என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது.
    • ரூ.3 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், தங்கம், கணக்கில்காட்டப்படாத பணம், மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் விட அவரது வீட்டில் உள்ள குளத்தில் இருந்த 3 முதலைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.155 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் தவிர ரூ.3 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, சோதனை நடைபெற்ற ரத்தோர் வீட்டில் உள்ள ஒரு சிறிய குளத்தில் மூன்று முதலைகள் காணப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொழிலதிபரும், பாஜக மூத்த தலைவருமான ரத்தோர், 2013 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தந்தை ஹர்னாம் சிங் ரத்தோர், மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம்.
    • சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறைச்சாலை உள்ளது. 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம். ஆனால் தற்போது 3,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடையவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு பன்னடுக்கு உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சிறைச்சாலையின் பி பிளாக் கட்டிடம் அருகே சுமார் 40 கிராம் எடையுள்ள கருப்பு நிற டிரோன் கிடந்ததை, சிறை சூப்பிரண்டு ராகேஷ் குமார் பாங்க்ரே கண்டுபிடித்தார்.

    இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளும், நிபுணர்களும் அங்கு வந்து, அந்த டிரோனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது. போலீசார் அதனை கைப்பற்றி காந்தி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    உயர் பாதுகாப்பு பகுதியான சிறைச்சாலைக்குள் சீன டிரோன் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி சிறைத்துறையினர் கூறுகையில், சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை. அது தரையிறங்குவதை யாரும் பார்க்கவில்லை. சிறைச்சாலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

    போபால் மத்திய சிறைச்சாலைக்குள் சீன டிரோன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானே வன்கொடுமை செய்துள்ளார்.
    • அவர்கள் அறையை அடைந்ததும், சஞ்சய் கதவை மூடினார்

    மத்தியப் பிரதேசத்தில் இறுதியாண்டு பயின்று வந்த எம்பிபிஎஸ் மாணவி மூத்த மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த அம்மாணவியை விடுதியில் வைத்து மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானே வன்கொடுமை செய்துள்ளார்.

    தகவலின்படி, டாடியாவைச் சேர்ந்த 25 வயது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவி துணைத் தேர்வுக்கு பின் கல்லூரியில் அவரது மூத்த மருத்துவர் சஞ்சய் குமார் இவானைச் சந்தித்தார்.

    அப்போது மாணவியை எதோ வேலை கூறி ஆண்கள் விடுதியில் உள்ள தனது அறைக்கு சஞ்சய் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் அறையை அடைந்ததும், சஞ்சய் கதவை மூடிவிட்டு, மாணவியை தள்ளிவிட்டு வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

    இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அடுத்த நாள் பாதிக்கப்பட்ட பெண் கம்பூ காவல் நிலையத்திற்குச் சென்று அவர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தலைமறைவான டாக்டர் சஞ்சய் குமாரை தேடி வருகின்றனர். 

    • வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக என்று தெரிவித்தார்.

    டிஜிட்டல் கைது மோசடியால் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்சில் சேர்ந்த அரசு கெஸ்ட் ஆசிரியர் ரேஷ்மா பாண்டே [35 வயது] கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விஷம் அருந்தி உயிரிழந்தார்.

    ஆசிரியை அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி இணைய மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் கைது செய்யபோவதாக அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ரஸ்னா தாக்கூர் தெரிவித்தார்.

    மோசடிக்காரர்கள் அவரிடம் பணம் கேட்டனர். அவர் விஷத்தை உட்கொண்ட பிறகு, அவரது உறவினர்கள் அவரை ரேவாவில் உள்ள சஞ்சய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இறந்தவரின் மைத்துனர் வினோத் பாண்டே கூறுகையில், சைபர் மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 22,000 மற்றும் ரூ. 5,500 தொகையை ஆசிரியை பரிமாற்றம் செய்ததாகக் கூறினார். மேலும் பணத்தை செலுத்தாவிட்டால் டிஜிட்டல் கைது செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர், இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக தெரிவித்தார்.

