search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏகாதசி விழாவில் கிருஷ்ணருக்கு மோகினி அலங்காரம் செய்யும் நிகழ்வு நிறுத்தம்
    X

    ஏகாதசி விழாவில் கிருஷ்ணருக்கு மோகினி அலங்காரம் செய்யும் நிகழ்வு நிறுத்தம்

    • கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார்.
    • சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் பத்மநாப சுவாமி கோவில். இந்த கோவிலில் ஏகாதசி தினத்தன்று கிருஷ்ணருக்கு மோகினி அலங்காரம் செய்யப்படும். அந்த அலங்காரத்தில் கிருஷ்ணருக்கு புடவை அணிவிக்கப்பட்டு மயக்கும் மோகினியாக அலங்கரிக்கப்படுவார். இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு இந்த நிகழ்வு நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சந்தன பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது.

    சந்தனம் அரைப்பதற்கான இயந்திரம் பழுது பார்க்க கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் ஏகாதசிக்கு தேவையான சந்தனம் முன்னதாகவே அரைத்து வைக்கப்பட்டது. ஆனால் அது போதுமானதாக இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகழ்வு திடீரென நிறுத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×