகரங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இது 18 புதிய கோடீஸ்வரர்களை சேர்த்துள்ளது. அதன் பணக்கார பட்டியல் எண்ணிக்கை 217 ஆகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையில் ஐதராபாத் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    17 புதிய கோடீஸ்வரர்களின் வளர்ச்சியால் ஐதராபாத்தில் மொத்த எண்ணிக்கையை 104 ஆகக் கொண்டுள்ளது. பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (82), கொல்கத்தா (69), அகமதாபாத் (67), புனே (53), சூரத் (28), குருகிராம் (23) ஆகியவை அடங்கும்.

    • முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகி உள்ளார்.
    • ஏஜி நூரானி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், வரலாற்றாளர், மற்றும் நூலாசிரியருமான ஏஜி நூரானி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 93 ஆகும்.

    சட்டத்துறை ஆய்வாளரான ஏஜி நூரானி- தி காஷ்மிர் குவெஸ்டியன், பத்ருதின் தியாப்ஜி, மினிஸ்டர்ஸ் மிஸ்கன்டக்ட், பிரெஸ்நீவ்ஸ் பிளான் ஃபார் ஏசியன் செக்யூரிட்டி, தி பிரெசிடென்ஷியல் சிஸ்டம், தி டிரையல் ஆஃப் பகத் சிங் மற்றும் கான்ஸ்டிடியூஷனல் குவெஸ்டியன்ஸ் இன் இந்தியா என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    மேலும், பல்வேறு தனியார் நாளேடுகளில் கட்டுரை எழுதி வந்துள்ளார். 1930 ஆம் ஆண்டு பாம்பாயில் பிறந்த ஏஜி நூரானி 1960 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்தார். தான் பிறந்த ஊரிலேயே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஏஜி நூரானி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகியுள்ளார்.

    ஏஜி நூரானி உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • பெண் பிளாட்பாரத்தில் ஏற முயன்றபோது, போலீஸ்காரர் வேகமாக அவரை நோக்கி ஓடிவருகிறார்.
    • போலீஸ்காரர் வேகமாக ஓடிவந்து அந்த பெண்ணை பிளாட்பாரத்திற்கு இழுத்து காப்பாற்றினார்.

    மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் (RPF) ரெயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணை காப்பாற்றினார். அந்த பெண்ணை அவர் காப்பாற்றிய வீடியோ பிளாட்பார்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    ஜல்கான் ரெயில் நிலையத்தில் ரெயில் நடைமேடை வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பாரத்தில் ஏற இருப்பதை போலீஸ்காரர் சாங்கோ பாட்டீல் பார்க்கிறார்.

    அந்த பெண் பிளாட்பாரத்தில் ஏற முயன்றபோது, போலீஸ்காரர் வேகமாக அவரை நோக்கி ஓடிவருகிறார். அதற்குள் ரெயில் வேகமாக வந்துவிட்டது. அந்த பெண் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கு இடையில் சிக்கிக் கொண்டார். ரெயில் அந்த பெண்ணை சில மீட்டர்கள் இழுத்துச் சென்றது.

    உடனே துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் வேகமாக ஓடிவந்து அந்த பெண்ணை பிளாட்பாரத்திற்கு இழுத்து காப்பாற்றினார். பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
    • விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதிகாரி கூறினார்.

    ரூ.15 ஆயிரம் பணத்தை திருடியதாக தனது வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது புகார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நகைக்கடைக்காரர் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி நகைக்கடைக்காரர் அப்பெண்ணிடம் முதலில் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    ஜூன் மாதத்திற்கு பிறகு நகைக்கடைக்காரரர் அப்பெண்ணிடம் விரும்புவதாகவும் கூறி அவரை பலமுறை கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். நாளுக்குநாள் நகைக்கடைக்காரரின் தொல்லை அதிகரிக்கவே, இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவிக்க பணிப்பெண் முடிவு செய்துள்ளார். இருப்பினும் நகைக்கடைக்காரர் இதுகுறித்து வெளியே கூறினால் கணவரையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    கடந்த ஜூலை 18-ந்தேதி, நகைக்கடைக்காரர் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அப்பெண் வாங்க மறுத்துவிட்டாள்.

    இதைதொடர்ந்து, நகைக்கடைக்காரர் அப்பெண் மீது பணத்தை திருடியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரித்தபோது, முதலில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்ட அப்பெண், பிறகு மனமுடைந்து அழுது நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    நகைக்கடைக்காரர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளான கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

    மேலும் "குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது, மேலும் இந்த விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அதிகாரி கூறினார்.

    • காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.
    • பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    மும்பை:

    பள்ளி மாணவி சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறுமிகள், அவர்களது பெற்றோருக்கு போலீசார் சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பள்ளி செல்லும் ஒரு மாணவியை சில சிறுமிகள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சிறுமிகள் கும்பலாக சேர்ந்து இரக்கமின்றி பள்ளி மாணவியை முடியை பிடித்து இழுத்து அடித்து, கீழே தள்ளி உதைக்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.

    சிறுமிகள், பள்ளி மாணவியை தாக்கிய சம்பவம் 2 வாரத்துக்கு முன் வெர்சோவா யாரி ரோடு பகுதியில் நடந்தது என்பது தெரியவந்தது.

    சமூகவலைதளத்தில் பரவிய வீடியோ தொடர்பாக வெர்சோவா போலீசார் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட சிறுமிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி யாரி ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், சிறிய பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவி, சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், போலீஸ் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கினர்.

    பள்ளி மாணவியை சிறுமிகள் சேர்ந்து தாக்கிய சம்பவத்தை அடுத்து வெர்சோவா பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    • பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது.
    • ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை.

    மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

    கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜி சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

    சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளது

    அந்த பதிவில், "பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை" என்று பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், சிவாஜி சிலையை மோடி திறந்து வைத்தது மற்றும் சிலை உடைந்து விழுந்தது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.

    • சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்தது.
    • தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது.

    மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில், 35 உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது.

    கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

     


    சத்ரபதி சிவாஜி சிலை சேதமுற்று கீழே விழுந்த நிலையில், கள சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேதம் பற்றிய ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



    கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.


    • ஓய்வு பெறும்போது முந்தைய 12 மாத அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் பென்சன்.
    • மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதமாக இருக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS- Unified Pension Scheme) முடிவு செய்தது. மத்திய அரசு வேலையில் 2004 ஜனவரி 1-ந்தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு இந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.

    இந்த திட்டத்தின்மூலம் ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன் கடந்த 12 மாதங்களில் பெறும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு 25 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

    2025 ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக அதிகரிக்கும். இதற்காக கூடுதலாக வருடத்திற்கு 6,250 கோடி ரூபாய் செலவாகும். இந்த தகவலை அஷ்வினி வைஷ்ணவ் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.

    மத்திய அரசின் பங்களிப்பு அதிகரித்த போதிலும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

    பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகள் பழைய ஓய்வூதியம் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த நிலையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலமாக அமல்படுத்துகிறது. நேற்று நடைபெற்ற ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநில ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றம் அடைவார்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில அரசு அமல்படுத்துகிறது.

    ×