    சைபர் மோசடி, டிஜிட்டல் கைது மற்றும் பிற வகையான இணைய மோசடிகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியை தற்கொலை சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது

    • பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது.
    • 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தூரில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவருகின்றனர். பிச்சைக்காரர்களை அகற்றுவதற்கான இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மக்கள் தங்கள் பகுதிகளில் பிச்சை கேட்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்க முன்வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறுகையில், "பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட எண்ணில் சுமார் 200 பேர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் கொடுத்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

    பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

    இந்தூரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்தூர் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் கனவுத் திட்டத்தை மத்திய சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ம.பியில் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன.
    • இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன.

    இதுதொடர்பாக சிங்ராலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ்குமார் வர்மா கூறியதாவது:

    மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் செப்டிக் டேங்கில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது.

    செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டேங்கில் கிடந்த 4 உடல்களை மீட்டனர்.

    இறந்தவர்களில் ஒருவர் வீட்டு உரிமையாளர் ஹரிபிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30). மற்றொருவர் கரண் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    முதல்கட்ட விசாரணையில், சுரேஷ் மற்றும் கரண் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஒரு விருந்துக்கு ஜனவரி 1-ம் தேதி வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வளாகத்தில் கொல்லப்பட்டு உடல்கள் செப்டிக் டேங்கில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    செப்டிக் டேங்கில் 4 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கார்பைடு தொழிற்சாலை கழிவுகளை போபாலில் இருந்து பிதாம்பூருக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
    • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் தடியது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984-ம் ஆண்டு கார்பைடு தொழிற்சாலையில் இருந்து வெளியான விசவாயுவால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 வருங்கடகளாக நச்சுக் கழிவு அங்கேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை தொழிற்சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவை 12 கண்டெய்னர்கள் மூலம் தார் நகரில் உள்ள பிதாம்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு 12 பிரத்யேக கண்டெய்னர்கள் மூலம் பிதாம்பூர் கொண்டு செல்லப்பட்டது. அதேவேளையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது என்ன நியாயம்?. அதை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரும்பால அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில் நச்சுக் கழிவை பிதாம்பூருக்கு மாற்றியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர்.

    இதனால் போராட்டம் நடந்த இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. தனியாக மாட்டிய இளைஞர்களை போலீசார் லத்தியால் மிகக்கொடூரமாக தாக்கினர். இச்சம்பவம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிதாம்பூரில் கழிவுகளை எரிக்கும் மிக அதிநவீன ஆலை உள்ளது. இந்த ஆலையில்தான் நச்சுக் கழிவு எரிக்கப்பட இருக்கிறது. ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால் 153 நாட்களில் முற்றிலுமாக அழிக்க முடியும். வேகத்தை மணிக்கு 270 கி.மீ. என அதிகரித்தால் 51 நாட்கள் ஆகும்.

    • 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவு 12 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு அகற்றம்.
    • பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலையில் பாதுகாப்பாக எரிக்கப்பட இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு திடீரென விசவாயு கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டது.

    ஆனால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது. நச்சுக் கழிவை பாதுகாப்பாக இங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

    250 கி.மீ. தூரம் க்ரீன் காரிடாரில் கண்டெய்னர் லாரிகள் பயணிக்கிறது. ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புடன் நச்சுக் கழிவுகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகிறது. 50 போலீசார் பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்கின்றனர்.

    இதற்காக 12 கண்டெய்னர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். 30 நிமிட ஷிஃப்ட் முறையில் பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கவசங்களுடன் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பிதாம்பூருக்குப் பதிலாக வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலை மிக அதிநவீன ஆலை ஆகும். ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால் 153 நாட்களில் முற்றிலுமாக அழிக்க முடியும். வேகத்தை மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் அழித்தால் 51 நாட்கள் ஆகும்.

    • இந்தியா முழுவதும் வயது அதிகமானவர்களின் கால்களின் இளையவர்கள் விழுந்து வணங்குவது வழக்கம்.
    • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக வீரேந்திர குமார் உள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலம் திக்மார்க் மக்களவை தொகுதியில் வென்று மத்திய அமைச்சரானவர் வீரேந்திர குமார்.

