search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gangster"

    • ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
    • இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • 22 கொலைகளில் தொடர்புடைய கேங்ஸ்டர் ஒருவருக்கு 945 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    எல் சால்வடோர் நாட்டில் கொலை உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கேங்ஸ்டர் கும்பல் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

    அவ்வகையில், மாரா சல்வத்ருச்சா என்ற கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த வில்மர் செகோவியா என்ற குற்றவாளிக்கு 1310 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் மீது 33 கொலைகள், 9 கொலை சதிகள் மற்றும் ஆபத்தான குற்றச் செயல்கள் உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த நீண்டகால தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    22 கொலைகள் மற்றும் பல கொலை முயற்சிகள், தாக்குதல்கள், தீவைத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய கேங்ஸ்டர் மிகுவல் ஏஞ்சல் போர்ட்டிலோவுக்கு 945 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், மெய்யழகி, நகர்வலம் ஆகிய படங்களில் நடித்த யுதன் பாலாஜி தற்போது கேங்ஸ்டராக நடித்துள்ளார். #YuthanBalaji #VellaRaja
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் தன்னுடைய தனி திறமையால் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இதைத் தொடர்ந்து ‘பட்டாளம்’ படத்தில் நடித்திருந்தார். பின்னர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகருக்கான அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ‘மெய்யழகி’, ‘நகர்வலம்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி தற்போது, இணைய தொடரில் (வெப் சீரிஸ்) களமிறங்கியுள்ளார்.

    பாலிவுட் பிரபலங்கள் பலரும் தற்போது வெப் சீரிஸில் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அதுபோல் கோலிவுட்டிலும் நடிகர்கள் ஆர்வம் காண்பிக்க தொடங்கி இருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி எனத் திரையுலகில் பிசியாக வலம் வரும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ‘வெள்ள ராஜா’ என்ற புதிய இணைய தொடரில் நடித்துள்ளனர். இதில் யுதன் பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த இணைய தொடரில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். அவருடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யுதன் பாலாஜி நடித்துள்ளார். 



    இணைய தொடரில் நடிப்பது குறித்தும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் யுதன் பாலாஜி கூறும்போது, ‘வெள்ள ராஜா’ என்ற இணைய தொடரில் 2வது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இளைஞர்கள் அதிகமாக இணைய தொடரை விரும்பி பார்க்கவும், இயக்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கும் இணைய தொடரில் நடிக்க விருப்பம் இருந்தது. சவாரி படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் ‘வெள்ள ராஜா’ பற்றி சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்தது. உடனே நடிக்க சம்மதித்தேன்.

    என்னுடைய முழு திறமையை நிரூபிக்க காத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘வெள்ள ராஜா’ கிடைத்தது மிகவும் சந்தோஷமான விஷயம். அதுவும் அமேசான் பிரைம் என்ற பெரிய நிறுவனம் தயாரிப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 

    பாபி சிம்ஹாவிற்கு வலது கையாக இதில் நடித்திருக்கிறேன். திரைப்படத்திற்கும் இணைய தொடருக்கும் பெரிய வேறுபாடு எனக்கு தெரியவில்லை. சொல்லபோனால், படத்தை விட இந்த இணைய தொடரை பெரும் பொருட் செலவில் எடுத்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தை விட ஒரு படி மேலேயே வெள்ள ராஜா தொடரை இயக்கி இருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி, காயத்ரி, காளி வெங்கட் ஆகியோருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.



    என்னை இதுவரை கதாநாயகனாக பார்த்திருக்கிறார்கள். ஆனால், எனக்கு நிறைய திறமையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் என்னுடைய திறமையையும், முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன். எந்த கதாபாத்திரம் என்றாலும் நான் நடிப்பேன் என்பதை நிரூபிப்பதற்காக இதில் நடித்திருக்கிறேன்.

    பாலாஜி என்றால், துறுதுறுவென இருக்கும் இளைஞன், சிறுவன், சிறப்பாக நடனம் ஆடுவான் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அதை உடைப்பதற்காகவே கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன். என்னுடைய திறமையை உணர்ந்து இயக்குனரும் சிறப்பாக என்னிடம் வேலை வாங்கினார். சாதாரண ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த ‘வெள்ள ராஜா’வில் இருக்கிறது’ என்றார்.
    சேலம் மாநகரில் 37 ரவுடிகள் உள்பட 57 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் நின்று கொண்டு ரோட்டில் நடந்து செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

    சேலம் மாநகரில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ரவுடிகளை ஒடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம், பொதுமக்கள் பல்வேறு புகார்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ரவுடிகளை பிடிக்க கோரி துணை கமிஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர்கள் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரவுடிகளை பிடிக்க சேலத்தில் அதிரடி வேட்டையில் இறங்கினர்.

    அதன்படி அன்னதானப்பட்டி போலீசார் நடத்திய வேட்டையில் வள்ளுவர் நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜவகர் (வயது42), மணியனூர் காந்திநகரை சேர்ந்த ஜெரால்டு (27), அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் (44), வைத்தீஸ்வரன் ஆகிய பிரபல ரவுடிகளை கைது செய்தனர். அதேபோன்று கிச்சிபாளையம் போலீசார் நடத்திய சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த செந்தில், பிரபாகரன், சரவணன், திருநாவுக்கரசு, தமிழ்செல்வன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    அதேபோன்று அஸ்தம்பட்டி போலீசாரின் சோதனையில் அந்த பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரை கைது செய்தனர். சூரமங்கலம் போலீசாரின் சோதனையில் புருசோத்தமன், செல்வன் என மாநகர் பகுதி முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் 37 ரவுடிகள் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர். 
    ×