search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makarajyothi Darshan"

    • திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    மகரவிளக்கு தினத்திலும் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி) முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று (13-ந்தேதி) மதியம் புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த திருவாபரணங்கள் நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    • மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நடைதிறப்பு.
    • நேற்று களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.நேற்று சன்னிதானம் பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.

    ×