என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gangster"
- ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
- இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
- கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- 22 கொலைகளில் தொடர்புடைய கேங்ஸ்டர் ஒருவருக்கு 945 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
எல் சால்வடோர் நாட்டில் கொலை உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கேங்ஸ்டர் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
அவ்வகையில், மாரா சல்வத்ருச்சா என்ற கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த வில்மர் செகோவியா என்ற குற்றவாளிக்கு 1310 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மீது 33 கொலைகள், 9 கொலை சதிகள் மற்றும் ஆபத்தான குற்றச் செயல்கள் உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த நீண்டகால தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
22 கொலைகள் மற்றும் பல கொலை முயற்சிகள், தாக்குதல்கள், தீவைத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய கேங்ஸ்டர் மிகுவல் ஏஞ்சல் போர்ட்டிலோவுக்கு 945 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் நின்று கொண்டு ரோட்டில் நடந்து செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.
சேலம் மாநகரில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ரவுடிகளை ஒடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம், பொதுமக்கள் பல்வேறு புகார்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ரவுடிகளை பிடிக்க கோரி துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர்கள் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரவுடிகளை பிடிக்க சேலத்தில் அதிரடி வேட்டையில் இறங்கினர்.
அதன்படி அன்னதானப்பட்டி போலீசார் நடத்திய வேட்டையில் வள்ளுவர் நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜவகர் (வயது42), மணியனூர் காந்திநகரை சேர்ந்த ஜெரால்டு (27), அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் (44), வைத்தீஸ்வரன் ஆகிய பிரபல ரவுடிகளை கைது செய்தனர். அதேபோன்று கிச்சிபாளையம் போலீசார் நடத்திய சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த செந்தில், பிரபாகரன், சரவணன், திருநாவுக்கரசு, தமிழ்செல்வன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
அதேபோன்று அஸ்தம்பட்டி போலீசாரின் சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரை கைது செய்தனர். சூரமங்கலம் போலீசாரின் சோதனையில் புருசோத்தமன், செல்வன் என மாநகர் பகுதி முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் 37 ரவுடிகள் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்