என் மலர்tooltip icon

    கேரளா

    • குருவாயூர் கோவிலில் நடக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார்.
    • பிரதமர் வரும் 17-ந்தேதியன்று குருவாயூர் கோவிலில் 65 திருமணங்கள் நடக்கின்றன

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ந்தேதி கேரள மாநிலத்திற்கு வந்தார். ரோடு-ஷோ மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட 2 லட்சம் பெண்கள் கலந்து கொண்ட மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

    இந்நிலையில் இந்த ஆண்டு 2-வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் கேரளா வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக அவர் வருகிற 16-ந்தேதி கொச்சிக்கு வருகிறார். எம்.ஜி. ரோட்டில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரை ரோடு-ஷோ செல்கிறார்.

    பின்னர் அன்று மாலை 5 மணிக்கு கொச்சி கடற்படை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்பு கொச்சியில் இரவில் நடக்கும் ரோடு-ஷோவிலும் அவர் பங்கேற்கிறார். மறுநாள் (17-ந்தேதி) காலை ஹெலிகாப்டரில் குருவாயூருக்கு பிரதமர் மோடி செல்கிறார். 

    பின்பு குருவாயூர் கோவிலில் நடக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார். அது மட்டுமின்றி குருவாயூர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார். காலை 6 மணிக்கு குருவாயூர் கோவிலுக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி 9 மணி வரை அங்கு இருப்பார் என தெரிகிறது.

    பிரதமர் மோடி வந்து செல்லும் வரை குருவாயூர் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 9 மணிக்கு பிறகு பிரதமர் புறப்பட்டு சென்ற பிறகே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் பிரதமர் வரும் 17-ந்தேதியன்று குருவாயூர் கோவிலில் 65 திருமணங்கள் நடக்கின்றன. அவற்றில் பல திருமணங்கள் காலை நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி வருவதால் காலையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருமணங்களை வேறு நேரத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி 39 திருமணங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அந்த திருமணங்கள் காலை 5 மணி முதல் 6 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் மேலும் 9 திருமணங்கள் என மொத்தம் 48 திருமணங்கள் நடக்க உள்ளன. மற்ற திருமணங்கள் பிரதமர் மோடி வந்துசென்றதும் காலை 9.30 மணிக்கு பிறகு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    மகரவிளக்கு தினத்திலும் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி) முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று (13-ந்தேதி) மதியம் புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த திருவாபரணங்கள் நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    • இன்று திருவாபரண ஊர்வலம்.
    • நாளை மறுநாள் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்கிடையே அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நேற்று நடந்தது.

    மத ஒற்றுமைக்கு சான்றாக பக்தர்கள் அனைவரும் சமம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு இலை தழைகளை கையில் ஏந்தியவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    அப்போது மேள தாளம் முழங்க, ஐயப்பனின் சரண கோஷமும் எதிரொலித்தது. எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து வாவர் மசூதியை சுற்றி நெற்றிப்பட்டம் சூட்டிய யானையில், அம்பலப்புழை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட ஐயப்ப விக்ரகத்தை சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து வலியம்பலமான தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் பக்தர் குழுவினர் சபரிமலைக்கு புனித பயணம் புறப்பட்டனர்.

     பின்னர் ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான பம்பை விருந்து, பம்பை விளக்கு ஏற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து பக்தர் குழுவினர் சபரிமலை நோக்கி மலையேறி சென்று அன்றைய தினம் இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்கள். மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு பக்தர் குழு சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இன்று திருவாபரண ஊர்வலம்

    இதற்கிடையே இன்று (சனிக்கிழமை) பந்தளத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்படும். இந்த திருவாபரணம் நாளை மறுநாள் மாலையில் மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். மகரவிளக்கு தினத்தன்று காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மகரவிளக்கு பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள், முந்தைய நாளில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார்.
    • சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலில் ஏகாதசி தினத்தன்று கிருஷ்ணருக்கு மோகினி அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரத்தில் கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார். இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு இந்த நிகழ்வு நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சந்தன பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது.

    சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் ஏகாதசிக்கு தேவையான சந்தனம் முன்னதாகவே அரைத்து வைக்கப்பட்டது. ஆனால் அது போதுமானதாக இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகழ்வு திடீரென நிறுத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம் போர்டு எடுத்தது.

