என் மலர்
டெல்லி
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்கவில்லை.
- ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் "சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கும். பொருட்கள் மூலமாக மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்துவது மட்டுமே நிறுவனத்தின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
- அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.
- டெல்லி உயர்நீதிமன்றம் சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க மறுத்துவிட்டது.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
தனக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 7-வது மற்றும் 8-வது முறையாக சம்மன் அனுப்பியபோது நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதற்கிடையே 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.
அதில் விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டாம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்படும். அதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
ஒன்பது சம்மனுக்கும் எதிராக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வக்கீல் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜரானால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.
இருந்தபோதிலும், சம்மன் அனுப்பியதற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் கேட்டுக்கொண்டதுடன் வழக்கை ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதனைத் தொடர்ந்துதான் கெஜ்ரிவால் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
- உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது.
- நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் என்.டி.டிவி.-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது. உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது. உச்சநீதிமன்றத்தில் சிறிய வழக்கு என்று ஏதும் கிடையாது.
உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதித்துறைகளையும் ஆண்கள் மற்றும் பெண்கள் எளிதாக தொடர்பு கொள்வதை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.
சில நேரங்களில் எனக்கு நள்ளிரவில் கூட இ-மெயில் வந்துள்ளது. ஒரு முறை பெண் ஒருவர் மருத்துவ கருக்கலைப்பு தேவை எனக் கூறியிருந்தார். என்னுடைய ஸ்டாஃப்கள் என்னை தொடர்பு கொண்டனர். நாங்கள் அடுத்த நாள் அதற்கான பெஞ்ச் அமைத்தோம்.
சிலர் வீடு இடிக்கப்பட்டிருக்கலாம், சிலர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம், சிலர் சரணடைய வேண்டிய நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கலாம்... இதுபோன்ற இதயத்தை நொறுக்கும் வழக்குகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றன.
எந்த வழக்கும் சிறிய வழக்கு என்று கிடையாது. நாங்கள் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துகிறோம். சாமானிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் நோக்கம். யார் ஆட்சியில் இருந்தாலும், சாதாரண மக்களுக்கு கவலைகள் உள்ளன, சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
சமானிய மனிதன் எந்தவொரு பிரச்சனையை சந்தித்தாலும், முதலில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள நீதிபதிகளை சந்திப்பது முக்கியமானது என்று நினைத்தேன். மாவட்ட அளவிலான நீதிமன்றங்களை வலுப்படுத்தும்போது, நீதித்துறையுடன் மக்கள் தொடர்பை வலுப்படுத்துகிறோம்.
இவ்வாறு டி.ஓய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
- இதுபோன்ற தகவல்களை உண்மை கண்டறியும் குழு சரிபார்க்கும்.
புதுடெல்லி:
மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை இந்த குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என அறிவித்து விட்டால் அந்தப் பதிவை சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.
அப்படி இல்லை எனில் அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோடி நாளை பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது
- பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இம்மாத துவக்கத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார்
பிரதமர் நரேந்திர மோடி நாளை பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இம்மாத துவக்கத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறேன் என்றார்.
- டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த 4 வாரமாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், மகா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறேன். டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் நலம்பெற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் பேசினேன். அப்போது அவர் பூரண நலத்துடன் இருக்கவேண்டும். விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.
- மத்திய மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.
- மத்திய மந்திரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்தது.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பா.ஜ.க. சார்பில் நடந்த போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா பங்கேற்றார். போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஷோபா, பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள்மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
மத்திய மந்திரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
அவரது கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புகார் மீது கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
- மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தொடர்ந்து நாட்டிற்கு எதிரான எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் பரப்பி தவறாக வழிநடத்தி வருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "இந்திய வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். தங்களை யார் சரியாக வழி நடத்துகிறார்கள்? தவறாக வழி நடத்துகிறார்கள்? என்று அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்" என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
- உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
- இதுதொடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
சுவிட்சர்லாந்தில் உள்ள காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர் உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. 2023ம் ஆண்டுக்கான காற்று தர அறிக்கையை நேற்று வெளியானது. அதில் உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது என தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
இன்றைய குழப்பமான தேசிய தலைப்புச் செய்திகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க நான் எழுதுகிறேன். டெல்லி-உலகின் மிகவும் மாசுபட்ட-மறுபடியும் மோசமான தலைநகரம்.
வரும் மாதங்களில் நீங்கள் சில உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இந்த முக்கிய பிரச்சனைகளை சரிசெய்வதற்கான உங்கள் திட்டங்களை டெல்லி மக்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அசாம் எம்.பி. அப்துல் காலிக் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார்.
- அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 எம்.பி. தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தனர். அதில் 2 பேருக்கு வரும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
பார்பேட்டா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான அப்துல் காலிக்குக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக தீப் பயான் என்பவரை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கியது.
அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறைஎம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த அப்துல் காலிக், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், அசாம் எம்.பி.யான அப்துல் காலிக், காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த அப்துல் காலிக், காங்கிரசை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. எனவே எனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். ராகுல் காந்தி மற்றும் உங்களின் திறமையான தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரிடம் ரூ. 20 லட்சம் லஞ்சம வாங்கியபோது கைது.
- கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
பின்னர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமும் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடைய ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அனுமதி பெறாமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது, சாட்சியங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது, சாட்சியங்களை அழிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.