    1996 ஆம் ஆண்டிலிருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வரும் வீரேந்திர குமார் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியை சந்தித்ததில்லை. 1996 ஆம் ஆண்டு சாகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி. ஆன வீரேந்திர குமார் 2009, 2014, 2019, 2024 ஆகிய 4 மக்களவை தேர்தலிலும் திக்மார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், திக்மார்க் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் தன்னை பார்க்க வருபவர்கள் யாரும் தனது காலில் யாரும் விழ கூடாது என்று வீரேந்திர குமார் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

    மேலும், "யாரவது எனது காலை தொட்டு வணங்கினால் அவர்களுக்கு எந்த வேலையும் யாரும் செய்து தரக்கூடாது" என்று வீரேந்திர குமார் கறாராக உத்தரவிட்டுள்ளார்.

    பாஜக அரசின் அமைச்சரவையின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருக்கும் வீரேந்திர குமார், சமூக நீதியின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    இந்தியா முழுவதும் வயது அதிகமானவர்களின் கால்களின் இளையவர்கள் விழுந்து வணங்குவது வழக்கம். அதே சமயம் ஒருவரின் காலில் இன்னொருவர் விழக்கூடாது, அது சுயமரியாதைக்கு இழுக்கு என்று தமிழ்நாட்டில் சில தரப்பினர் கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்
    • இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குடிபோதையில் நடந்த சிறு தகராறு கொடூர கொலையில் முடிந்துள்ளது. 

    வினோத் ரத்தோர், 35, நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, பிரமோத் சாய் யாதவ், 29, அவரை பின்னால் இருந்து வந்து தரையில் தள்ளினார்.

    வினோத் மீது பிரமோத் கத்தியால் தாக்கினார். வினோத் வலியால் துடித்தபோது, பிரமோத் தொடர்ந்து கத்தியால் குத்தினார், இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்

    கொலைக்குப் பிறகு பிரமோத், குல்கர்னி  தனது வீட்டிற்கு தப்பிச் சென்றார், அங்கு உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிரமோத் குற்றத்தின் போது தானும் வினோத்தும் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.

    சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, வினோத், பிரமோத்தை மடிக்கக்கூடிய கத்தியால் தாக்கியதில், அவரது விரலில் லேசான காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரமோத், கத்தியை பறித்து, வினோத்தை குத்தி கொலை செய்துள்ளார்.

    இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மடிப்பு கத்தியை பறிமுதல் செய்து பிரமோத் மீது பிஎன்எஸ் பிரிவு 103 இன் கீழ் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • ரெயிலில் இரு பெட்டிகளுக்கு நடுவேயான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டுஅவர் பயணித்துள்ளார்.
    • S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் அவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர்.

    மத்திய பிரதேசத்தில் ரெயிலுக்கு டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் நபர் ஒருவர் ரெயிலுக்கு அடியில் 290 கிலோமீட்டர் தொங்கியபடி பயணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் இடார்ச்சி நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை சுமார் 290 கிலோமீட்டர் தூரம் ரெயிலில் இரு பெட்டிகளுக்கு நடுவேயான சக்கர பகுதியில் ஒளிந்து கொண்டுஅவர் பயணித்துள்ளதாக கூறப்பட்டது. 

    ஜபல்பூர் ரெயில் நிலையம் அருகே கேரேஜ் மற்றும் வேகன் (C&W) துறை ஊழியர்கள் நடத்திய ரோலிங் சோதனையின் போது ரெயிலின் S4 கோச்சின் கீழ் ஆபத்தான முறையில் அவர் பதுங்கியிருந்ததை ஊழியர்கள் கண்டனர்.

    அவர் ரயிலுக்கு அடியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்பிஎஃப் அதிகாரிகள் உடனடியாக சம்பவ விரைந்து அந்த நபரை காவலில் எடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் சக்கர அச்சு தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும்போது அதில் உட்காந்து பயணிக்க முடியாது என பிஐபி உண்மை கண்டறியும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • கடந்த 2013-ம் ஆண்டு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது
    • இந்த வழக்கில் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரத்தில் அமைந்துள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தையும், அப்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியவருமான வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னம், வங்கி அதிகாரிகளின் கடவுச்சொற்களை (PASSWORD) பயன்படுத்திக் கடந்த 2013-ம் ஆண்டு மோசடி செய்துள்ளார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவும் அதே வங்கியில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×