    அதன்படி நேற்று முன்தினம் (10-ந்தேதி) முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. இதன் காரணமாக கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு 16-ந்தேதி 50 ஆயிரம் பேருக்கும், 17 முதல் 20-ந்தேதி வரை தினமும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சன்னிதானத்துக்கு செல்வதற்காக 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மகரஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் பாண்டித்தாவளம், குடிநீர் தொட்டியின் முன்பகுதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன்பகுதி, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் வடக்கு பக்கம், கொப்பரைக்களம், சன்னிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புரம் கோவிலின் சுற்றுப்பகுதிகள், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபத்தின் முன்பகுதி உள்பட 10 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த இடங்களில் இருந்து பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்யலாம். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும் தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எந்த பக்தர்களையும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

    • "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" செலவினங்களில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பு
    • டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ரூ.7 கோடி நிலுவையில் உள்ளதாக வீணா தெரிவித்தார்

    நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மத்திய அரசின் நிதியாலும் மாநில அரசின் நிதியாலும் கூட்டாக இயங்கி வருபவை.

    கேரளாவில் "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என செயல்படும் இம்மையங்களின் செலவினங்களில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன.

    இந்நிலையில், இந்த மருத்துவ மையங்களை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசாங்கம் வற்புறுத்துவதாகவும், அதனை கேரள அரசு மறுப்பதால், தர வேண்டிய நிதியை தர மறுப்பதாகவும் கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    முதலில் நிதியை நிறுத்தி வைத்து தர மறுத்தனர். பிறகு மத்திய அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக இம்மையங்களில் பெயர் பலகைகள் இடம் பெற வேண்டும் என்றனர்.

    ஆனால், தற்போது நிதியை கேட்டால், பெயரை "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என மாற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர்.

    நிதி இல்லாததால் அனைத்து சுகாதார பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

    அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சைகள் கிடைப்பது கடினமாகிறது.

    டயாலிசிஸ் சிகிச்சைக்கு மட்டுமே ஆன செலவு தொகை ரூ.7 கோடி மத்திய அரசால் இன்னமும் வழங்கப்படவில்லை.

    மேலும், இத்திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட மருத்துவர்களுக்கும் இன்னமும் ஊதியம் வழங்க முடியவில்லை.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும், தேசிய சுகாதார இயக்கம், "பிரதான் மந்திரி சமக்ர ஸ்வாஸ்த்ய மிஷன்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் வீணா தெரிவித்தார்.

    கேரள மக்களின் கலாச்சாரம் மற்றும் மாநில மொழியுடன் பொருந்தாமல் இருப்பதாலும், கிராமப்புற மக்களுக்கு புரியாத வகையில் உள்ளதாலும், பெயர் மாற்றத்திற்கு கேரள அரசு சம்மதிக்கவில்லை.

    • பெட்டியை பிரிக்கும் போது அதில் இருக்கும் பொருளை பார்த்து மணமக்கள் ஆச்சரியம் அடைகிறார்கள்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திருமணத்தின் போது மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் மற்றும் தோழிகள் சில வித்தியாசமான பரிசுகளை வழங்குவதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.

    அதில், மணமகனின் நண்பர்கள் சிலர் மணமேடைக்கு பெரிய பெட்டி ஒன்றை தூக்கி வருகிறார்கள். அந்த பெட்டியை பிரிக்கும் போது அதில் இருக்கும் பொருளை பார்த்து மணமக்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். அதாவது மணமகன் கார் ஆர்வலராக இருந்துள்ளார்.

    எனவே அவருக்கு அவரது நண்பர்கள் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களை பரிசாக வழங்கி உள்ளனர். இந்த பரிசை பார்த்த மணமகன் மட்டுமல்லாது மணமகளும் ஆச்சரியப்பட்டு புன்னகைக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.

    இந்த நிகழ்வு கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. வீடியோ வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவின் பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நாளை நடக்கிறது.
    • மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறினர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்தது. அதன்படி நேற்று முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டதால் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்படுகிறது.


    அதே நேரத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.16-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 17 முதல் 20-ந்தேதி வரை தினமும் 60 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவின் பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நாளை நடக்கிறது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அதே நேரத்தில் மகர விளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை மறுநாள் (13-ந்தேதி) புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. திருவாபரணத்தை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.

    • தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
    • வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நாளை மறுநாள் (ஜனவரி 13) வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு இல்லாத பக்தா்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மகர விளக்கு பிரசாத சுத்திக் கிரியைகள் நடைபெற உள்ளன.

    ஜனவரி 14-ந்தேதி உஷ பூஜைக்கு பிறகு பிம்ப சுத்தி பூஜை நடைபெற உள்ளது. ஜனவரி 15-ந்தேதி முன்பதிவு செய்த 40 ஆயிரம் போ் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.

    மகரவிளக்கு பூஜைக்காக திங்கட்கிழமை(வருகிற15) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னா் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, வருகிற15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருவாபரணத்தை ஐயப்பனுக்கு சாா்த்தி மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னா் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.

    மேலும் வருகிற15-ந் தேதியிலிருந்து வருகிற18-ந்தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊா்வலம் நடைபெற உள்ளது. வருகிற 18-ந்தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜனவரி 19-ந்தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.


    வருகிற 20-ந்தேதி அன்று மாளிகைப் பரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது. வருகிற 21-ந் தேதி காலையில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். பின்னா் பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

    பொங்கல் விடுமுறையையொட்டி 2 நாட்களுக்கு பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறை தினங்கள் என்பதாலும், அடுத்த 10 நாட்களில் மகர விளக்கு சீசன் நிறைவடைய இருப்பதாலும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி 50 ஆயிரம் பேரும், 15-ந்தேதி 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்காக இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும்.

    கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்விரு நாட்களிலும் குழந்தைகள், பெண்கள் வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தேவசம்போர்டு முடிவு செய்தது.
    • மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பக்தர்கள் வருகை இன்றும் அதிகமாக காணப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    மண்டல பூஜை சீசனைப் போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தார்கள். தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.


    இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் திணறி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பதினெட்டாம்படி பகுதியிலேயே தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களை போலீசார் தாக்கினர். அவர்கள் சன்னிதான ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் சபரிமலைக்கு வந்த பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவை நிறுத்துவது, 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 2 நாட்களும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை குறைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

    அந்த முடிவின்படி உடனடி முன்பதிவு நிறுத்தம் இன்று அமலுக்கு வந்தது. இதனால் நிலக்கல்லில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு மையம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களை தவிர மற்றவர்கள் வராமல் இருப்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பக்தர்கள் வருகை இன்றும் அதிகமாக காணப்பட்டது. இதனால் சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பதினெட்டாம்படி மற்றும் சன்னிதான பகுதியில் நெரிசல் காணப்பட்டது.

    உடனடி முன்பதிவு நிறுத்தம் வருகிற 15-ந்தேதி வரை அமலில் இருக்கும். மகரவிளக்கு பூஜை முடிந்ததும் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை உடனடி முன்பதிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆக்‌ஷன் ஹீரோவாக பல வெற்றி படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி
    • பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சரும் பங்கேற்கலாம் என தெரிகிறது

    மலையாள திரையுலக முன்னணி நடிகர்களாக பல தசாப்தங்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.

    ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், குணசித்திர வேடங்களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி.

    65 வயதாகும் அவர், சில வருடங்களாக நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

    2016ல் ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக பாராளுமன்றம் சென்றார்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்.

    சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கும் தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவின் புகழ் பெற்ற இந்து கோயிலான குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வரும் 17 அன்று திருமணம் நடைபெற உள்ளது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் (Greenfield Stadium) ஜனவரி 20 அன்று நடைபெறும்.

    இந்நிலையில், தங்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்குமாறு சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.

    இதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

    முன்னதாக மோடி, காலை 08:00 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பிறகு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்கிறார்.

    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருமணத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என சில நாட்களாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

    அஜித் நடித்த "தீனா", சரத்குமார் நடித்த "சமஸ்தானம்", விக்ரம் நடித்த "ஐ" உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் சுரேஷ் கோபி.

    • போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.
    • கைது செய்தவர்கள் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்கும் நவ கேரளா சதாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து கேரள மாநில இளைஞர் காங்கிரசார் மற்றும் மாணவர் காங்கிர சார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    கடந்த மாதம் 20-ந்தேதி அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து வன்முறையை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.எல்.ஏ.க்கள் ஷாபி பரம்பில், வின் செண்ட், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசாரின் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தது, அதிகாரிகளை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகளின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனம் திட்டா ஆத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×